22-4-2023 முதல் 13-4-2024 வரை
(புனர்பூசம் 4ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் வரை)
குடும்பம்: அஷ்டம ராசியில் பலம் வாய்ந்த சனி பகவான் அமர்ந்துள்ள நிலையில், குரு பகவான், உங்கள் ராசிக்கு ஜீவன ஸ்தானமாகிய மேஷ ராசிக்கு மாறுகிறார். ஜோதிடக் கலையின் விதிகளின்படி, குருவின் மேஷ ராசி சஞ்சார காலத்தில் அவரால் நன்மை எதுவும் ஏற்படாது! மேலும், அஷ்டம ராசியில், ஆட்சி பலம் பெற்று சனி நிலைகொண்டிருப்பதும் கவலையளிக்கும் கிரகநிலையேயாகும். குடும்பப் பிரச்னைகள், அலுவலகப் பொறுப்புகள் காரணமாக, அடிக்கடி வெளியூர்ப் பயணங்களில் செல்ல நேரிடும். இத்தகைய அலைச்சல்கள் காரணமாக, ஆரோக்கியம் குறையக்கூடும். பணம் விரயமாகும். எவ்வளவுதான் முயற்சித்தாலும், சேமிப்பிற்குச் சிறிதளவும் சாத்தியமில்லை!! குடும்பப் பிரச்னைகள் மேல் கவனம் செலுத்த இயலாமல், சோர்வும் கவலையும் மன நிம்மதியைப் பாதிக்கும். திருமண முயற்சிகளில் தடங்கல்களும், குழப்பமும் உண்டாகும். சில தருணங்களில், தவறான வரனை நிச்சயித்துவிடுவதற்கு சாத்தியக்கூறும் உள்ளதால், எதையும் நிதானித்து முடிவெடுப்பது நல்லது.
உத்தியோகம்: அஷ்டமச் சனியினால் பாடுபட்டு உழைத்தும் மேலதிகாரிகளைத் திருப்தி செய்ய இயலாது. தசா, புக்திகள் சாதகமாக அமையாவிடில், வேலைமாற்றத்திற்கும் வாய்ப்புள்ளது. புதிய வேலைக்கு முயற்சிக்கும் கடக ராசி அன்பர்களுக்கு, சுமாரான வேலை கிடைக்கும். கிடைக்கும் வேலையில் மனநிறைவு இருக்காது. ெவளி நாடுகளில் பணியாற்றிவரும் கடக ராசியினர், பலர் தாய் நாடு திரும்ப வேண்டிவரும். அலுவலகத்தில், எத்தகைய பிரச்னை ஏற்பட்டாலும், உணர்ச்சிவசப்படாமல், கட்டுப்பாட்டுடன் இருத்தல் மிகவும் அவசியம். ஏனெனில், தவறான முடிவுகள் எடுத்துவிடுவதற்கு கிரகநிலைகளின்படி சாத்தியக்கூறு உள்ளது. அது உங்களின் எதிர்காலத்தைக் கடுைமயாகப் பாதிக்கும். பொறுமை, நிதானம் முக்கியம். சிலருக்கு, நிர்வாகத்தினருடன் பிரச்னைகள் ஏற்படும். அது உங்கள் எதிர்கால நலனைப் பாதிக்கும். ஒருசிலருக்கு, தற்போது பார்த்துவரும் வேலையில், மாற்றம் ஏற்படும்.
தொழில், வியாபாரம்: நீ்ங்கள் மிகவும் எச்சரிக்கையாகவும், கவனத்துடனும், செயலாற்றவேண்டிய கட்டத்தில் இருப்பதை கிரக நிலைகள் நினைவுபடுத்துகின்றன. போட்டிகள் அதிகரிக்கும். அன்றாட விற்பனையை ஆழ்ந்து கவனித்தால், லாபம் குறைந்துவிடுவதை அறிந்துகொள்ள முடியும். புதிய முயற்சிகள், முதலீடுகள் ஆகியவற்றை மேலும் சிறிது காலத்திற்கு ஒத்திப்போடுதல் உங்களுக்கு நஷ்டம் ஏற்படாமலிருக்க உதவும். சகக் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கவலையளிக்கும். வியாபாரம் சம்பந்தமாக, வெளிநாடு சென்றுவரும் சாத்தியக்கூறும் உள்ளது. ஏற்றுமதித் துறையினருக்கு, புதிய கட்டுப்பாடுகள் ஏற்படும். வரவேண்டிய வெளிநாட்டுப் பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்ப சில தருணங்களில், நிதி நெருக்கடியை ஏற்படுத்தும்.
