விசாகம் 4 ம் பாதம், அனுஷம், கேட்டை
ஆழ்ந்த அறிவும், ஆராய்ச்சி திறனும் உடைய விருச்சிக ராசி அன்பர்களே, இந்த வருடம் உங்கள் வாழ்வில் நல்ல மாற்றமும் முன்னேற்றமும் ஏற்படும். எல்லா வகையிலும் அனுகூலமான பலன்கள் ஏற்படும். இதுவரை இருந்த பிரச்னைகளுக்கு ஒரு தீர்வு கிடைக்கும். குரு பகவான் 7 ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். கணவன் மனைவிக்குள் அன்பும் ஆதரவு அதிகரிக்கும். புரிந்துணர்வு ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் ஆதாயம் உண்டு. வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தங்கள் நன்மை தரும். திருமணம், குழந்தை பாக்கியம் போன்ற சுப காரியங்கள் நிகழும்.ராகு கேது பகவான் முறையே 5, 11 ல் இருப்பதால் குழந்தைகள் உடல் நலனில் கவனம் தேவை. குழந்தையின் நட்பு வட்டத்தை கண்காணிப்பில் வைத்து வழி நடத்திச் செல்வது நல்லது. பூர்வீக சொத்து வகையில் பிரச்னைகள் உருவாகும். மனக்குழப்பம் அதிகரிக்கும். நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். எதிர்பாராத பண வரவு உண்டு. நண்பர்கள் உறவினர்கள் பக்க பலமாக இருப்பார்கள். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டு. புதிய வியாபார முயற்சிகள் கைகூடும். கூட்டாளிகளால் ஆதாயம் உண்டு.உத்யோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பதவி உயர்வு, ஊதிய உயர்வு தேடி வரும்.மாணவர்கள் தேவையற்ற நட்பிலிருந்து விலகி இருப்பது அவசியம். அரசியல்வாதிகளுக்கு தலைமை உங்களுக்கு நெருக்கமாவார். சகாக்கள் ஆதரவாக செயல்படுவார்கள். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகளால் பிரபலமடைவர். புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
பரிகாரம்: தர்மபுரி அருகே அதியமான் கோட்டையில் உள்ள சொர்ண கர்ஷண பைரவரை செவ்வாய்கிழமை சென்று வழிபடுவது நன்மை தரும்.