மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம் வரை
குடும்பம்: சுக்கிரன், சனி, செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்களினாலும் இப்புத்தாண்டில் பல நன்மைகள் உங்களுக்கு ஏற்படவுள்ளன. தேவையான அளவிற்கு வருமானம் தந்தருள்வார், சுக்கிரன்! அவருக்கு ஆதரவாக ஜீவன காரகரான சனி பகவானும் வலம் வருவதால், பணப் பிரச்னை இப்புத்தாண்டில் இருப்பதற்கு வாய்ப்பில்லை!! குரு பகவான், ருண, ரோக, சத்ரு ஸ்தானத்திற்கு மாறுவதால், தேவையற்ற, அநாவசிய செலவுகளில் பணம் விரயமாகும். நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோருடன் வாக்குவாதம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அர்த்தாஷ்டக ராசியில் ராகு நிலைகொண்டிருப்பதால், உடல் நலனில் பாதுகாப்பாக இருப்பது அவசியம். தேவையில்லாமல், ெவளியில் செல்வது, தரக்குறைவான உணவகங்களில் உணவருந்துவது, பிறருடன் வாக்குவாதம் செய்தல் ஆகியவற்றைத் தவிர்ப்பது மிகவும் அவசியம்.
உத்தியோகம்: உத்தியோகத் துறைக்கு அதிபதியான சனி பகவான், அவரது ஆட்சிப் பீடமான கும்ப ராசியில் அமர்ந்திருப்பது, சிறந்த முன்னேற்றத்தைத் தரவல்ல கிரக நிலையாகும்! பலருக்கு, நிறுவன மாற்றமும் அதனால் பதவியுயர்வும் கிட்டும். மேலதிகாரிகள் மற்றும் நிறுவனத்தினர் ஆகியோரின் ஆதரவு மகிழ்ச்சியையும் மன-நிறைவையும் அளிக்கும். பலருக்கு, இடமாற்றம் ஏற்படுவதற்கும் அதன் காரணமாக, கூடுதல் சலுகைகளும் கிடைக்குமென கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. புதிதாக வேலைக்கு முயற்சி செய்யும் தனுர் ராசியினருக்கு, மன-நிறைவையளிக்கும் நிறுவனத்தில், நல்ல ஊதியத்தில், வேலை கிடைக்கும். வெளிநாடு சென்று வேலை பார்க்கும் ஆர்வமிருப்பின், இப்புத்தாண்டில் அது நிறைவேறும்! முயற்சிக்கவும்!!
தொழில், வியாபாரம்: வர்த்தகத் துறையும், சனி பகவானின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது! அவர் இந்த ஆண்டு முழுவதும் தனுர் ராசியினருக்கு, பல நன்மைகளை அளிக்கும்படி நிலைகொண்டுள்ளார். வியாபாரத்தை விருத்தி செய்வதற்கு ஏற்ற மாதமிது! புதிய கிளைகள் திறக்கலாம். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வங்கி போன்ற நிதிநிறுவனங்களின் ஆதரவு கிடைக்கும். உங்கள் பொருளாதார நிலையைச் சீர்செய்துகொள்ள உதவிகரமாக அமைந்துள்ளன, கிரக நிலைகள் இத்தமிழ்ப் புத்தாண்டில்!!
கலைத்துறையினர்: வருமானம் உயரும்! புதிய வாய்ப்புகள் எளிதில் கிட்டும். சங்கீத வித்வான்கள், உபன்யாசகர்கள், நாதசுவர வித்வான்கள், வீணை வித்வான்கள், பரதநாட்டியக் கலைஞர்கள் ஆகியோருக்கு புதிய வாய்ப்புகள் கிட்டும். சமூகத்தில் நல்ல மதிப்பும், மரியாதையும் உயர்வது மகிழ்ச்சியை அளிக்கும். பொலிவிழந்து, நிற்கும் நாடகத் துறைக்குப் புத்துயுர் ஊட்டும் ஆண்டு இந்தத் தமிழ்ப் புத்தாண்டு. சென்ற காலத்தில், சங்கீதமும், நாடகமும், நடிப்பும் ஒன்றிணைந்து, ஒரே கலையாகப் பிரகாசித்து வந்தது! திரைப்படம் வந்ததும், நாடகத் துறை ஒளியிழந்து மங்கியது. இருப்பினும், அதன் பெருமை மறையவில்லை!! கிரக நிலைகளின்படி, இப்புத்தாண்டில் நாடகக் கலை புத்துயுர் பெற்று விளங்கும் – சுக்கிரனின் தெய்வீக பலத்தினால்!
