பூரட்டாதி 4 ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
எந்த சூழ்நிலையையும் மகிழ்ச்சியாக எதிர்கொள்ளும் மீனராசி அன்பர்களே, இந்த வருடம் உங்கள் வாழ்வில் நல்ல மாற்றமும் முன்னேற்றமும் ஏற்படும். சனிபகவான் 12 ல் விரைய சனியாக சஞ்சரிப்பதால், பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. சிக்கனம் மற்றும் சேமிப்பில் அதிக கவனம் செலுத்துங்கள்.குருபகவான் 3 ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் சிறு சிறு தடைகள் பிரச்னைகள் வந்து நீங்கும். விடாமுயற்சி ஒன்றே வெற்றி தரும். மனதில் எதிர்காலம் பற்றிய பயத்தை தவிர்ப்பது நல்லது. தைரியத்தையும் தன்னம்பிக்கையும் வளர்த்துக் கொள்ளுங்கள். வீடு மனை வாகனம் போன்றவற்றில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். சில நேரங்களில் செலவினங்கள் ஏற்படலாம். எதிலும் பொறுமை தேவை.ராகு கேது பகவான் முறையே 1,7 ல் சஞ்சரிப்பதால் எதிர்மறை சிந்தனைகளை தவிர்த்து நேர்மறை சிந்தனை வளர்த்துக் கொள்ளுங்கள். தேவையற்ற எண்ணங்களை விடுத்து எப்போதும் உற்சாகத்துடன் செயல்படுங்கள். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு வர வாய்ப்புள்ளதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் கவனம் தேவை. வியாபாரி ரீதியான புதிய ஒப்பந்தங்களை தவிர்ப்பது நல்லது. கூட்டாளிகளை கவனமாக கையாளுங்கள்.உத்யோகத்தில் உயரதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிலும் தாமதத்தை தவிர்ப்பது நல்லது.மாணவர்களுக்கு கல்வியில் அதிக கவனம் தேவை. பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் அறிவுரைகளைகேட்டுஅதன்படி நடப்பது நல்லது.அரசியல்வாதிகளுக்கு எந்த ஒரு காரியத்திலும் நிதானம் மிக அவசியம். கலைத்துறையினர் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும்.
பரிகாரம்: திருச்செந்தூர் முருகப்பெருமானை வியாழக்கிழமையில் சென்று வழிபடுவதால் நன்மை உண்டாகும்.