கடகம்

அன்பால் அனைவரையும் அரவணைத்து செல்லும் கடக ராசி அன்பர்களே, இந்த வருடம் நீங்கள் எதிலும் கவனத்தோடு செயல்பட வேண்டியது மிகவும் அவசியமாக உள்ளது, எதிலும் நிதானம், பொறுமை, விழிப்புணர்வு தேவை. 21-4-2023  வரை தந்தையால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். தெய்வ அனுகூலம் உண்டு. அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். வெளிநாட்டுத் தொடர்பால் ஆதாயம் உண்டு. உற்ற நேரத்தில் தேவையான உதவிகள் கிடைக்கும். தடைகள், பிரச்னைகள் குறையும்.21-4-2023 க்கு பிறகு  தொழில் மற்றும் உத்யோகத்தில் அதிக கவனம் தேவை. உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. சில நேரங்களில் உங்கள் தகுதிக்கு குறைவான  பணிகளைச் செய்ய நீங்கள் நிர்பந்திக்கப்படலாம். உத்யோகத்தில் சிலருக்கு இடம் மாற்றங்கள் ஏற்படலாம். உங்கள் பணிகளில் அதிக சிரத்தையுடன் இருக்க வேண்டியது அவசியம். 17-1-2023 வரை கண்டகச் சனி இருப்பதால் கணவன் மனைவிக்குள் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வதால் தேவையற்ற பிரச்னைகளை தவிர்க்கலாம். வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் கவனம் தேவை. வியாபாரிகள் புதிய ஒப்பந்தங்களை தவிர்ப்பது நல்லது. 17-1-2023 க்கு பிறகு அஷ்டமச்சனி வர இருப்பதால் எதிலும் பொறுமை நிதானம் விழிப்புணர்வு அவசியம். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். தொழில் மற்றும் உத்தியோகத்தில் மிகுந்த கவனம் தேவை. உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வாகன பயணங்களில் கவனம் தேவை. மற்றவர்களுக்காக உதவி செய்யப்போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ள வேண்டாம்.   30-10-2023  வரை தொழில் மற்றும் உத்யோகத்தில் உயர்வு இருந்தாலும் சிறு தடைகள் உண்டு. உங்கள் பணிகளில் அதிக கவனம் செலுத்துங்கள். தாய் உடல்நலனில் கவனம் தேவை. உறவுகளால் மனக்கசப்புகள் வந்து நீங்கும். வீடு வாகனம் தொடர்பான செலவினங்கள் உண்டு. 30-10-2023 க்கு பிறகு மனதில் தைரியம் தன்னம்பிக்கை உற்சாகம் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். தந்தை உடல்நலனில் கவனம் தேவை. தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளிநாட்டு தொடர்பால் ஆதாயம் உண்டு.பெண்களுக்கு தடைபட்ட காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். மனதெளிவு உண்டாகும். கலைத்துறையினருக்கு பணவரத்து இருக்கும். எடுத்த முடிவை செயல்படுத்தும் முன் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது. அரசியல்துறையினருக்கு வீண் அலைச்சலுக்கு பிறகே எந்த ஒரு காரியமும் நடந்து முடியும். வேலை தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு திறமை வெளிப்படும். பரிகாரம்: திருப்பதி வெங்கடாஜலபதியை பௌர்ணமி தினத்தில் சென்று வழிபடுவது மிகுந்த நன்மை தரும்….

Dinakaran- astrology-logo

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Download Our Apps

Follow Us