(உத்திரம் 2ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2ம் பாதம் வரை)குடும்பம்: இந்த குரு, சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்களினால் பல நன்மைகள் ஏற்படவுள்ளன, இப்புத்தாண்டில்! உங்கள் ராசிக்கு பூர்வபுண்ணிய ஸ்தானமாகிய மகர ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவானாலும் நன்மைகளையே எதிர்பார்க்கலாம். கவலையை அளிப்பவர், அஷ்டம ஸ்தானத்தில் (ராசிக்கு 8ம் இடம்) அமர்ந்துள்ள ராகுதான்! 8ம் இடம் என்பது ஆரோக்கியம், ஆயுள் ஆகியவற்றைக் குறிக்கும் இடமாகும். அங்கு ராகு நிலைகொண்டிருப்பது, நன்மை தராது. ஆண்டு முழுவதும், வருமானம் திருப்திகரமாகவே நீடிக்கிறது. எந்தத் தருணத்திலும் பிரச்னை ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. சிறிது திட்டமிட்டுச் செலவு செய்தால், சேமிப்பிற்கும் வாய்ப்புள்ளதை கிரகநிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நிகழும். திருமண முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும். பல பெண்களுக்கு புத்திர பாக்கியம் கிட்டும். சுக்கிரனைவிட, குரு பகவான் அதிக சுபபலம் பெற்றுள்ளதால், கன்னி ராசியில் பிறந்துள்ள பெண்மணிகளுக்குப் பெரும்பாலும் ஆண் குழந்தைகளே அதிகமாக இருக்கும் (ஆதாரம்: “பூர்வபாராசர்யம்”, “பார்க்கவ ஸம்ஹிதை”. “பூர்வ ஜென்ம நிர்ணய ஸாரம்” ஆகிய புராதன நூல்கள்). குடும்பத்தில் ஒற்றுமையும், மகிழ்ச்சியும் நிலவும். அஷ்டமத்தில் ராகு உள்ளதால், ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தசா, புக்திகள் அனுகூலமற்று இருப்பின், விபத்துகள் ஏற்படலாம். கூடியவரையில் வரும் ஒருவருட காலத்திற்கு வாகனம் ஓட்டும்போது (குறிப்பாக இரவில்) – நிதானமாக இருந்தால் நல்லது. இரவுநேரங்களில் வாகனம் ஓட்டுவதைத் தவிர்ப்பது அவசியம். “ஜோதிடம்“ எனும் வாழ்வியல் கலை, எதிர்காலத்தைப் பற்றி முன்கூட்டியே அறிந்துகொள்வதற்காக மட்டுமே ஏற்பட்ட கலை அல்ல, எத்தகைய தருணங்களில் நாம் எவற்றைத் தவிர்க்க வேண்டும் என்பதை நம்மை எச்சரிக்கும் வாழ்க்கைத்துணை அது!உத்தியோகம்: மேலதிகாரிகளின் ஆதரவு மன நிம்மதியைத் தரும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பு கிட்டும். வேலைச்சுமையும் பொறுப்புகளும் பொறுமைக்கு சோதனையாக அமையும். தற்காலிகப் பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும். அலுவலகச் சூழ்நிலை திருப்தி தரும்.