எந்த சூழ்நிலையையும் எளிமையாக கையாளும் மீனராசி அன்பர்களே, இந்த வருடம் உங்களுக்கு ஏழரைச் சனி ஆரம்பிக்க இருப்பதால் குறிப்பிடும் விஷயங்களில் கவனமாக இருந்தால் வீண் பிரச்னைகளை தவிர்க்கலாம். எதிலும் பொறுமை, நிதானம் விழிப்புணர்வு, அவசியம். 21-4- 2023 வரை கால நிகழ்வுகளால் ஏற்பட்ட எதிர்மறை சிந்தனைகளை தவிர்த்து, நேர்மறையாக சிந்திப்பது நல்லது. வீண் மனக்கவலை, எதிர்காலம் பற்றிய பயம், வீண் கோபம் இவற்றை தவிர்ப்பது நல்லது. யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். யோகா தியானம் பயில்வது மன அழுத்தத்தை குறைத்து அமைதியை தரும். 21-4- 2023 க்கு பிறகு குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதார நிலை உங்கள் தேவைக்கு ஏற்ப உயரும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். நண்பர்கள் மற்றும் உறவுகளால் ஆதாயம் உண்டு.17-1-2023 வரை பொருளாதார நிலை உயரும். நீண்ட நாள் ஆசைகள், லட்சியங்கள் நிறைவேறும். திடீர் பணவரவு உண்டு. நண்பர்களால் ஆதாயம் உண்டு. சொத்து சேர்க்கை உண்டாகும். முக்கிய பிரமுகர்களால் ஆதாயம் உண்டாகும். சமூகத்தில் அந்தஸ்து செல்வாக்கு உயரும்.17-1-2023 க்கு பிறகு ஏழரைச் சனியில் விரயச் சனி ஆரம்பிப்பதால், யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். உறவுகள் மற்றும் நண்பர்களால் பிரச்னை வர வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. மற்றவர்களுக்காக ஜாமீன் கையெழுத்து போன்ற விஷயங்களில் ஈடுபட வேண்டாம். பணம் கொடுக்கல் வாங்கலில் அதிக கவனம் தேவை. சில நேரங்களில், சிலரால் நம்பிக்கை துரோகங்கள் உண்டாகும். 30-10-2023 வரை பேச்சில் கவனம் தேவை. குடும்பத்தில் வீண் பிரச்னைகளும். வாக்குவாதங்களும் வர வாய்ப்புள்ளதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. பொருளாதார நிலையில் ஏற்றத் தாழ்வுகள் வந்து நீங்கும். எதிலும் அவசர முடிவை தவிர்ப்பது நல்லது. பயணங்களில் கவனம் தேவை. 30-10-2023 க்கு பிறகு தேவையற்ற மன குழப்பம் அதிகரிக்கும். எதிர்காலம் பற்றிய பயம் கவலை வந்து நீங்கும். மனதில் தன்னம்பிக்கையும் தைரியத்தையும் வளர்த்துக் கொள்வது நல்லது. யோகா தியானம் பயில்வது மனத்தெளிவை அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் கவனம் தேவை. வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களை தவிர்ப்பது நல்லது.பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். அலுவலகத்தில் உங்கள் மதிப்பு உயரும்.கலைத்துறையைினருக்கு வீண் அலைச்சல்,காரிய தாமதம் போன்றவை ஏற்பட்டாலும் பொருளாதாரத்தில் குறைவிருக்காது. அரசியல்வாதிகளுக்கு கொடுக்கல்,வாங்கலில் இருந்த பிரச்னை தீரும். நீண்ட நாளாக இருந்த கஷ்டம் நீங்கும். மாணவர்களுக்கு கல்விக்காக செலவு உண்டாகும். கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும்.பரிகாரம்: திருச்செந்தூர் முருகப்பெருமான் வழிபாடு, வேல் வழிபாடு, கந்தசஷ்டி விரதம் இருப்பது மிகுந்த நன்மை தரும்….
551