உண்மையாகவே கடுமையான குழப்பத்தில் உள்ளீர்கள் என்பது புரிகிறது. எதிர்மறையான சிந்தனை உங்கள் மனதை ஆக்கிரமித்திருக்கிறது. விசாகம் நட்சத்திரம், விருச்சிக ராசி, துலாம் லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகப்படி தற்போது புதன் தசையில் சந்திர புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் உத்யோகத்தைப் பற்றிச் சொல்லும் 10ம் வீட்டிற்குரிய அதிபதி சந்திரன் நீசம் பெற்றிருந்தாலும் 2ம் வீடாகிய தன ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது நற்பலனைத் தரும். லக்னாதிபதியும், தனகாரகனுமாகிய சுக்கிரனும் 2ல் இணைந்திருப்பதால் ஏதேனும் ஒருவகையில் தனலாபம் தொடர்ந்து கொண்டிருக்கும்.
நிரந்தரமாக வேலை பார்க்கும் யோகம் உங்களுக்கு உண்டு. அரசுப் பணிக்காகக் காத்திருக்காமல் தனியார் துறையிலேயே வேலை அமைத்துக் கொள்ளுங்கள். திருமணம் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டில் செவ்வாய் இருந்தாலும், தனது சொந்த வீடான மேஷத்தில் ஆட்சி பலத்துடன் அமர்ந்திருப்பதால், செவ்வாய் தோஷம் கிடையாது. செவ்வாய் தோஷம் இல்லாத வரனாகவே பார்க்கலாம். திருமணத்திற்காக கடுமையாக முயற்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
14.03.2019ற்குப் பின் வரன் தேடி வரும். தென்திசையில் உள்ள ஊரைச் சேர்ந்தவராகவும் சுயதொழில் செய்பவராகவும் மாப்பிள்ளை அமைவார். திருப்பரங்குன்றம் சுப்ரமணிய ஸ்வாமி ஆலயத்திற்குச் சென்று உங்கள் பெயரில் அர்ச்சனை செய்வதோடு உங்கள் திருமணத்தையும் அதே ஆலயத்தில் நடத்துவதாக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். வரும் வருடத்தில் உங்களது மணவாழ்வு நல்லபடியாக அமைந்து சிறப்பாக வாழ்வீர்கள். குழப்பங்களை விடுத்து இறைவனை நம்புங்கள். இறைவனை நம்பியவர்கள் என்றுமே கெடுவதில்லை.
புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். புதுப்பொருள் சேரும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். எதையும் சாதிக்கும் நாள்.