(அசுவினி, பரணி, கிருத்திகை முதல் பாதம் வரை)
குடும்பம்: இதுவரையில், உங்கள் ராசிக்கு "திருதீய ஸ்தான"மாகிய மூன்றாம் இடத்தில் மிதுனத்தில் சஞ்சரித்துவந்த குரு பகவான், இப்போது "அர்த்தாஷ்டக" ராசியும், அவரது உச்ச ராசியுமான கடகத்திற்கு மாறியிருக்கிறார்! கடக ராசியில் சஞ்சரித்தபடியே, விருச்சிக ராசியையும், மகர ராசியும், மீன ராசியும் தனது சுபப் பார்வையினால் பலப்படுத்துகிறார். ராசியை விட்டு, அவரது உச்ச வீடான கட்டுக்கடங்காது ஏற்பட்டுவந்த செலவுகள் இனி கட்டுப்படும்.இனி ஏற்படும் செலவுகள்கூட, பெரும்பாலும் சுபச் செலவுகளாகவே இருக்கும். குடும்பத்தில் ஏற்பட்டுவந்த கருத்துவேற்றுமையும், தேவையற்ற வாக்குவாதமும் இனி படிப்படியாகக் குறைவதை அனுபவத்தில் பார்க்கலாம். திருமண முயற்சிகளில் தொடர்ந்து ஏற்பட்டுவந்த, பின்னடைவு இனி இராது. கணவர் - மனைவியரிடையே கவலையளித்துவந்த ஒற்றுமைக் குறைவு இனி இராது. வருமானத்திற்கு மீறிய செலவுகளும், இனி கட்டுக்கடங்கியே இருக்கும். திருமண வயதில், பெண் அல்லது பிள்ளை இருப்பின், வரன் அமைவதில் தொடர்ந்து ஏற்பட்டுவந்த தடங்கல்கள் நீங்கி வரன் அமையும். வெளிநாட்டில் வேலைபார்த்துவரும் நெருங்கிய உறவினர் ஒருவரின் வருகை, குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். ஒரு சிலருக்கு, வீடு மாற்றமும் ஏற்படக்கூடும் என்பதை செவ்வாயின் நிலை எடுத்துக்காட்டுகிறது.
உத்தியோகம்: வேலைபார்க்கும் இடத்தில் தொடர்ந்து ஏற்பட்டுவந்த, பிரச்னைகள் படிப்படியாகக் குறைய ஆரம்பிக்கும். உங்களைக் கண்டாலே முகத்தைச் சுளிக்கும் மேலதிகாரி ஒருவர், இடமாற்றம் செய்யப்படுவதால், அலுவலகத்தில் நிம்மதியாக உங்கள் கடமைகளில் மனத்தைச் செலுத்தலாம். புதிய வேலைக்கு முயற்சித்துவரும் மேஷ ராசி அன்பர்களுக்கு, நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். தொடர்ந்து உடல் ஆரோக்கியக் குறைவினால் அவதிப்பட்டுவரும் மேஷ ராசியினர், உடல் நலனில் நல்ல குணம் தெரியும்.
தொழில், வியாபாரம்: தொடர்ந்து உங்களுக்குக் கவலையளித்து வந்த நியாயமற்ற வர்த்தகப் போட்டிகளின் கடினம் குறைவதை அனுபவத்தில் காணமுடியும். நிதி நிலைமையில் ஏற்பட்டுவந்த பல பிரச்னைகள், நல்லபடியே தீரும். இதுவரை உங்களுக்கு எவ்விதச் சலுகைகளையும், அளிக்க மறுத்துவந்த வங்கிகள் இனி பல உதவிகளையும் செய்ய முன்வருவார்கள். வர்த்தகக் கூட்டாளிகளுடன் ஏற்பட்டுவந்த கருத்துவேற்றுமை சமரசத்தில் முடியும். அதனால், மனம் நிம்மதி பெறும். வியாபாரத்தில், முழுமையாக மனத்தைச் செலுத்த முடியும். வெளியூர்ப் பயணங்களினால் புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.பலவிதப் பிரச்னைகளினால், மனம் நொந்து வந்த உங்களுக்கு, உற்சாகம் ஊட்டும் அளவிற்கு, கிரக நிலைகள் உதவிகரமாக மாறியுள்ளன. சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஏற்றுமதி, இறக்குமதித் துறையினர், வியாபாரம் சம்பந்தமாக வெளிநாடு ஒன்றிற்குச் சென்று வரும் வாய்ப்பும் உருவாகும். அதன் காரணமாக, பிரபல நிறுவனங்களுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உங்கள் பொருளாதார நிலையை முன்னேற்றமடையச் செய்வதற்கு இந்த ஒப்பந்தங்கள் உதவிகரமாக அமைவதை அனுபவத்தில் காணலாம். புதிய விற்பனைக் கிளைகள் திறப்பதற்கும் கிரக நிலைகள் சாதகமாக உள்ளன. நிதி நிறுவனங்கள் பலவித சலுகைகளையும் அளிப்பார்கள்.வர்த்தகக் கூட்டாளிகள் துணை நிற்பார்கள். தசா, புக்திகள் அனுகூலமாக இருப்பின், வெளிநாடு ஒன்றிற்கு, வர்த்தகம் சம்பந்தமாக சென்று வரும் சாத்தியக்கூறும் உள்ளதை கிரக நிலைகள் குறிப்பிடுகின்றன.
