கன்னி

Published: Updated:

(உத்திரம் 2ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2ம் பாதம் வரை)

குடும்பம்: பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரித்த குரு பகவான், இனி ஜீவன ஸ்தானமாகிய மிதுனத்திற்கு மாறுவதுடன், அங்கிருந்து 9-ம் பார்வையாக சனி – ராகுவைப் பார்க்கிறார். அலுவலகப் பொறுப்புகள் காரணமாக, அதிக அலைச்சலும், வெளியூர்ப் பயணங்களும், உழைப்பும் அதிகமாக இருப்பினும், அவற்றிற்கேற்ற நற்பலன்களை அளித்தருள்வார், குரு பகவான். பணப் பற்றாக்குறை, ஓரளவு தீரும். வருமானம் உயரும். பல குடும்பப் பிரச்னைகள் நல்லபடி தீரும். குழந்தைகளின் கல்வியில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். பழைய கடன்கள் இருப்பின், அவை தீரும். திருமணத்திற்குக் காத்துள்ள பெண்மணிகளுக்கு நல்ல வரன் அமையும்.

உத்தியோகம்: ஜீவன ஸ்தானமாகிய மிதுன ராசியில், குரு பகவான் சஞ்சரிப்பது அதிக அலைச்சலையும், பிரயாணங்களையும், வேலை பார்க்குமிடத்தில் கடின உழைப்பையும் ஏற்படுத்தினாலும், அவற்றிற்கேற்ற அங்கீகாரத்தையும் பெற்றுத் தருவார். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஜனன கால கிரக நிலைகளும், தற்போதைய தசா, புக்திகளும் சாதகமாக இருப்பின், பதவியுயர்வு கிடைக்கும். இதுவரை எக்காரணமுமில்லாமல், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஊதிய உயர்வு, இப்போது எதிர்பார்க்கலாம். புதிய வேலைக்கு முயற்சித்துவரும் கன்னி ராசியினருக்கு, வேலை தந்து, அருள்புரிவார் குரு பகவான். தற்காலிகப் பணியிலுள்ள அன்பர்களுக்கு, பணி நிரந்தரமாகும். வெளிநாடு சென்று வேலை பார்க்க வேண்டும் என்ற ஆர்வமிருப்பின், இப்போது முயற்சிக்கலாம். ஆசை நிறைவேறும். ஆயினும், ேவலைச் சுமையும், உழைப்பும், பொறுப்புகளும் சக்தியை மீறியதாக இருக்கும்.

தொழில், வியாபாரம்: சனி பகவானும், ராகுவும் அனுகூலமாக இருக்கும் இத்தருணத்தில், குரு பகவானும், ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பது, மிகக் கடுமையான போட்டிகளை வெற்றிகரமாகச் சமாளித்து, லாபம் அடைவீர்கள் என்பதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகிறது. அலைச்சலும், உடல் உழைப்பும் உடலில் சோர்வை ஏற்படுத்தும். நெருக்கடியான தருணங்்களில், நிதி நிறுவனங்கள் பிரச்னைகளை ஏற்படுத்தும். இவையனைத்தையும் மீறி, உங்களுக்கு குரு பகவான் லாபத்தைப் பெற்றுத் தருவார். ஏற்றுமதித் துறையினர், வெளிநாடு சென்றுவரவேண்டிய அவசியமும் ஏற்படும். புதிய முதலீடுகளில் அளவோடு ஈடுபடலாம். சனி பகவானுக்கு அடுத்தபடியாக, குருவும் அலைச்சலையும் உழைப்பையும் கொடுத்து, அதன் பின்னரே லாபத்தைத் தந்தருள்வார். சந்தையில் மிகக் கடுமையான போட்டிகளையும்கூட திறமையுடன், சமாளித்துவிடுவீர்கள்.

கலைத் துறையினர்: வருமானம் ஒரே சீராக இருக்கும். எதிர்பார்த்ததைவிட, நல்ல வாய்ப்புகள், தக்க தருணத்தில் கைகொடுக்கும். ஆறாம் இடத்தில், சனி – ராகு கூட்டுச் சேர்க்கை ஏற்பட்டிருப்பதும், அவர்களுக்கு குரு பகவானின் பார்வை கிடைப்பதும், உங்களுக்கு நல்ல ஆதாயத்தையும், அதிர்ஷ்டத்தையும் எடுத்துக்காட்டுகின்றன.

