மற்றவர்களுக்கு வழிகாட்டுதல் வல்லமை படைத்த தனுசு ராசி அன்பர்களே, இந்த வருடம் உங்கள் வாழ்வில் மறக்க முடியாத அளவுக்கு நல்ல மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்த இருக்கிறது. இதுவரை இருந்த தடைகள், பிரச்னைகள், துன்பங்கள் அனைத்தும் நீங்கும். 21-4- 2023 வரை தாய் உடல் நிலையில் கவனம் தேவை. உறவுகளால் மனக்கசப்புகள் வந்து நீங்கும். வீடு வாகனம் சொத்து தொடர்பான செலவினங்கள் அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. வாகன பயணங்களில் கவனம் தேவை. எடுக்கும் முயற்சிகளில் தடைகளும் தாமதமும் ஏற்படும். 21-4- 2023 க்கு பிறகு குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு. குழந்தைகளால் பெருமைப்படக்கூடிய சூழல் உருவாகும். பூர்வீக சொத்தால் ஆதாயம் உண்டு. அறிவுத்திறன் அதிகரிக்கும். உங்கள் புத்தி கூர்மையால் எதையும் சாதிக்கும் நிலை உருவாகும். 17-1-2023 வரை குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வதால் தேவையற்ற பிரச்னைகளை தவிர்க்கலாம். பேச்சில் கவனம் தேவை. 17-1-2023 க்கு பிறகு ஏழரை சனி விலகுவதால் கடந்த 7 வருடமாக இருந்த பிரச்னைகள் அனைத்தும் நீங்கும். மனதில் தைரியம் தன்னம்பிக்கை உற்சாகம் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலை உயரும். வாழ்க்கையில் நல்ல மாற்றங்களும் முன்னேற்றங்களும் ஏற்படும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் நட்பும் கிடைக்கும். அதன் மூலம் ஆதாயம் உண்டு.30-10-2023 வரை குழந்தைகள் உடல் நலனில் கவனம் தேவை. குழந்தைகளின் நட்பு வட்டத்தை கண்காணிப்பில் வைத்து வழி நடத்திச் செல்வது நல்லது. பூர்வீக சொத்து விஷயங்களில் கவனம் தேவை. வீண் மனக் குழப்பங்கள் அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும்.30-10-2023 க்கு பிறகு தாய் உடல்நலத்தில் கவனம் தேவை. தாய் மற்றும் உறவுகளால் மனக்கசப்பு வந்து நீங்கும். வீடு வாகனம் சொத்து தொடர்பான செலவினங்கள் உண்டு. மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. யோகா தியானம் செய்வதால் வீண் மனக் குழப்பத்தை தவிர்த்து மனஅமைதி பெறலாம். தொழில் உத்யோகத்தில் அதிக கவனம் தேவை. பெண்களுக்கு வீண் அலைச்சலும் எதிர்பாராத செலவும் உண்டாகும். கவனம் தேவை. கலைத்துறையினருக்கு வாகனத்தை ஓட்டும் போது கவனம் தேவை. எதிர்பார்த்த தகவல்கள் தாமதமாக வரும். கூட இருப்பவர்களிடம் எந்த விஷயத்தையும் சொல்லும் போது கவனம் தேவை. அரசியல்துறையினருக்கு மன குழப்பம் நீங்கும். ஆனால் பிறருடன் பழகும் போது நிதானம் தேவை. தொழிலில் முன்னேற்றம் காணப்படும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். மாணவர்களுக்கு வழக்கத்தை விட கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது நல்லது. விளையாட்டுகளில் ஆர்வம் அதிகரிக்கும்.பரிகாரம்: திருஆலங்குடியில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர் மற்றும் குருபகவானை வியாழக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்….
499