மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை அதிகம் உடைய கும்பராசி அன்பர்களே, இந்த வருடம் முதலில் சில நல்ல மாற்றங்கள் இருந்தாலும், பிற்பகுதியில் குறிப்பிட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். தேவையற்ற வீண் பிரச்னைகளை நிச்சயம் தவிர்க்கலாம்.21-4- 2023 வரை குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பொருளாதார நிலை தேவைக்கேற்ப உயரும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். விலகிச்சென்ற உறவுகள் விரும்பி வருவார்கள். நீண்ட நாளாக வரவேண்டிய பணம் வந்துசேரும். இருப்பினும் யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம்.21-4- 2023 க்கு பிறகு எடுக்கும் முயற்சிகளில் தடைகளும் தாமதமும் ஏற்படும். முயற்சியே வெற்றி தரும். எதிர்காலம் பற்றிய பயம் வீண் சந்தேகம் வந்து செல்லும். மனதில் தைரியத்தையும் தன்னம்பிக்கை வளர்த்துக் கொள்வது நல்லது. உடன்பிறப்புகளால் மனக்கசப்புகள் வந்து நீங்கும். தங்க நகை ஆபரணங்களை கவனமாக கையாளுங்கள்.17-1-2023 வரை எடுக்கும் முயற்சிகளில் தடைகளும் தாமதங்களும் ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. நண்பர்கள் மற்றும் உறவினர்களை முழுமையாக நம்ப வேண்டாம். சிலருக்கு நம்பிக்கை துரோகங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. சிக்கனம் சேமிப்பில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம்.17-1-2023 க்கு பிறகு கடந்தகால எதிர்மறையான அனுபவங்களால் எதிர்மறை சிந்தனை அதிகரிக்கும் என்பதால் அதனை தவிர்த்து நேர்மறை சிந்தனை வளர்த்துக் கொள்ளுங்கள். எப்பொழுதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். சோம்பலைத் தவிர்த்து சுறுசுறுப்புடன் இருக்க இருப்பது நல்லது. எதிலும் பொறுமை நிதானம் விழிப்புணர்வு தேவை.30-10-2023 வரை மனதில் தைரியம் தன்னம்பிக்கை உற்சாகம் அதிகரிக்கும்.உடன்பிறப்புகளால் மனக்கசப்பு இருந்தாலும் ஆதாயமும் உண்டு. எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். பொருளாதார நிலையில் உயர்வு ஏற்படும். வழக்கு விஷயங்கள் சாதகமாக அமையும். உற்ற நேரத்தில் தேவையான உதவிகள் கிடைக்கும். தந்தை உடல்நலனில் கவனம் தேவை.30-10-2023 க்கு பிறகு பேச்சில் அதிக கவனம் தேவை. குடும்பத்தில் வீண் பிரச்னைகள் வர வாய்ப்புள்ளதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.பெண்கள் எதிலும் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது. கடித போக்குவரத்து மூலம் நல்ல தகவல் வரும்.வீண் மன சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும்.கலைத்துறையினர் பொறுமையுடன் செயல்பட வேண்டும்.மறைமுக போட்டிகளால் நெருக்கடிகளை சந்திக்க நேரிடும்.அரசியல்வாதிகளுக்கு மேலிடத்துடன் இருந்து வந்த மோதல்கள் நீங்கும்.மாணவர்களுக்கு ஆசிரியரின் ஆதரவு கிடைக்கும். சக மாணவர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. பரிகாரம்: நாமக்கல் ஆஞ்சநேயர் மற்றும் நரசிம்மரை சனிக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்….
559