மூலம், பூராடம், உத்திராடம் 1 ம் பாதம்
நல்லவருக்கு நல்லவராகவும், கெட்டவராகவும் கெட்டவராக விளங்கும் தனுசு ராசி அன்பர்களே இந்த வருடம் உங்கள் வாழ்வில் அனைத்து வகையிலும் நல்ல மாற்றங்களும் முன்னேற்றங்களும் ஏற்படும். சனிபகவான் 3ல் இருப்பதால் மனதில் தைரியம் தன்னம்பிக்கை உற்சாகம் அதிகரிக்கும். எதையும் வெல்லக்கூடிய ஆற்றல் உருவாகும். எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். முக்கிய பிரமுகர்களின் நட்பு கிடைக்கும். அதன் மூலம் ஆதாயம் உண்டு. ஆடை ஆபரணம் சேரும். வீடு மனை வாகனம் சொத்து சேர்க்கை உண்டு. குரு பகவான் 6 ல் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத் தேவைக்காக கடன் வாங்கும் சூழல் ஏற்படலாம். நீண்ட நாட்களாக வங்கி கடனுக்காக முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு வங்கி கடன் கிடைக்கும். வேலைக்காகவோ வேலை மாற்றத்துக்காகவும் முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.ராகு கேது பகவான் முறையே 4, 10 ல் இருப்பதால் வீடு மனை வாகனம் சொத்து தொடர்பான செலவினங்கள் உண்டு. தொழில் மற்றும் உத்யோகத்தில் அதிக கவனம் தேவை. உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். உங்கள் தகுதிக்கு குறைவான பணிகளை செய்ய நிர்பந்திக்கப்படலாம். விரும்பத்தகாத இடமாற்றங்கள் வந்து நீங்கும்.கலைத்துறையினர் தற்போது உள்ள வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் அதிக கவனம் தேவை. புதிய வியாபாரம் முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது . உடல் ஆரோக்கியம் கல்வியை பாதிக்காத வகையில் பார்த்துக் கொள்ளுங்கள். தேவையற்ற நட்பிலிருந்து விலகிருங்கள். அரசியல்வாதிகளுக்கு தலைமை அனுசரித்துச் செல்வது நல்லது. தலைமை உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்.
பரிகாரம்: ஆலங்குடியில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர் மற்றும் குருபகவானை வியாழக்கிழமைகளில் சென்று வழிபடுவது நன்மை தரும்.