விசாகம் 4ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை வரை
குடும்பம்: இந்தத் தமிழ்ப் புத்தாண்டு முழுவதும், சுக்கிரன் உங்களுக்கு அனுகூலமாக சஞ்சரிக்கிறார்! சித்திரை 18-ம் (1-5-2024) தேதியிலிருந்து, குரு பகவானும், உங்களுக்கு ஆதரவாக மாறி, இப்புத்தாண்டு முழுவதும், சுப பலத்துடன் திகழ்கிறார். அர்த்தாஷ்டக ராசியில் சனி – செவ்வாய் தோஷம் ஏற்பட்டுள்ளது. வருமானம் திருப்திகரமாக இருக்கும். வீண் செலவுகள் குறையும். உஷ்ண சம்பந்தமான பிணிகள் உடல் உபாதைகளை ஏற்படுத்தும். குறிப்பாக, சருமம் சம்பந்தமான பிரச்னைகள், எளிய மருத்துவ சிகிச்சை மூலம், குணம் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். சுப நிகழ்ச்சிகளும், சுபச் செலவுகளும் நிகழும். வெளிநாட்டில் பணியாற்றிவரும் நெருங்கிய உறவினர் ஒருவரின் வருகை மகிழ்ச்சியை அளிக்கும். திருமண முயற்சிகளுக்கு, ஏற்ற புத்தாண்டு இது! கருவுற்றிருக்கும் பெண்மணிகளுக்கு, சுகப் பிரசவம் ஏற்படும். ஒருசிலருக்கு, வசதியான வீட்டிற்கு மாற்றத்தை ஏற்படுத்துவார், செவ்வாய்.
உத்தியோகம்: அர்த்தாஷ்டகத்தி்ல் சனி சஞ்சரிப்பதாலும், ெசவ்வாய் இணைந்திருப்பதாலும், வேலைச்சுமை, சக்திக்கு மீறியதாக இருக்கும். அலுவலகப் பொறுப்புகள் காரணமாக, அடிக்கடி வெளியூர்களுக்குச் செல்ல நேரிடும். பயணங்களின்போது, விழிப்புடன் இருப்பது அவசியம். மேலதிகாரிகளின் கண்டிப்பு, கவலையை அளிக்கும். வெளிநாடு செல்லும் முயற்சிகளைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். ஏனெனில் கிரக நிலைகள் ஓரளவே சாதகமாக அமைந்துள்ளன. இடைத் தரகர்களால், ஏமாற்றப்படக்கூடும்.
தொழில், வியாபாரம்: தொழில் மற்றும் வர்த்தகத் துறைக்குப் பொறுப்பேற்றுள்ள கிரகங்கள், ஓரளவு அனுகூலமாக இருப்பதால், நல்ல முன்னேற்றம் ஏற்படும். சந்தையில் உங்கள் சரக்குகளுக்கு, நல்ல வரவேற்பு கிட்டும். அதனால், லாபம் உயரும். நிதி நிறுவனங்கள் தக்க தருணத்தில் உதவும். புதிய விற்பனைக் கிளைகளை ஆரம்பிப்பதற்கு, அனுகூலமான ஆண்டு இது! தொழிற்சாலையை, சிறு முதலீட்டில் அபிவிருத்தி செய்து கொள்ளலாம். ஏற்றுமதித் துறையினருக்கு, வியாபாரம் சம்பந்தமாக வெளிநாடு ஒன்றிற்குச் சென்றுவரும் சாத்தியக்கூறு உள்ளதையும் கிரக நிலைகள் குறிப்பிடுகின்றன. புதிய துறைகளில் முதலீடு செய்யலாம். இந்தச் சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் பயன்படுத்திக்கொள்ள கிரக நிலைகள் சுப பலம் பெற்றுள்ளன.
கலைத்துறையினர்: சுக்கிரனும், கலைத்துறைக்கு அதிகாரம் படைத்த மற்ற கிரகங்களும், சுபத்துவப் பாதைகளில் வலம் வருகின்றனர்! புதிய வாய்ப்புகள் எவ்வித முயற்சியுமின்றி, உங்களைத் தேடி வரும்.
