(உத்திரம் 2,3,4 ம், அஸ்தம், சித்திரை 1,2 ம் பாதம்)
எந்த சூழ்நிலையையும் எளிதாக கையாளும் கன்னி ராசி அன்பர்களே, உங்கள் ராசிநாதன் புதன் பகவான் 8 ல் இருப்பதால் அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. எதிலும் பொறுமை நிதானம் விழிப்புணர்வு அவசியம். குருபகவான் வருடம் முழுவதும் உங்கள் ராசிக்கு 8 ல் சஞ்சரிப்பதால் வாழ்வில் தடைகள் பிரச்னைகள் வந்து நீங்கும். வாகன பயணங்களில் கவனம் தேவை. யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். மற்றவர்களுக்கு உதவி செய்ய போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். பொறுமை நிதானம் விழிப்புணர்வு அவசியம். ஏதேனும் பிரச்னை என்றால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. 30-10-2023 க்கு பிறகு ராகு கேது பகவான் முறையே 7, 1 ல் சஞ்சரிப்பதால் கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வர வாய்ப்புள்ளதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. புத்தியை ஸ்திரமாக வைத்துக் கொள்வது நல்லது.சனி பகவான் உங்கள் ராசிக்கு 6 ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் திருவினையாகும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கு விஷயங்கள் சாதகமாக மாறும். உங்கள் செல்வாக்கு அந்தஸ்து உயரும். மாணவர்கள் படிப்பில் அதிக மதிப்பெண் எடுத்து சாதனை படைப்பர். அரசியல்வாதிகள் தலைமையை அனுசரித்துச் செல்வதால் நல்ல மாற்றமும் முன்னேற்றமும் ஏற்படும். கலைத்துறையினருக்கு தற்போதுள்ள வாய்ப்புகளால் பேரும் புகழும் கிடைக்கும்.
பரிகாரம்: ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆதிகேசவப் பெருமாள் மற்றும் ராமானுஜரை புதன்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.