அவிட்டம் 3,4 ம் பாதம், சதயம்,பூரட்டாதி 1, 2, 3 ம் பாதம்
மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்ட கும்ப ராசி அன்பர்களே, இந்த வருடம் உங்கள் வாழ்வில் நல்ல மாற்றமும் முன்னேற்றமும் ஏற்படும். எல்லா வகையிலும் அனுகூலமான பலன்கள் உண்டாகும். இருப்பினும் சில விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. சனி பகவான் உங்கள் ராசியில் ஜென்ம சனியாக சஞ்சரிப்பதால் எதிர்மறை சிந்தனைகளை தவிர்த்து நேர்மறை சிந்தனை வளர்த்துக் கொள்ளுங்கள். மன அழுத்தத்தை குறைக்க தியானம் செய்வது அவசியம். எந்த விஷயத்திலும் கடின உழைப்பை மேற்கொள்ளுங்கள். எந்த முடிவையும் நன்கு பரிசீலித்து எடுப்பது நல்லது.குரு பகவான் 4 ல் சஞ்சரிப்பதால் தாய் உடல் நலனில் கவனம் தேவை. தாயுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். உறவுகளால் வீண் பிரச்னைகள் உருவாகும். வாகன பயணங்களில் கவனம் தேவை. இரவு நேர பயணங்கள் மற்றும் நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. ராகு கேது பகவான் முறையே 2,8 ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பொருளாதார நிலையில் ஏற்ற தாழ்வுகள் வந்து நீங்கும். வாழ்வில் சிறிது தடைகள் பிரச்னைகள் உருவாகும். மற்றவர்களுக்கு உதவி செய்து உபத்திரத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் அதிக எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. புதிய வியாபார முயற்சியை தவிர்ப்பது அவசியம். கூட்டாளிகளை கண்காணிப்பில் வைத்துக் கொள்ளுங்கள்.உத்யோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிலும் காலதாமதத்தை தவிர்க்கவும்.மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. யோகா மற்றும் தியானம் பயில்வதால் நினைவாற்றலை அதிகரிக்கலாம். தேவையற்ற நட்பிலிருந்து விலகிருங்கள்.அரசியல்வாதிகளுக்கு தலைமையை அனுசரித்துச் செல்வது நல்லது. உங்களது பொறுப்புகளில் கவனம் தேவை.கலைத்துறையினருக்கு பல முன்னணி நிறுவனங்கள் தாமாகவே உங்களை தேடி வாய்ப்புகளை கொடுக்கும்
பரிகாரம்: மதுரை மீனாட்சியை வெள்ளிக்கிழமை சென்று வழிபடுவது நன்மை தரும்.