எப்பொழுதும் யாருக்கும் அஷ்டமத்துச் சனி, ஏழரைச்சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டமச் சனி போன்ற சற்றுசிரமத்தினைத் தரக் கூடிய சனியினுடைய காலங்கள் திருமணத்தடையை உண்டாக்காது. ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி, கும்ப லக்னத்தில் பிறந்திருக்கும் அவரது ஜாதகக் கணிதப்படி தற்போது ராகு தசையில் செவ்வாய் புக்தி நடந்து கொண்டிருக்கிறது. திருமண வாழ்வினைப்பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி சூரியன் எட்டில் செவ்வாய் மற்றும் கேதுவுடன் இணைந்த நிலையில் அமர்ந்திருப்பது கடுமையான களத்ர தோஷத்தினை உண்டாக்குகிறது.
எட்டில் சூரியன்/செவ்வாயின் இணைவு மட்டுமே மணவாழ்வினில் அதிக சிரமத்தினைத் தரக் கூடும். அதிலும் கேதுவின் இணைவும் இருப்பதால் இவரது திருமணத்தை ஏதேனும் ஒரு ஈஸ்வரன் கோயிலில் நடத்துவதே அவரது எதிர்காலத்திற்கு நல்லது. 13.02.2019 முதல் துவங்க உள்ள குரு தசையில் குரு புக்தியின் காலத்திலும் மணமகள் தேடி வருவார் என்று இருக்க முடியாது. நாம்தான் அதிக முயற்சி எடுத்து அலைந்து திரிந்து இவரது திருமணத்தை நடத்த வேண்டும். மறுமணத்திற்கானஅதிகாரம் இவரது ஜாதகத்தில் இருப்பதால் அவசரப்படாமல் சற்று நிதானித்து பெண் தேடுங்கள்.
விவாகரத்து ஆனவர், அல்லது இளம் வயதில் கணவரை இழந்த பெண்ணாகப் பார்த்து திருமணம் செய்து வைத்தால் இவரது ஜாதக தோஷத்திற்கு பரிகாரம் கிடைத்துவிடும். யோசித்துச் செயல்படுங்கள். லக்னாதிபதி சனிபத்தாம் வீடாகிய ஜீவன ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் எதிர்காலம் என்பது நன்றாக உள்ளது. செவ்வாய்கிழமை தோறும் அருகில் உள்ள ஈஸ்வரன் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வருவதை வழக்கத்தில் கொள்ளுங்கள். பிரதோஷ நாட்களில் உங்களால்இயன்ற திருப்பணியைச் செய்யுங்கள். நந்தியம்பெருமானின் துணையாலும், பரமேஸ்வரனின் திருவருளாலும் திருமணத் தடைஎன்பது விலகி உங்கள் மகனுக்கு மணவாழ்வு என்பது சாத்தியமாகிவிடும்.
குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். புதுப்பொருள்சேரும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களைகற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டுக் கிடைக் கும். அமோகமான நாள்.