அரசியல்துறையினர்: சுக்கிரன்தான் அரசியல் துறைக்கு பிரதான கிரகமாவார். செவ்வாய், சனி, ராகு ஆகிய மூவருக்கும் அரசியல் துறையில் அதிகாரம் உண்டு. நான்கு கிரகங்களின் சஞ்சார நிலைகளும், விருச்சிக ராசியினருக்கு இப்புத்தாண்டு ஓரளவு நன்மைகளையும், சில தருணங்களில், சில பிரச்னைகளையும் அளிக்கக்கூடியவை! ேகாள்சார விதிகளின்படி, இப்புத்தாண்டின் ஆரம்பத்திலிருந்து, கார்த்திகை 21-ம் (6-12-2024) தேதி வரை அரசியல் துறை அன்பர்களுக்கு, முன்னேற்றமான காலகட்டமாகும். மேல்மட்டத் தலைவர்களின் ஆதரவு மன நிறைவையளிக்கும். கட்சியில் செல்வாக்கு ஓங்கும். பிற அரசியல் கட்சிகளிலிருந்து அழைப்பு வரும். தங்கள் கட்சியில் சேரும்படி! அதன் காரணமாக, மனதில் சபலங்களும், அதே தருணத்தில் பயமும், தயக்கமும் உண்டாகும். எத்தகைய முடிவானாலும், சிந்தித்துச் செயல்படுங்கள்.
மாணவ – மாணவியர்: ஆவணி 18-ம் தேதி (3-9-2024) வரை வித்யா ஸ்தானமும், வித்யா காரகரும் சுப பலம் பெற்று வலம் வருகின்றனர். இக்காலகட்டத்தில், கல்வியில் சிறந்த முன்னேற்றம் ஏற்படும். விளையாட்டுகள், பேச்சுப் போட்டிகள், சங்கீதம் ஆகிய அனைத்திலும் வெற்றிபெற்று பரிசு வாங்கும் யோகம் அமைந்துள்ளது. பாடங்களில் உற்சாகத்துடன் மனம் ஈடுபடும். ஆவணி 19-ம் (4-9-2024) தேதியிலிருந்து, படிப்பில் சிறிது பின்னடைவு ஏற்படும். உடலில் அசதியும், மனதில் சோர்வும், ஏற்பட வாய்ப்புள்ளது.
விவசாயத் துறையினர்: விருச்சிக ராசி அன்பர்களுக்கு, ராசி நாதன் செவ்வாய்! அவரே பூமிகாரகராகியபடியாலும், கோள்சார விதிகளின்படி, உங்களுக்கு பல வகைகளிலும் ஆதரவாகவே சஞ்சரிக்கிறார், இப்புத்தாண்டில்!! ஜனன கால கிரக நிலைகளுக்கேற்ப, பலருக்கு சொந்த வீடு அமையும் யோகம் உள்ளது, இப்புத்தாண்டில்! சிலருக்கு, வசதியான வீட்டிற்கு மாற்றம் ஏற்படும். ஆடு, மாடுகள் சிறந்த அபிவிருத்தியை அடையும். அரசாங்கச் சலுகைகள் தேடி வரும். பழைய கடன்கள் இருப்பின், அவற்றை அடைத்து, நிம்மதி பெறலாம், இந்தக் குரோதி தமிழ்ப் புத்தாண்டில்!!
பெண்மணிகள்: குரு, சுக்கிரன் ஆகிய இரு கிரகங்களின் பரிபூரணமான ஆசி இப்புத்தாண்டு முழுவதும் உங்களுக்குக் கிடைப்பது, உங்கள் அதிர்ஷ்டமே! மன நிறைவான குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சியளிக்கும் உத்தியோகம். அன்பும், பாசமும் அள்ளித்தரும் குழந்தைகள், அந்நியோன்யம் நிறைந்த கணவர் என குறையில்லாத புத்தாண்டு இந்தக் குரோதி தமிழ்ப் புத்தாண்டு! கிரக நிலைகளின்படி இந்த ஆண்டு உங்களுக்கு ஓர் அரிய வரப்பிரசாதம் என்றே கூற வேண்டும்!!
அறிவுரை: வருவதை வாரியிறைத்து விடாமல், எதிர்காலத்திற்கென்று இப்போதே சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்!
பரிகாரம்: அர்த்தாஷ்டக நிலையில் சஞ்சரிக்கும் சனி பகவானுக்கு, பரிகாரம் செய்வது நன்மை செய்யும். சனிக்கிழமைகளில் பகல் உணவு ஒரு பொழுது மட்டும் அருந்தி, இரவில் உபவாசம் இருத்தல் மிகச் சிறந்த பரிகாரமாகும். இரவில் பால் – பழம் மட்டும் சாப்பிடலாம். கைமேல் பலன் கிடைக்கும்.