மீனம்

Published: Last Updated on

பூரட்டாதி 4ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி வரை

குடும்பம்: ஏழரைச் சனியின் ஆரம்ப கட்டத்தில் உள்ள மீன ராசி அன்பர்களுக்கு, ராசி நாதனாகிய குரு பகவான், சித்திரை 17-ம் (30-4-2024) தேதி வரை உங்களுக்கு ஆதரவாக சஞ்சரிக்கிறார். சித்திரை 18-ம் (1-5-2024) அன்று அனுகூலமற்ற நிலைக்கு மாறிவிடுகிறார். ஜென்ம ராசியில் வலம் வந்து கொண்டிருக்கும் ராகுவினால், நன்மை ஏதும் ஏற்படாது. வீண் அலைச்சல், குடும்பப் பிரச்னைகளினால் கவலை, அலுவலகப் பொறுப்புகள் சம்பந்தமாக, மன நிம்மதி இழத்தல் ஆகியவை தவிர்க்க இயலாதவை! வீண் செலவுகளிலும், மருத்துவ செலவுகளிலும் பணம் விரயமாகும். சித்திரை 18-ம் (1-5-2024) தேதியிலிருந்து கேதுவிற்கு, குரு பகவானின் சுபப் பார்வை கிடைப்பதால், மனைவியின் ஆரோக்கியத்தில் மிகச் சிறந்த முன்னேற்றம் ஏற்படும். கவலை நீங்கும். வெளிநாட்டில் பணியாற்றி வரும் நெருங்கிய உறவினர் ஒருவரின் வருகை மனத்திற்கு மகிழ்ச்சியையும், மன நிறைவையும் அளிக்கும். வீண் செலவுகளைத் தவிர்க்க இயலாது. ஜென்ம ராசியில் ராகு நீடிப்பதாலும், ஏழரைச் சனி ஆரம்பமாகியிருப்பதாலும், இரவு நேரங்களில் வெளிச் செல்வதைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. சிறு, சிறு உடல் உபாதைகள், சருமம் சம்பந்தமான பிரச்னைகள் ஏற்பட்டு, எளிய சிகிச்சையினால், குணமும் ஏற்படும்.

உத்தியோகம்: ஜீவன காரகரான சனி பகவான், ராசிக்கு விரய ஸ்தானத்தில் நிலைகொண்டிருந்தாலும்,தன பாக்கியாதிபதியான செவ்வாயுடன் இணைந்திருப்பதால், சனியினால் ஏற்படும் தோஷம், பெருமளவில் குறைகிறது. இதற்குக் காரணம், சனி பகவானுக்கு செவ்வாய் பகைக் கிரகமாகும்! சனி பகவானுக்கு இணையான பலம் கொண்டவர், அக்னீ ஸ்வரூபியானசெவ்வாய்! திருமண முயற்சிகளில் தடங்கல்கள் ஏற்படும். சிலருக்கு இடமாற்றம் அல்லது இலாகா மாற்றம் ஏற்படக்கூடும். நிர்வாகத்தினருடன் கொண்டுள்ள நல்லுறவு, சிறிய தவறினால், பாதிக்கப்படக்கூடும். பேச்சிலும், செயலிலும் சற்று நிதானமாக இருப்பது மிகவும் அவசியமாகும். சக-ஊழியர்களுடன் நெருங்கிப் பழகுவதைத் தவிர்த்தல் அவசியம். உங்கள் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படுவதற்கு சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் சூட்சுமமாக எடுத்துக்காட்டுகின்றன.

தொழில், வியாபாரம்: மிகக் கடுமையான போட்டிகளை, இப்புத்தாண்டில் நீங்கள் சமாளிக்க வேண்டிவரும். வியாபாரம் சம்பந்தமாக வெளியூர்ப் பயணங்கள் அதிகமாக இருக்கும். அடிக்கடி அதிக அலைச்சலினால், உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். வர்த்தகத் துறையினர், கடனுக்கு சப்ளை செய்வதைத் தவிர்ப்பது அவசியம் என்பதை கிரக நிலைகள் எடுத்துக் கூறுகின்றன. சிலரால், ஏமாற்றப்படுவதற்கு சாத்தியக்கூறு உள்ளது. புதிய முயற்சிகளை ஆனி மாதம் முடியும் வரை ஒத்திப்போடுவது விவேகமாகும். பிறரை நம்பி கடன் கொடுத்தால், அது திரும்பி வராது. இத்தகைய தருணங்களில்தான் நாம் எத்தகைய விஷயங்களில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை, இருட்டில் வழிகாட்டும் கை விளக்காக ஜோதிடம் எனும் அற்புதக் கலை திகழ்கிறது.

கலைத்துறையினர்: இப்புத்தாண்டில் அதிக நன்மைகளை நீங்கள் எதிர்பார்ப்பதில் பயனில்லை. குரு, அனுகூலமாக இல்லா நிலையில், சுக்கிரன் ஒருவரே உங்களுக்கு ஆதரவாக சஞ்சரிக்கிறார். ராகுவினாலும், எவ்வித நன்மையும் உங்களுக்குக் கிடைக்காது. ஆதலால் கையில் இருப்பதைக் கொண்டு சமாளித்துக் கொள்ளவேண்டும், இப்புத்தாண்டில் என்பதை கிரக நிலைகள் தெளிவாகக் காட்டுகின்றன. குறிப்பாக, நடிகர்கள் மற்றும் நடிகைகள் ஆகியோருக்கும் சற்று சிரமமான ஆண்டாகும். வீட்டு வேலைக்காரர்கள், வாகனம் ஓட்டுநர்கள் ஆகியோரால் பிரச்னைகள் ஏற்படும்.

