22-4-2023 முதல் 13-4-2024 வரை
(அசுவினி,
பரணி, கிருத்திகை முதல் பாதம் வரை)
குடும்பம்: இதுவரை மேஷ ராசிக்கு விரய ஸ்தானமாகிய மீன ராசியில் வலம் வந்து கொண்டிருந்த குரு பகவான், தற்போது ஜென்ம ராசிக்கு மாறியுள்ளார். ஜோதிடக் கலையின் பொது விதிகளின்படி, ஜென்ம ராசியில் குரு சஞ்சரிக்கும் காலத்தில், கஷ்டங்கள் ஏற்படும். இதற்கு ஏற்றாற்போல், ராமபிரான் வனவாசம் சென்றபோது அவரது ஜாதகத்தில் குரு அவரது ஜென்ம ராசியில் அமர்ந்திருந்தார். இது போன்றே புராதன காலத்தில், பிரசித்திப் பெற்ற பல மன்னர்களுக்கு அவர்களின் ஜாதகப்படி, ஜென்ம ராசியில் குரு சஞ்சரித்தபோது பல துன்பங்களுக்கு ஆளாகினர். ஆகவே, மக்களிடையே, ” ஜென்ம குரு வனத்திலே…” என்றொரு மூதுரையும் மக்களிடையே உருவாகியது! சற்று சிந்தித்துப் பார்த்தால், இத்தகைய பொதுக் கருத்து நியாயமற்றது என்பது புலப்படும். ராமபிரான் சாதாரண மனிதனல்லன்! அவர் ஓர் மகத்தான அவதார புருஷர். மேலும் அவர் அவதரித்தபோது, 5 கிரகங்கள் அவர்களது உச்ச ராசிகளில் அமர்ந்திருந்தனர்.
அவதார புருஷர்களுடைய ஜாதகங்களுடன், எளிய மானிடர்களான நமது ஜாதகங்களோடு ஒப்பிட்டுப் பார்ப்பது முற்றிலும் தவறாகும்! ஜென்ம ராசியில் குரு சஞ்சரிக்கும்போது, குடும்பக் கவலைகள் அதிகரிக்கும். திருமண முயற்சிகள் தள்ளிப்போகும். தசா, புக்திகள் தோஷமுற்று இருப்பின், கணவர் – மனைவி உத்தியோகம் காரணமாகவோ அல்லது வேறு காரணங்களினாலோ தற்காலிகமாக பிரிந்திருக்க நேரிடும். ஆராய்ந்து பார்த்தால், இந்த குருபகவானின் மேஷ ராசி பிரவேசம், பலவிதங்களிலும் உங்களுக்கு சிற்சில பாதிப்புகளையே ஏற்படுத்தும் என்பது புலனாகும். ஜென்ம ராசியிலுள்ள ராகுவினால் ஏற்பட்டுள்ள மிகக் கடுமையான தோஷம் குருவின் சேர்க்கையினால் நீங்கிவிடுவது ஓர் மிகச் சிறந்த வரப்பிரசாதம் என்பதே உண்மையாகும். ஆரோக்கியத்தில் நல்ல அபிவிருத்தியைக் காணலாம். சுக்கிரனின் நிலையினால், வருமானம் போதிய அளவிற்கு இருக்கும். பூர்வபுண்ணியம், களத்திரம், பாக்கியம் ஆகிய இடங்களுக்கு, குரு பகவானின் சுபப் பார்வை கிடைப்பதும், பல நன்மைகளுக்கு வழிவகுக்கிறது.
உத்தியோகம்: லாப ஸ்தானத்தில் சனி பகவான் நிலைகொண்டுள்ள தருணத்தில், குரு, ெசவ்வாயின் ராசியான மேஷத்திற்கு மாறியிருப்பது, அதிக அலைச்சலையும், பொறுப்புகளையும், வெளியூர்ப்பயணங்களையும் அளித்தாலும், நிர்வாகத்தினரின் பாராட்டுதலும், உயரதிகாரிகளின் ஆதரவும் கிட்டும். வெளியூர்ப் பயணங்களின்போது, பணம் விரயமாகும். வேலை பார்க்கும் இடத்தில், பல காரணங்களினால் பணிகளில் கவனக்குறைவு ஏற்படக்கூடும். ஆயினும், உங்கள் வேலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதவாறு பார்த்துக்ெகாள்வார் சனி பகவான்!
