2, 11, 20, 29
27.7.2017 முதல் 13.2.2019 வரை
மனதுக்கு அதிபதியான சந்திரனை நாயகனாகக் கொண்ட இரண்டாம் எண் அன்பர்களே, நீங்கள் மனசாட்சிக்கு விரோதமான காரியத்தை எக்காலத்திலும் செய்ய மாட்டீர்கள். அன்பு, அடக்கம், பணிவு, பொறுமை, சகிப்புத்தன்மை ஆகியவற்றின் பிரதிநிதியாக இருப்பீர்கள். மக்களால் வெகுவாகப் போற்றப்படுவீர்கள். அனைவரையும் அன்பு எனும் ஆயுதத்தால் அடக்கி விடுவீர்கள். ஆராய்ச்சி எண்ணம் அதிகம் உடையவர்கள். வீட்டின் மீதும் உறவுகளின் மீதும் அதிக பாசம் உள்ளவர்கள். இறை நம்பிக்கை மிக அதிகம். கண்கள் காந்தசக்தியுடையவை. ஏதேனும் இறை நாமங்களை உச்சரித்துக்கொண்டே இருப்பீர்கள். பிறரை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க மாட்டீர்கள். ஒரு புள்ளி கிடைத்தால் போதும், பெரிய கோலமே போட்டுவிடுவதில் வல்லவர்கள். பிறருக்கு எப்போதும் ஏதேனும் கருத்துகளை போதித்துக் கொண்டே இருப்பீர்கள். மகோன்னதமான, செயற்கரிய காரியங்களைச் செய்து, பேரும் புகழும் பெறுவீர்கள்.
இந்த ராகுகேது பெயர்ச்சியால் குடும்பத்தில் இருந்துவந்த பிரச்னைகள் விலகி கணவன்-மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைத்து, மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். பணவரவு சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். சிலருக்கு வீடு, வாகனம், கார் வாங்கும் யோகம் அமையும். கொடுக்கல்வாங்கல் லாபமளிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றவும் முடியும். லாபங்கள் தடைபடாது. வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தை அடையமுடியும். அபிவிருத்தியும் பெருகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் உயர்வடைவார்கள்.
வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரியும் வாய்ப்பு அமையும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். வழக்குகள் ஆதாயமான முடிவுக்கு வரும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் பெருகும். புதிய வாய்ப்புகளும் தேடிவரும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகள் கிட்டும். அரசுவழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கை அபிவிருத்தியை பெருக்கும். வெளியூர் தொடர்புடைய வாய்ப்புகளும் கிடைக்கப்பெறும்.பணியில் உயரதிகாரிகளின் ஆதரவு மகிழ்ச்சி தரும். திறமைகளுக்கேற்ற பாராட்டும் கிடைக்கப்பெறும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் ஊதிய உயர்வும் கிடைக்கும். எடுக்கும் பணிகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்கள் நிறைவேறும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். நினைத்தது யாவும் நிறைவேறி மகிழ்ச்சி தரும்.
அரசியல்வாதிகளுக்குப் பெயரும், புகழும் உயரும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகிட்டும். கட்சிப் பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். மக்களின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் வெற்றிகள் குவியும். பணவரவு தாராளமாக இருக்கும். மாண்புமிகு பதவிகள் தேடிவரும்.
பெண்களுக்கு உடல்நலம் சிறப்பாக இருப்பதால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கள். கணவன்மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மணமாகாதவர்களுக்கு மணமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். சிலருக்கு புத்திர பாக்கியமும் உண்டாகும். சேமிப்பு பெருகும். கலைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகள் தேடி வரும். புதுப்புது ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள்.
கைமாற்றுப் பணமும் தடையின்றி வந்துசேரும். சுகவாழ்விற்கு பஞ்சம் இருக்காது. புதிய கார், பங்களா வாங்கி மகிழ்வீர்கள். மாணவ, மாணவியர் நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர், ஆசிரியர்களின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். கல்விக்காக வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பும் கிடைக்கும். விளையாட்டுப்போட்டிகளில் சிறப்பான பரிசுகளைப் பெறுவீர்கள். பொதுவாக உடல்நலம் அற்புதமாக இருக்கும். கடந்த கால மருத்துவச் செலவுகள் குறையும். மனைவி, பிள்ளைகள் நலமுடன் இருப்பார்கள். மனதில் மகிழ்ச்சி குடிகொள்ளும். நீண்டநாள் மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள்.
பரிகாரம்:
திங்கட்கிழமைதோறும் அருகிலிருக்கும் அம்மன் கோயிலுக்குச் சென்று இலுப்பை எண்ணையில் பஞ்சமுக தீபம் ஏற்றி வணங்கி 16 முறை வலம் வரவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்:
“ஓம் ஸ்ரீமாத்ரே நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 16 முறை சொல்லவும்.
மலர் பரிகாரம்:
திங்கட்கிழமை தோறும் அம்மனுக்கு அரளிப்பூமாலை சாத்திவழிபடவும்.
சிறப்பான கிழமைகள்:
திங்கள், வியாழன்.
அனுகூலமான திசைகள்:
தெற்கு, தென்மேற்கு.
அதிர்ஷ்ட எண்கள்:
2, 3, 6.