கலைத்துறையினர்: சனி பகவானின் மேஷ ராசி சஞ்சார காலத்தில், நீங்கள் நன்மை எதையும் எதிர்பார்ப்பதில் பயனில்லை! புதிய வாய்ப்புகள் கிடைப்பதில் பிரச்னைகளும் ஏமாற்றமும் ஏற்படும். சினிமாப் படத் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், விநியோகஸ்தர்கள் உங்களைப் புறக்கணிப்பார்கள். சிலருக்கு, வாய்ப்புகள் கிடைத்தாலும், அந்த அளவிற்கு வருமானம் இராது.
அரசியல்துறையினர்: குரு பகவானின் இந்த ராசி மாற்றம், உங்களுக்கு அளவோடு நன்மை செய்யும். கட்சியில் ஆதரவு நீடிக்கிறது. கட்சித் தொண்டர்களிடையே செல்வாக்குக் குறையாது. ஆயினும், மேலிடத் தலைவர்களுக்கு உங்கள் மீது அதிருப்தி ஏற்படக்கூடும். உங்கள் மேல் வைத்துள்ள நம்பிக்கையும் தளரும். மறைமுக எதிர்ப்புகள் இருப்பதை ராகுவின் நிலையும், அஷ்டம சனியும் எடுத்துக்காட்டுகின்றன. ஆதலால், எவரையும் முழுமையாக நம்பிவிடாமல், எச்சரிக்கையுடன் இருப்பது உங்கள் எதி்ர்கால நலனிற்கு பாதுகாப்பாகும். தற்போதைக்கு கிரக நிலைகள் அனுகூலமாக இல்லாததால், சபலம் வேண்டாம்!! இத்தகைய கிரக நிலைகளில் ஜோதிடம் நமக்குச் சரியான வழிகாட்டியாக உதவுகிறது. ஆதலால்தான், ஜோதிடம், மனிதனின் “உற்ற துணைவன்” எனப் போற்றுகிறது, சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம்.
மாணவ, மாணவியர்: வித்யா காரகரான புதன், வக்கி்ர கதியில் இருக்கும் நிலையில், குரு பகவான் மேஷ ராசியில் சேருகிறார். ஆதலால், வித்யா ஸ்தானம் எவ்விதத்திலும் பாதிக்கப்படுவதில்லை. மேலும், குரு மாறியுள்ள மேஷ ராசி, புதனுக்கு நட்பு வீடாகும். படிப்பில் நல்ல முன்னேற்றம் நீடிக்கிறது. ஆசிரியர்களின் ஆதரவும், வழிகாட்டுதல்களும் துணை நிற்கும். தேர்வு களில் நல்ல மதிப்பெண்களைப் பெற்றுத் திகழ்வீர்கள்!
விவசாயத் துறையினர்: குரு பகவானின் இந்த மேஷ ராசி மாற்றம், உங்களுக்கு பல நன்மைகளை அளிக்கவுள்ளது. செவ்வாய், குருவின் நட்பு வீடாகும். அவரது ராசியில், குரு சஞ்சரிக்கும்போதும், அவருடன் இணைந்திருக்கும்போதும், குரு மங்கள யோகம் ஏற்படுகிறது என “ஜோதிட ரத்னாகரம்” எனும் புகழ்பெற்ற கிரந்தம் கூறுகிறது.
பெண்மணிகள்: குரு பகவானால், பல நன்மைகள் உங்களுக்கு ஏற்படவுள்ளது. மனத்தை அரித்துவந்த பல பிரச்னைகள், கவலைகள், எதிர்காலத்தைப் பற்றிய அச்சம் ஆகியவை நீங்கும். வேலைபார்க்கும் பெண்மணிகளுக்கு அஷ்டமச் சனியினால் அலுவலகத்தில் ஏற்படும் பல சிரமங்கள் குறையும்.
அறிவுரை: கூடியவரையில், கடினமான உழைப்பையும், தேவையற்ற அலைச்சல்களையும், தரக்குறைவான உணவு வகைகளையும் தவிர்த்தல் அவசியம்.
பரிகாரம்: ஒரு முறை ஆலங்குடி அல்லது திட்டை திருத்தல தரிசனம்ம மிகச் சிறந்த பரிகாரம்.