தனுசு

22-4-2023 முதல் 13-4-2024 வரை

(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம் வரை)

குடும்பம்: தனுர் ராசிக்கு நாயகன் குரு பகவான்தான்! அவர் ராசிக்குப் பூர்வபுண்ணிய ஸ்தானமாகிய மேஷ ராசியில் சஞ்சரிப்பது, மிகவும் அனுகூலமான கிரக நிலையாகும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். சுப நிகழ்ச்சிகள் நிகழும். தனுர் ராசியில் பிறந்துள்ள பெண்களுக்கு, புத்திர பாக்கியம் கிடைப்பதற்கு மிகவும் அனுகூலமான காலட்டமிது. வருமானம் திருப்திகரமாக இருக்கும். வீண் செலவுகள் இராது. பழைய கடன்கள் இருப்பின், அவை தீரும். குழந்தைகளின் கல்வி முன்னேற்றம் மன நிறைவைத் தரும். தீர்த்த, தல யாத்திரை சித்திக்கும். பெரியோர்கள், மகான்களின் ஆசி கிட்டும். பலருக்குச் சொந்த வீடு அமையும் யோகமும் உள்ளது. திருமண வயதில் பெண் அல்லது பிள்ளை இருப்பின், மிக நல்ல வரன் அமையும். தேவ குருவான வியாழன், செவ்வாயின் வீட்டில் அமர்ந்திருப்பது, குரு மங்கள ேயாகத்தை ஏற்படுத்துகிறது. பழைய கடன்கள் இருப்பின், எளிதில் அடைபடும்.

உத்தியோகம்: குருவின் மேஷ ராசி சஞ்சார காலம், நீங்களே எதிர்பாராத பல நன்மைகளை அளிக்கக்கூடிய கிரக நிலையாகும். வேலை பார்க்கும் இடத்தில், மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்கள் ஆகியோரின் ஒத்துழைப்பும், ஆதரவும் கிடைப்பதால், பணிகளில் உற்சாகமும்,ஆர்வமும் மேலிடும். புதிய வேலைக்கு முயற்சி செய்யும் தனுர் ராசியினருக்கு அதிர்ஷ்டகரமான காலகட்டமிது! தற்காலிகப் பணியாளர்கள், பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். வெளிநாடு சென்று வேலை பார்க்க வேண்டும் என்ற ஆசை இருப்பின், அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

தொழில், வியாபாரம்: வர்த்தகத் துறையினருக்குப் பல நன்மைகளை வழங்கவிருக்கின்றார், குரு பகவான்! சந்தை நிலவரம், சாதகமாக உள்ளது. உற்பத்தியைப் படிப்படியாக அதிகரித்துக்கொள்ளலாம். குறிப்பாக, ஏற்றுமதி மற்றும் இறக்குமதித் துறையினருக்கு, லாபம் பல மடங்கு அதிகரிக்கும். வர்த்தகத்தை அதிகரிப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளலாம். அரசாங்க உதவியும் ஆதரவும் எளிதில் கிட்டும். வெளிமாநிலங்களுக்கு சரக்குகள் அனுப்புவதில், நல்ல லாபம் கிடைக்கும். வெளிநாட்டு நிறுவனங்களுடன் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உற்பத்தியாளர்கள், உற்பத்தியைப் படிப்படியாக உயர்த்திக்கொள்ளலாம். வெளி மாநிலங்களுக்குத் திரும்பியிருந்த தொழிலாளர்கள் மீண்டும் தொழிலுக்குத் திரும்பி வருவார்கள். தொழிற்சாலையை விருத்தி செய்துகொள்ள அவசியமான வசதிகள் எளிதில் கிடைக்கும்.

கலைத் துறையினர்: உங்கள் ராசிநாதனாகிய குரு பகவான், செவ்வாயின் ராசியில் அமர்ந்திருப்பது ஓர் விசேஷ யோகமாகும். கலைத் துறையினருக்கு, புதிய வாய்ப்புகள் எவ்வித முயற்சியுமின்றிக் கிடைக்கும். வருமானம் உயரும். அரசியல் கட்சிகளுடன் உள்ள தொடர்பு தக்க தருணங்களில் உதவும்.