அரசியல்துறையினர்: சுக்கிரன் ஒருவரைத்தவிர மற்ற கிரகங்கள் அைனத்தும் அனுகூலமற்ற நிலைகளினால், சஞ்சரிக்கின்றனர். மேலும், இவ்வாண்டு முழுவதும், ஏழரைச் சனிக் காலம் நீடிக்கிறது. கும்பம், சனி பகவானின் ஆட்சி வீடாகத் திகழ்வதால், சனி பகவானால் ஏற்படும் பிரச்னைகள் கடுமையாக இராது. மேல்மட்டத் தலைவர்களுடன் கருத்துவேற்றுமை ஏற்படக்கூடும். ஏழரைச் சனியின் விளைவினால், கட்சிமீது நீங்கள் கொண்டுள்ள, விசுவாசத்தை மேல்மட்டத் தலைவர்களைச் சந்தேகிப்பார்கள். இதற்குக் காரணம். உங்களைப் பற்றி தவறான செய்திகளை கட்சியிலுள்ளவர்களே. தலைவர்களிடம் புகார் செய்துள்ளனர். அவர்கள் விதைத்த சந்தேகம் எனும் விஷ விருட்சம் தலைவர்கள் மனதில் வேரூன்றி வளர்ந்துவிட்டது, சந்தேகம் என்பது, எவராலும் அடக்க முடியாத பேயாகும். தற்போதுள்ள அரசியல் நிலையில் எவர் எதைச் சொன்னாலும், அதுவே உண்மையாகிவிடுகிறது! எவர் நண்பர், எவர்எதிரிஎன்பதைச் சரியாக எவராலும்கண்டுபிடிக்க இயலவில்லை!ஆதலால் எச்சரிக்கையுடன் இருங்கள். வரவிருக்கும் தேர்தலில் நின்றால், வெற்றிக்காகக் கடுமையாக பாடுபட வேண்டியிருக்கும்.

மாணவ – மாணவியர்: கல்விக்கு அதிபதிகளான, புதன் உள்ளிட்ட அனைத்து கிரகங்களும், ஓரளவு உங்களுக்கு ஆதரவாகவே சஞ்சரிப்பதால், படிப்பில் முன்னேற எவ்வித பாதிப்புமின்றி, நீடிக்கிறது, நேர்முகத் தேர்வுகளில் வெற்றி ஏற்படுவது நிச்சயம்! அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்குச் சென்று உயர் கல்வி பெற ஆரோக்கியம் இருப்பின் அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளில் இறங்கலாம். கிரக நிலைகளின்படி விசா, எளிதில் கிடைக்கும்.

விவசாயத் துறையினர்: செவ்வாய் ஒரே சீராக சஞ்சரிக்கின்றார், இப்புத்தாண்டு முழுவதும். விவசாயத்திற்கு, தொடர்புள்ள மற்ற கிரகங்களும், ஆதரவாக இருப்பதால், விளைச்சலும் வருமானமும் திருப்திகரமாக இருக்கும். ஆடு – மாடுகள் நல்ல அபிவிருத்தியை அடையும். காலத்தில் மழை பெய்யும். உங்கள் விளைச்சல்களுக்கு சந்தையில் நல்ல விலை கிடைக்கும். பழைய கடன்களைத் தீர்த்து நிம்மதி பெறுவதற்கு, கிரக நிலைகள் உதவிகரமாக அமைந்துள்ளன, இந்தப் புத்தாண்டு முழுவதும். ஏழரைச் சனியின் பாதிப்பினால், வயல்களில் கடுமையாக உழைக்கவேண்டி வரும். இரவு நேரங்களில், துணையில்லாமல் தனியே செல்ல வேண்டாம்.

பெண்மணிகள்: ஏழரைச் சனியின் ஆரம்பப் பிடியில் இருப்பதால், தேவையற்ற அலைச்சலும், தலைவலி, மூட்டுவலி, இடுப்பு வலி, மாதவிடாய் சம்பந்தமான கோளாறுகள் ஆகியவற்றினால், சிரமப்பட வேண்டியிருக்கும். இரவு நேரங்களில் தூக்கம் வருவது கடினமாக இருக்கும். கூடியவரையில், தூக்க மாத்திரை போட்டுக்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. அதற்குப் பதில், உறங்கப் போகும் முன், பாலின் சிறிது கசகசாவை கலந்து சூடாக்கிப் பருகுவதுஇயற்கையாகவே தூக்கம் ஏற்படுவதற்கு உதவும். பின்விளைவு ஏதுமில்லை!

அறிவுரை: மனதை நிம்மதியாக வைத்துக் கொள்ளுங்கள். ஏழரைச் சனி என்றாலே, ஆபத்து என்ற கற்பனையான அச்சத்தை விலக்கிவிடுங்கள். ஏழரைச் சனிக் காலத்தில், மற்ற கிரகங்களின் சஞ்சார நிலைகளையும் ஆராய்ந்து பார்த்தே பலன்களைக் கூறவேண்டும் எனக் கூறுகிறது “பிருஹத் ஸம்ஹிதை” என்னும் மிகப் பழைமையான ஜோதிட கிரந்தம்.

பரிகாரம்: சனிக்கிழமைதோறும் வீட்டின் பூஜையறையிலோ அல்லது அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றிலோ ஐந்து மண் அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் தீபம்ஏற்றி வந்தால் அற்புத பலன் கிடைக்கும்.

Dinakaran- astrology-logo

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Download Our Apps

Follow Us