search-icon-img
featured-img

ரிஷபம்

Published :

(01.01.2026 முதல் 31.12.2026 வரை )

(கிருத்திகை 2ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2ம் பாதம் வரை)

குடும்பம்: தன ஸ்தானத்தில் வக்கிர கதியில் குருவும், சுக ஸ்தானத்தில் கேதுயும்சஞ்சரிப்பதால், வரவிற்கு மீறிய செலவுகள்ஏற்படும். சமாளிப்பது மிகவும் கடினமாக இருக்கும். நெருங்கிய உறவினர்களிடையே ஒற்றுமை குறையும். அஷ்டமத்தில் சூரியன் - செவ்வாய் கூட்டுச் சேர்க்கையினால், உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படக்கூடும்.மருத்துவச் செலவுகளைத் தவிர்க்க இயலாது. குறிப்பாக, சரும உபாதைகளால் அவதியுற நேரிடும். திட்டமிட்டு செலவு செய்யாவிடில், மாதக் கடைசியில் பிறர் உதவியை நாட வேண்டிவரும்.ஒருசிலருக்கு, வீடுமாற்றமும் ஏற்படக்கூடும். வெளியூர்ப் பயணங்களின்போது, எச்சரிக்கையாக இருங்கள்! மணமேடைகாண காத்திருக்கும் பெண் அல்லது பிள்ளைகளின் ஜாதகங்களை தீர விசாரித்து, அத ிஜாக்கிரதையுடன் ஆராய்தல் நலம். ஏமாந்துவிட நேரிடும், அதனால்தான் இந்த எச்சரிக்கை.கூடியவரையில் இரவு நேரங்களில் வாகனம் ஓட்டுவதைத் தவிர்ப்பது நல்லது. அஷ்டம ராசியில், சூரியன் - செவ்வாய் இணைந்திருப்பதால், சிறு விபத்துகள் ஏற்படக்கூடும் என ஜோதிடக் கிரந்தங்கள் எச்சரிக்கை செய்கின்றன.

உத்தியோகம்: அன்றாடப் பணிகளில், மிகவும் கவனமாக இருத்தல் அவசியம் என கிரக நிலைகள் சுட்டிக்காட்டுகின்றன. மேலதிகாரிகளுடன் பழகுவதில் அளவோடு இருத்தல் நல்லது. முக்கிய அலுவலக விஷயங்களைப் பற்றி சக-ஊழியர்களுடன் விவாதிக்கக் கூடாது.புதிய வேலைக்கு முயற்சித்துவரும் ரிஷப ராசி அன்பர்கள், இடைத் தரகர்களை நம்பி, பணம் கொடுத்து ஏமாந்துவிட வேண்டாம்.

தொழில், வியாபாரம்: அன்றாட சந்தை நிலவரத்தைக் கூர்ந்து கவனித்து, அதற்கேற்ப உங்கள் சரக்குகளின் விலைகளை நிர்ணயிப்பது மிகவும் அவசியம் என கிரக நிலைகள் குறிப்பிடுகின்றன.வங்கி மற்றும் இதர நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்பு குறையக் கூடும். கூட்டாளிகளுடன் ஒற்றுமைக் குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது.முன்பணம் இல்லாமல், சரக்குகளை அனுப்புவதை ஏற்றுமதித் துறையினர் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். புதிய முதலீடுகளுக்கும் இம்மாத கிரக நிலைகள் அனுகூலமாக இல்லை!

கலைத் துறையினர்: கலைத் துறை அன்பர்கள், கைப் பணத்தை எண்ணிச் செலவழிப்பது மிகவும் அவசியம். ஏனெனில், இவ்வாண்டில் வாய்ப்புகளும், வருமானமும் குறையக்கூடும் என எச்சரிக்கை செய்கின்றன கிரக நிலைகள்.கர்நாடக சங்கீத வித்வான்கள், நாதஸ்வரக் கலைஞர்கள், பரதநாட்டியக் கலைஞர்கள், உபன்யாசகர்கள் ஆகியோருக்கு எதிர்பார்க்கும் அளவிற்கு வாய்ப்புகள் கிடைப்பது கடினமே!!ஆதலால், கைப் பணத்தைச் சிக்கனமாகச் செலவு செய்வது உங்கள் எதிர்காலத்திற்கு நன்மை செய்யும்.

