பூரட்டாதி
19.12.2017 முதல் 28.03.2020 வரை
கொடுத்த வாக்கினை உயிருக்குச் சமமாக மதிக்கும் பூரட்டாதி நட்சத்திர அன்பர்களே, இந்த சனிப் பெயர்ச்சி காலத்தில் வீண்கவலை ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சொத்து தொடர்பான விவகாரங்களில் தாமதம் ஏற்படும். பக்தியில் நாட்டம் அதிகமாகும். நெருங்கிய நண்பர்களுடன் மனஸ்தாபம் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள், பார்ட்னர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்வது நன்மை தரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப் பளு ஏற்பட்டாலும், எப்படியாவது செய்து முடித்து விடுவார்கள். சகஊழியர்கள் ஒத்துழைப்பும் இருக்கும்.
குடும்பத்தில் இருப்பவர்களுடன் ஏதாவது ஒருவகையில் வாக்குவாதம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே சிறுசிறு மனஸ்தாபம் உண்டாகும். சகோதரர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படலாம். வெளியூர் பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும்.பெண்கள் அடுத்தவர்களிடம் பேசும்போது யாரைப் பற்றியும் விமர்சிக்காமல் இருப்பது நல்லது. பணவரத்தில் தாமதம் இருக்கும். கலைத்துறையினர் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சில திட்டங்களை ஆலோசிப்பீர்கள்.
அரசியல்வாதிகள் மேலிடத்திற்கு பயந்து வேலை செய்ய வேண்டியிருக்கும். கடினமான வேலைகளையும் எளிதாகச் செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் பின்தங்கிய நிலை மாற கூடுதல் கவனத்துடன் அதிக நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது அவசியம்.
+ : வீண் கவலை அகலும்.
- : பணவரத்தில் தாமதம் ஏற்படலாம்.
பரிகாரம்:
சித்தர்களை வணங்கி வர மனக்குழப்பம் நீங்கும்.
அதிர்ஷ்ட எண்கள்:
3, 5.