கார்த்திகை 2, 3, 4 ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2, 3 ம் பாதம்
எந்த சூழ்நிலையிலும் பொறுமை தவறாத ரிஷப ராசி அன்பர்களே, இந்த வருடம் உங்கள் வாழ்வில் எல்லா வகையிலும் நல்ல மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் ஏற்படுத்தும். எதிலும் மகிழ்ச்சியையும், நன்மையையும் உண்டாக்கும். புதிய தொழில் முயற்சிகள் கைகூடும். சில நேரங்களில் தொழிலில் பணிச்சுமை அதிகரிக்கலாம். இருப்பினும் விடாமுயற்சி மிகப்பெரிய வெற்றியை ஏற்படுத்தும். எதிலும் காலதாமதத்தை தவிர்ப்பது நல்லது. எந்த காரியத்தையும் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். ஜென்மத்தில் குரு இருப்பதால் எதிர்மறை சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது. நேர்மறை சிந்தனை வளர்த்துக் கொள்ளுங்கள். கடந்த காலத்தில் நடந்த எதிர்மறை நிகழ்வுகளை பற்றி கவலைப்படாமல் அதில் உள்ள அனுபவத்தை எடுத்துக் கொள்வது படிப்பினையை தரும். மன குழப்பத்தை தவிர்க்க யோகா தியானம் செய்வது மன அமைதியை தரும்.ராகு கேது முறையே 11, 5 ல் இருப்பதால் எதிர்பாராத பண வரவு உண்டு. அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகள் உடல் நலனில் கவனம் தேவை. குழந்தைகளின் நட்பு வட்டத்தை கண்காணிப்பில் வைத்து வழிநடத்திச் செல்வது நல்லது. பூர்வீக சொத்தால் பிரச்னை வந்து நீங்கும். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய வியாபார முயற்சிகள் கைகூடும். உத்யோகத்தில் மன உளைச்சல் அதிகரிக்கும். இருப்பினும் பதவி ,ஊதிய உயர்வு உண்டு.மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.அரசியல்வாதிகளுக்கு தலைமையை அனுசரித்துச் செல்வது நல்லது. யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் எளிதில் கிடைக்கும்.
பரிகாரம்: ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதரை வெள்ளிக்கிழமை சென்று வழிபடுவது நன்மை தரும்.