அரசியல் துறையினர்: கட்சியில் ஆதரவு நீடிக்கிறது. ஒரு சிலர் கட்சியில் புதிய பொறுப்புகளை ஏற்கவேண்டியிருக்கும். மேல்மட்டத் தலைவர்களின் ஆதரவு நீடிக்கிறது. மக்களிடையே செல்வாக்கு அதிகரிக்கும். தசா, புக்திகள் சாதகமாக இருப்பின், வேறொரு பெரிய கட்சியில் சேர வாய்ப்புள்ளது. அது நடைபெற்றால், உங்கள் எதிர்காலம் வெகு சிறப்பாக இருக்கும்.

மாணவ, மாணவியர்: குரு பகவானின் மேஷ ராசி சஞ்சார காலம், உங்கள் கல்வி முன்னேற்றத்தை உறுதி செய்கிறது. உயர் கல்விக்கு உதவி கிடைக்கும். நேர்முகத் தேர்வுகளில் கேள்விகளைப் புரிந்துகொண்டு, தக்க பதிலளிப்பதற்கு உதவுகிறார்கள், குருவும், புதனும்!

விவசாயத் துறையினர்: விவசாயத் துறையினர், அடிப்படை வசதிகளுக்குக் குறைவிராது. தண்ணீர்ப் பற்றாக்குறை இருப்பதற்கு வாய்ப்பில்லை. உங்கள் விளைபொருட்களுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு கிட்டும். கால்நடைகளின் பராமரிப்பில் செலவுகள் அதிகமானாலும், சமாளிப்பதில் எவ்விதச் சிரமமுமிராது.

பெண்மணிகள்: பெண்களின் நலனிற்கும், சப்தம ஸ்தானத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. மனம் நிறைந்த குடும்ப வாழ்க்கை இந்த 7ம் இடத்திற்கு தோஷம் இல்லாமல் இருந்தால்தான், அமையும். தற்போது நிகழும் குரு பகவானின் மேஷ ராசி சஞ்சார காலத்தில், பல பெண்மணிகளுக்கு புத்திரப் பேறு கிட்டும். கணவருடன் அந்நியோன்யம் அதிகரிக்கும். பிரிந்திருந்த கணவர் – மனைவியர் மீண்டும் ஒன்று சேர்வர். திருமண வயதிலுள்ள தனுர் ராசி பெண்மணிகளுக்கு, மனம் மகிழும் வரன் அமையும். இதனை அனுபவத்தில் பார்க்கலாம். வேலைக்கு முயற்சித்துவரும் கன்னி ராசி பெண்மணிகளுக்கு, நல்ல வேலை தேடி வரும். அதனால், குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.

அறிவுரை: குரு பகவானின் மேஷ ராசி சஞ்சாரக் காலம் பல நன்மைகளை, சற்று தாராளமாகவே அளிக்கவுள்ளது. அதே தருணத்தில், பலருக்கு அலைச்சலும், வெளியூர்ப் பயணங்களும் அதிகமாகவே இருக்கும். ஆதலால், ஆேராக்கியத்தில் அதிக கவனம் தேவைப்படுகிறது. ேமலும், குரு பகவானுடன் ராகுவும் அமர்ந்திருப்பதால், அதிக அலைச்சலும், வெளியூர்ப் பயணங்களும் உடல் நலனைப் பாதிக்கக்கூடும்.

பரிகாரம்: 1. செவ்வாய் பரிகார ஸ்தலமான வைதீஸ்வரர் கோயில் தரிசனம், மிக நல்ல பரிகாரமாகும். வியாழக்கிழமைகளில் சென்று தரிசிப்பது, அதிக நற்பலனை அளிக்கும்.
2.செவ்வாய்க் கிழமை ஒன்றில் வயோதிகர் ஒருவருக்கு, சிறிது அரிசி, வெல்லம், இரண்டு வாழைக்காய், வஸ்திர், தட்சிணை கொடுத்து வணங்குவது நற்பலனளிக்கும். ஐந்து செவ்வாய்க்கிழமைகளில் மாலை நேரத்தில், சிறிது அரிசி, இரண்டு வாழைக்காய், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், தட்சிணை கொடுத்து நமஸ்கரித்தால் போதும்.

Dinakaran- astrology-logo

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Download Our Apps

Follow Us