கலைத் துறையினர்: புதிய வாய்ப்புகளும், வருமானமும் உங்களைத் தேடி வரும் என்பதைக் குறிப்பாக, கலைத் துறைக்கு ஆதிபத்தியம் கொண்டுள்ள சுக்கிரனின் சஞ்சார நிலை எடுத்துக்காட்டுகிறது.ஒரு சிலருக்கு, வெளிநாடு சென்று, அங்கு நிகழும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பும் உங்களைத் தேடி வரும். உங்கள் பொருளாதார நிலையையே மாற்றியமைக்கவுள்ள நேரமிது, பயன்படுத்திக் கொள்வது உங்கள் திறமையில்தான் உள்ளது.
அரசியல் துறையினர்: அரசியல் துறையினரின் நன்மைகளுக்கு அதிகாரம் படைத்த, பிரதான கிரகம் சுக்கிரனே! அந்தச் சுக்கிரன், உங்களுக்கு ஆதரவாக நிலைகொண்டுள்ளதால், மக்களிடையே செல்வாக்கு உயரும். உயர்மட்டத் தலைவர்களின் ஆதரவும் உங்கள் மீது கொண்டு்ள்ள நம்பிக்கையும் உற்சாகத்தை அளிக்கும். தசா, புக்திகள் சுப பலம் பெற்றிருப்பின், கட்சியில் புதிய பொறுப்புகளை ஏற்க நேரிடும்.
மாணவ - மாணவியர்: மாணவ - மாணவியரின் முன்னேற்றத்தை, தனது பிடியில் வைத்துக் கொண்டுள்ளது, வித்யா காரகரான புதனாவார். அந்தப் புதனும், சுக்கிரனும் உங்களுக்கு அனுகூலமாக வலம் வருகிறார். நினைவாற்றலும், கிரகிப்புத் திறனும் அதிகரிக்கும். பாடங்களில் மனம் படியும்.
விவசாயத் துறையினர்: விவசாயத் துறையை, தனது பிடியில் கொண்டுள்ளது, பூமி காரகரான, செவ்வாய்க் கிரகமாகும். அவர் உங்களுக்கு பரிபூரண சுப பலம் பெற்று வலம் வருவதால், விவசாயத்திற்கு அத்தியாவசியமான, தண்ணீர், உரம், விதைகள், நாற்றுகள், கால்நடைகள் ஆகியவை குறைவின்றிக் கிடைக்கும்.
பெண்மணிகள்: இம்மாதம் முழுவதும், சுக்கிரன், செவ்வாய் மற்றும் புதன் ஆகிய மூவரும் சுப பலத்துடன் சஞ்சரிப்பதால், பெண்மணிகளுக்கு உற்சாகத்தையளிக்கும் மாதம் இது. கணவரின் ஆதரவு, குழந்தைகளின் கல்வி முன்னேற்றம், குடும்பச் சூழ்நிலை ஆகியவை மன நிறைவையளிக்கும்.
அறிவுரை: சிக்கனமாக இருந்து, பணத்தைச் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். எதிர்காலத்திற்கு உதவும்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் மட்டும், அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றில், மாலை வேளையில், தீபமேற்றி வந்தால் போதும். கோயிலுக்குச் செல்ல முடியாதவர்கள், உங்கள் வீட்டுப் பூஜையறையிலேயே வழக்கமாக இருக்கும் விளக்கைத் தவிர மற்றொரு அகல் விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து விளக்கேற்றினாலும் அதே பலன்களைப் பெறலாம்.