அரசியல் துறையினர்: கிரக நிலைகள் ஓரளவே உங்களுக்கு அனுகூலமாக உள்ளன, இப்புத்தாண்டில்! கட்சித் தலைவர்களின் ஆதரவு எதிர்பார்க்கும் அளவிற்கு இராது.கையிலுள்ள பணத்தை கெட்டியாகப் பாதுகாத்துக் கொள்வது நல்லது! கட்சி செயல்பாடுகளில், தீவிரமாக உங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டாம்.உயர்மட்டத் தலைவர்கள் உங்களை காரணமில்லாமல் புறக்கணிக்கக்கூடும். ஆதலால், அரசியல் கசக்கும்! ஆன்மிகம் அமைதி தரும்!!

மாணவ - மாணவியர்: கல்வித் துறைக்கு அதிபதியான புதனும், அத்துறையுடன் தொடர்புள்ள மற்ற கிரகங்களும் அனுகூலமாக இல்லை - இம்மாதம் முழுவதும்!

படிப்பில் மனத்தை ஊன்றிச் செலுத்துவது கடினமாக இருக்கும். கூடியவரையில், சக-மாணவ - மாணவியர்களுடன் நெருங்கிப் பழகாமலிருப்பது மிகவும் அவசியம்.

விவசாயத் துறையினர்: விவசாயத்திற்கு அவசியமான தண்ணீர், உரம், விதைகள், காலநடைகள் ஆகியவற்றிற்குக் குறைவிராது.அதிக வெயிலினால் பயிர்கள் பாதிக்கப்படக்கூடும்.ஆயினும், அந்தப் பாதிப்பு மிகவும் குறைவாகவே இருக்கும். தற்போது நடைபெறும் தசா, புக்திகள் அனுகூலமாக இருப்பின், புதிய விளைநிலம் சேரும் பாக்கியமும் உள்ளது.ஒருசிலருக்கு, வெளிநாடுகளிலிருந்து புதிய ஆர்டர்கள் கிடைக்கும். விவசாயப் பணிகளை நவீனமாக்கும் வாய்ப்பும், வசதியும் உருவாகும்.பழைய கடன்கள் இருப்பின், அவற்றை அடைத்து, உங்கள் பொருளாதார நிலையை சீர்செய்து கொள்ள அரிய வாய்ப்பு இது. இதைத் தவறவிடாது பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

நீதி மன்ற வழக்குகள் இருப்பின், வெற்றி மாலை உங்களைத் தேடி வரும்.

பெண்மணிகள்: ஜோதிடக் கலையின் துல்லிய விதிகளின்படி, பெண்மணிகளின் வாழ்க்கையில், பல அம்சங்களைத் தனது பிடியில் வைத்துக் கொண்டுள்ளார் சுக்கிரன்! அந்தச் சுக்கிரன், அனுகூலமாக சஞ்சரிக்கவில்லை!!

குடும்பத்தைப் பற்றிய கற்பனையான கவலைகள் மனத்தை அரிக்கும். இது உடல் ஆரோக்கியத்தையும், மனநலனையும் பாதிக்கும்.நெருங்கிய உறவினர்களுடன் சற்று அனுசரித்து நடந்து கொள்வது, பிரச்னைகளைத் தவிர்க்க உதவும்.

அறிவுரை: கூடியவரையில், வீண் அலைச்சல்களையும், கவலைகளையும் தவிர்ப்பது நல்லது.2. நெருங்கிய உறவினரிடம் சற்று விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளல் அவசியம்.3. திருமணத்திற்கு பொருத்தம் பார்க்கும்போது, 5-ம் இடம், 7-ம் இடம் மற்றும் 8-ம் இடங்களை அதிஜாக்கிரதையாக ஆராய்ந்து பார்த்து முடிவெடுக்க வேண்டும் என்பதை மனத்தில் கொள்ளுங்கள். காரணம், மணமக்களில் யார் பாதிப்பிற்குள்ளானாலும், பெற்றோராகிய நீங்கள் மன வருத்தத்திற்கு உள்ளாக நேரிடும். அதனால்தான் இந்த அறிவுரை.

பரிகாரம்: ெவள்ளிக் கிழமைகளில் அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றில், மாலை வேளையில் மூன்று அகல் விளக்குகளில் நெய் தீபம் ஏற்றி வந்தால் போதும்.2. தினமும் சுந்தர காண்டம் ஒரு சர்க்கம் பாராயணம் செய்வது மிகச் சிறந்த பரிகாரமாக அமையும்.