தொழில், வியாபாரம்: குருவின் ஜென்ம ராசி சஞ்சாரம், நியாயமற்ற போட்டிகளை அதிகரிக்கச் செய்யும். ஆயினும், வர்த்தகத் துறைக்கு ஆதிபத்தியம் கொண்டுள்ள சனி பகவான் சிறந்த சுப பலம் பெற்று நிலைகொண்டுள்ளதால், லாபம் சிறிது குறைந்தாலும், நஷ்டம் ஏற்பட வாய்ப்பில்லை! சகக் கூட்டாளிகளுடன் கருத்து வேற்றுமை ஏற்படும். கொடுக்கல் – வாங்கலில் பகையுணர்ச்சி மேலிடும். நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்பு குறையும். வியாபாரம் சம்பந்தமான முக்கிய முடிவுகளில், தவறுகள் ஏற்படக்கூடும். கூடியவரையில், இந்த ஒருவருட காலத்தில், புதிய முதலீடுகளையும், விஸ்தரிப்புத் திட்டங்களையும் ஒத்திப்போடுதல் நல்லது. ஏற்றுமதித் துறையினருக்கு, புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.
கலைத் துறையினர்: கலைத்துறைக்கு அதிபதியான, சுக்கிரனும், ஜீவன காரகரான சனி பகவானும், சாதகமான நிலைகளில் சஞ்சரிக்கும்போது, குரு பகவானின் மேஷ ராசி மாறுதல் நிகழ்கிறது. புதிய வாய்ப்புகள் கிடைப்பதில் எவ்விதப் பிரச்னையும் இராது. திரைப்பட நடிகர், நடிகைகளும், கடினமான பாத்திரங்களில் நடிக்கவேண்டிவரும். திருமணமாகியுள்ள கலைத் துறையினருக்கு, குடும்ப ஒற்றுமை பாதிக்கப்படும். அதனால், கவலைகள் அதிகரிக்கும். வருமானம் குறையும்.
அரசியல் துறையினர்: குடும்பப் பிரச்னைகளினால், கட்சிப் பணிகள் பாதிக்கப்படும். மனநிம்மதி குறையும். பொதுக் கூட்டங்களில் பேசும்போது, மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய தருணம் இது. மேல்மட்டத் தலைவர்களுடன் கருத்துவேற்றுமை ஏற்படுவதால், மனத்தில் கவலையும், அச்சமும் மேலிடும். மிகவும் சாதுர்யத்துடன் இருக்கவேண்டியது மிகவும் அவசியம். ஒரு சிலருக்கு, வழக்குகளில் சிக்கி அவதியுறும் சாத்தியக்கூறும் உள்ளதை குருவின் நிலை எடுத்துக்காட்டுகிறது.
விவசாயத் துறையினர்: விவசாயத் துறைக்கு அதிகாரம் படைத்த செவ்வாய், சுபபலம் பெற்றுள்ளதால், விளைச்சலும், வருமானமும் திருப்திகரமாக இருக்கும். ஜென்ம ராசி குருவினால், வயல் பணிகளில் கடின உழைப்பு இருக்கும். ஏதாவதொரு உடல் உபாதையினால் ஓய்வெடுக்க நேரிடும். அண்டை நிலத்தவருடன் பகையுணர்ச்சி மேலிடும். கால்நடைகளின் பராமரிப்பு கருதி புதிய கடன்களை ஏற்க நேரிடும்.
மாணவ, மாணவியர்: குடும்பக் கவலைகள் மற்றும் சூழ்நிலை கவலையை அளிக்கும். இவற்றின் காரணமாக, பாடங்களில் மனத்தைச் செலுத்த இயலாத நிலை ஏற்படும். ராகு இணைந்திருப்பதால், சிறு, சிறு உடல் உபாதைகள் மற்றும் கவலைகள் ஆகியவை ஏற்படுவதற்கும், அவற்றின் காரணமாக பாடங்களில் மனத்தைச் செலுத்த இயலாத சூழ்நிலையும் உருவாகும். இத்தகைய தருணங்களில், புதனின் சஞ்சார நிலை கைகொடுக்கும்.
பெண்மணிகள்: குரு பகவானின் சஞ்சார நிலை அனுகூலமாக இல்லை! குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்கும். பல பிரச்னைகளினால் மன நிம்மதி பாதிக்கப்படும். கணவருடன் பரஸ்பர அந்நியோன்யமும் பாசமும் பாதிக்கப்படும். கணவரின் மனப்போக்கும், செய்கைகளும் கவலையை அளிக்கும்.
அறிவுரை: மாத ஆரம்பத்திலிருந்தே திட்டமிட்டு செலவு செய்வது அவசியம். குடும்பப் பிரச்னையின்போது பொறுமை அவசியம்.
பரிகாரம்: 12 வியாழக்கிழமைகளில் உங்கள் வீட்டுப் பூஜையறையில் அல்லது அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றில் மாலையில் நெய் தீபம் ஏற்றிவருவது தன்னிகரற்ற பரிகாரமாகும்.