புனர்பூசம் 4 ம் பாதம், பூசம், ஆயில்யம்
அன்பால் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் கடக ராசி அன்பர்களே, இந்த வருடம் உங்கள் வாழ்வில் நல்ல மாற்றமும் முன்னேற்றமும் ஏற்படும். அஷ்டமச் சனியின் தாக்கம் குறையும். குரு பகவான் ராசிக்கு 11 ல் சஞ்சரிப்பதால் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். எடுக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். கனவுகள் மெய்ப்படும். தடைகள் விலகும். நண்பர்கள் உறவினர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். பொருளாதார நிலை மேம்படும். அஷ்டம சனியின் தாக்கத்தால் உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் குறையும். இதுவரை இருந்த தடைகள் பிரச்னைகள் சிறிது சிறிதாக விலகும். விலகி சென்ற உறவுகள் விரும்பி வருவார்கள். தாழ்வு மனப்பான்மை நீங்கி தன்னம்பிக்கை பிறக்கும். இருப்பினும் எதிலும் பொறுமை நிதானம் விழிப்புணர்வு தேவை. திடீர் ராஜயோகம் உண்டாகும். ராகு கேது பகவான் முறையே 9,3 ல் சஞ்சரிப்பதால் தந்தை உடல் நலனில் கவனம் தேவை. பிதுர்வழி சொத்து பிரச்னைகள் உருவாகும். கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்காக வெளிநாடு செல்வதற்கான முயற்சிகள் கைக்கூடும். மனதில் தைரியம் தன்னம்பிக்கை உற்சாகம் அதிகரிக்கும். எதையும் வெல்லும் ஆற்றல் உருவாகும். அரசால் அனுகூலம் உண்டு. முக்கிய பிரமுகர் அறிமுகமும் நட்பும் கிடைக்கும். அதன் மூலம் ஆதாயம் உண்டு.வியாபாரத்தில் வியாபாரிகளுக்கு நல்ல மாற்றமும் முன்னேற்றமும் ஏற்படும். புதிய வியாபார முயற்சிகள் கைக்கூடும். உத்யோகஸ்தர்களுக்கு தடைபட்ட பதவி உயர்வு ஊதிய உயர்வு கிடைக்கும். தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த உயர் அதிகாரிகள் சக ஊழியர்கள் விலகி செல்வார்கள்.மாணவர்களுக்கு உடல் நலம் சீராகும். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். நல்ல மதிப்பெண் எடுத்து அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள்.அரசியல்வாதிகளுக்கு இதுவரை இருந்த பிரச்னைகள் நீங்கும்.கலைத்துறையினா் தற்போதுள்ள வாய்ப்புகளால் பிரபலமடைவா்.எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெறும்.
பரிகாரம்: நாமக்கல்லில் உள்ள ஆஞ்சநேயர் மற்றும் நரசிம்மரை சனிக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.