அரசியல்துறையினர்: கலைத் துறைக்கு அதிபதியான சுக்கிரன்தான், அரசியல் துறைக்கும் அதிகாரியாவார்! அவர் இப்புத்தாண்டில் நல்ல சுப பலம் பெற்று வலம் வருவதால், தனுர் ராசி அரசியல் துறையினருக்கு சிறந்த முன்னேற்றம் காத்துள்ளது, இப்போது! கட்சியில் செல்வாக்கு உயரும். சிலருக்கு, இந்தப் புத்தாண்டில் முக்கிய பதவியொன்றை ஏற்பதற்கும் யோக பலன்கள் உள்ளன.
மாணவ – மாணவியர்: வித்யா காரகரான புதன், உதவிகரமாக சஞ்சரிக்கிறார். ஆவணி, புரட்டாசி ஆகிய இரு மாதங்களைத் தவிர, மற்ற மாதங்கள் அனைத்திலும் சுபபலம் பெற்று விளங்குவதால், படிப்பில், எவ்விதத் தடங்கலுமின்றி நல்ல முன்னேற்றம் காத்துள்ளது. உயர் கல்விக்கு உதவித் தொகை (ஸ்காலர்ஷிப்) பெற்றுத் தருவார் புதன்! ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ் போன்ற உயர் கல்விகளில் பங்கேற்றால் வெற்றிக் கனியைப் பெற்றுத் தந்திடுவார்கள், சம்பந்தப்பட்ட கிரகங்கள். அந்த அளவிற்கு யோக பலன்கள் கிடைக்கவுள்ளன உங்களுக்கு, இத் தமிழ்ப் புத்தாண்டில்!!
விவசாயத் துறையினர்: உங்களுக்கு மட்டும் குறையா வைக்கப்போகிறார், செவ்வாய்? விவசாயத் துறைக்கு சம்பந்தப்பட்ட மற்ற கிரகங்களும், யோக பலன்கள் அளிக்கக்கூடிய பாதைகளில் சஞ்சரிப்பதால், விவசாயத்தில் நல்ல பலன்களை அனுபவிக்கவிருக்கின்றீர்கள், குரோதி தமிழ்ப் புத்தாண்டில்! விளைச்சல் எதிர்பார்க்கும் அளவிற்கு கிடைப்பது, மகிழ்ச்சியை அளிக்கும். சந்தையில் உங்கள் விளை பொருட்களுக்கு லாபகரமான விலை கிடைக்கும். ஏற்றுமதித் துறையில் உள்ள விவசாயத் துறையினருக்கு, புதிய ஆர்டர்கள் கிடைப்பது, மகிழ்ச்சியை அளிக்கும். பழைய கடன்களை அடைத்து, உங்கள் பொருளாதாரத்தை சீர்ெசய்துகொள்ள ஏற்ற புத்தாண்டாகும்,இந்தத் தமிழ் குரோதி புத்தாண்டு.
பெண்மணிகள்: குரு பகவான் இந்த ஆண்டு முழுவதும் உங்களுக்கு அனுகூலமாக இல்லை! இந்தக் குறையை சுக்கிரன் தீர்த்து வைக்கிறார்!! குடும்பச் செலவிற்குத் தேவையான வருமானத்தைத் தந்தருள்கிறார், சுக்கிரன். சிறு சிறு வாக்குவாதங்களைத் தவிர, மற்றபடி, குடும்பச் சூழ்நிலை அமைதியாகவே இருக்கும். ஆவணி மாதத்தில் எதிர்பாராத பெரிய செலவொன்று ஏற்படும். அப்போது, சனியும் சுக்கிரனும் உதவிக்கரம் நீட்டி, சமய சஞ்சீவிகளாக உதவுகின்றனர்.
அறிவுரை: சிக்கனமாக செலவு செய்யுங்கள். ஏனெனில், கிரகக் கூட்டணிகள் ஏற்படும்போதெல்லாம் எதிர்பாராத செலவுகளைச் சமாளிக்க வேண்டிவரும். காற்றுள்ளபோதே தூற்றிக்ெகாள் என்பது ஆன்றோர் வாக்காகும், மறந்துவிடாதீர்கள்!!
பரிகாரம்: குருவுக்கு மட்டும், பரிகாரம் செய்வது நல்ல பலனையளிக்கும். வியாழக்கிழமைகளில் பசுக்களுக்கோ அல்லது ஏழைகளுக்கோ உணவளிப்பது, குரு பகவானின் மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கும் மிகச் சிறந்த பரிகாரமாகும். ஏழைகள் உடுப்பதற்கு வஸ்திரம் கொடுப்பதும், தன்னிகரற்ற பரிகார பலனை அளிக்கவல்லது.இத்தகைய பரிகாரங்களைச் செய்வதற்கு எளியதாகத் தோன்றினாலும், அவற்றின் பலனோ அளவற்றது என்பதைப் “பூர்வ ஜென்ம நிர்ணய ஸாரம்”,மற்றும் “கருட புராணம்” ஆகியவற்றில் விவரிக்கப்பட்டுள்ளது. இவை உடனுக்குடன் பலனளிப்பவையாகும்.