தொழில், வியாபாரம்: “சுபகிருது” புத்தாண்டில் சிறந்த அபிவிருத்தி ஏற்படும். லாபம் உயரும். புதிய வியாபாரத் துறைகளில் ஈடுபடுவதற்கு கிரகநிலைகள் உறுதுணையாக நிற்கின்றன. சந்தை நிலவரம் சாதகமாகவே இருக்கும். ஆண்டு முழுவதும், புதிய அபிவிருத்தித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு அனுகூலமாக சஞ்சரிக்கின்றனர், சம்பந்தப்பட்ட கிரகங்கள். வர்த்தகம் சம்பந்தமாக, வெளியூர்களுக்குச் செல்லும்போது, பணம், முக்கிய ஆவணங்கள் ஆகியவற்றைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள். ஆபத்துகள் நிறைந்த இயந்திரங்களில் பணியாற்றும் ஊழியர்கள், பணியின்போது எச்சரிக்கையுடன் இருக்கவேண்டியதன் அவசியத்தை, ராகுவின் நிலை எடுத்துக்காட்டுகிறது; விபத்துகள் நிகழக்கூடும்!கலைத்துறையினர்: பல மாதங்களாக, நிலைகுலைந்து நிற்கும் கலைத்துறையினை கைதூக்கி, மீண்டும் நிலைநிறுத்த சாதகமாக அமைந்துள்ளன, கிரக நிலைகள். தயாரிப்பாளர்கள் தைரியமாக புதிய படங்களை எடுப்பதில் முதலீடு செய்யலாம். நடிகர் நடிகைகளுக்கு, இயக்குநர்களுக்கு நம்பிக்கையூட்டும் ஆண்டு.அரசியல்துறையினர்: கட்சியில் ஆதரவு பெருகும். மறைமுக வருமானத்திற்கும் குறைவிராது. ராகு மற்றும் சுக்கிரனின் நிலையினால், கட்சியிலுள்ள பெண்மணி ஒருவரால் வீண் அபவாதம் ஏற்படக்கூடும். எச்சரிக்கையாக இருப்பது நல்லது.மாணவ – மாணவியர்: கல்விக்கு அதிபதியான கிரகமும் வித்யாஸ்தானம் எனப்படும் ராசியில் தோஷமில்லாமலிருப்பதால் நல்ல கல்வி முன்னேற்றம் நிச்சயம். வெளியே செல்வதைக் குறைத்துக்கொள்ளுங்கள்.விவசாயத்துறையினர்: செவ்வாய், குரு அனுகூலமாக இருப்பதால், அமோக விளைச்சல் கிடைக்கும். தண்ணீர் வசதிக்குக் குறைவிராது. கால்நடைகள் விருத்தியடையும்.பெண்மணிகள்: அனைத்து விஷயங்களிலும், நன்மைகளையே இப்புத்தாண்டில் நீங்கள் எதிர்பார்க்கலாம். ஆயினும், உடல்நலனில் மட்டும் கவனமாக இருங்கள். இது மிகவும் அவசியம்.அறிவுரை: 8ல் ராகு இருப்பதால், எதிர்பாராத விபத்துகள் மனநிலையை பாதிக்கும். தமக்குத் தேவையில்லாத பிரச்னையினால் பிறருடன் பகை ஏற்படக்கூடும். வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்கவும். இரவு நேரப் பயணங்களைக் குறைத்துக்கொள்வதும், நன்மையளிக்கும்.பரிகாரம்: 1. தினமும், காலையில் ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாமமும், மாலையில் ஸ்ரீம்ருத்யுஞ்சய ஸ்தோத்திரம் சொல்லிவந்தால் போதும். பகலவனைக் கண்ட பனிபோல், ஓடிடும் தோஷம். 2. 12 சனிக்கிழமைகள் அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றில் மூன்று எள் எண்ணெய் தீபம் ஏற்றிவரவும்.3. ஸ்ரீ லட்சுமி நரசிம்மரின் சக்திவாய்ந்த மந்த்ர ராஜ பத ஸ்தோத்ரம் சொல்லி, அவரைப் பூஜித்து வருவது சக்திவாய்ந்த பரிகாரமாகும்.4. முருகப் பெருமானின் திருக்கோயிலில் சனிக்கிழமைதோறும் தீபம் ஏற்றிவருவது மற்றுமோர் சிறந்த பரிகாரமாகும். 5. திருநாகேஸ்வரம் சென்று, ராகுவை தரிசித்து 24 தீபம் ஏற்றிவைப்பது நன்மையை அதிகரிக்கச் செய்யும்….
1.1K