அரசியல் துறையினர்: குரு பகவானின் மிதுன ராசி சஞ்சாரம், உங்களுக்கு நன்மை செய்யும். ஆயினும், அதிக அலைச்சல் – ஆரோக்கியத்தைப் பாதிக்கும். பல மாதங்களாக, எவ்வித முயற்சியிலும் ஈடுபடாது, கவலையற்று இருந்த திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு, குரு பகவான் உதவிக்கரம் நீட்டி, அருள்புரிகிறார், இப்போது!! சினிமாத் துறையில் பணியாற்றிவந்த பல ஊழியர்கள், சென்ற சில ஆண்டுகளாகவே கடுமையாக பாதித்துவந்துள்ளனர். அந்நிலையை இப்போது குரு பகவான் மாற்றியமைத்து அருள்வார். மீண்டும் வருமானத்திற்கு வழி பிறக்கும்.

மாணவ – மாணவியர்: கல்விக்கு அதிபதியான, புதனின் ஆட்சி வீடு, மிதுனமாகும்! அங்கு குரு அமர்ந்து, ஜீவன காரகரான சனி பகவானையும், அவருடன் சேர்ந்துள்ள ராகுவையும் பார்ப்பது உங்களுக்கு யோக பலன்களை அளிக்கக்கூடிய சஞ்சார நிலையாகும் (ஆதாரம் : “பூர்வ பாராசர்யம்” எனும் மிகப் பழைமையான ஜோதிட நூல்). பாடங்களில் மனம் ஆழ்ந்து ஈடுபடும். தேர்வுகளில் மிகச் சரியான பதிலளித்து, நல்ல மதிப் பெண்களைப் பெறுவீர்கள். கல்விச் செல்வத்தையும், ஞானத்தையும், பக்தியையும் அளிப்பதில் குருவுக்கு இணை அவரே!!

விவசாயத் துறையினர்: புரட்டாசி 22-ம் (8-10-2025) தேதியன்று, குரு பகவான், மிதுன ராசியை விட்டு கடக ராசிக்கு மாறியவுடன், பூமி காரகரான செவ்வாயின் ராசியான விருச்சிகத்தை, தனது 5-ம் பார்வையாகப் பார்க்கிறார். விவசாயிகளுக்கு, யோக பலன்களை அளிக்கக்கூடிய கிரக நிலையாகும் இது! உழைத்த உழைப்பிற்கு, நல்ல விளைச்சலையும், லாபத்தையும் தந்தருள்வார், குரு!! பழைய கடன்கள் இருப்பின், அவற்றை அடைத்து, நிம்மதியாக இருக்கலாம். தசா, புக்திகள் சுப பலம் பெற்றிருப்பின், புதிய விவசாய நிலம் மற்றும் பசுக்கள் வாங்கும் யோகமும் அமைந்துள்ளது. கிரகங்கள் அளிக்கும் நல்ல சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொள்வது, நம் திறமையில்தான் உள்ளது.

பெண்மணிகள்: பெண்மணிகளின் நலனைப் பாதுகாக்கும் பொறுப்பு, குருவுக்கும் சுக்கிரனுக்கும் உள்ளதைப் புராதன ஜோதிட நூல்கள் கூறியுள்ளன. இவ்விருவருமே, இப்புத்தாண்டு முடியும் வரை, பெண்மணிகளுக்கு அனுகூலமாக சஞ்சரிப்பதால், மகிழ்ச்சியான தமிழ்ப் புத்தாண்டு இது!

அறிவுரை: தனது மிதுன ராசி சஞ்சாரக் காலத்தில், குரு பகவான் பல அரிய வாய்ப்புகளை உங்களுக்கு அளித்தருள்கிறார். திறமையுடன் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

பரிகாரம்: வியாழக்கிழமைகளில், ஏழை ஒருவருக்கு, உணவளிப்பது, மிகச் சிறந்த பரிகாரமாகும். அருகிலுள்ள திருக் கோயில் ஒன்றில் மாலையில், மூன்று மண் அகல்களில் நெய் தீபம் ஏற்றி வருவதும் நல்ல பலனையளிக்கும். ஒவ்வொரு துளி நெய்க்கும் அளவற்ற பரிகார சக்தி உள்ளதைப் புராதன நூல்கள் விவரித்துள்ளன. இயலாதவர்கள், “லிகித ஜெபம்”-ஆகப் போற்றிக் கொண்டாடப்படும் ÿராம ஜெயம் -எனும் தாரக மந்திரத்தை நோட்டு-புத்தகத்தில் தினந்தோறும் 1008 முறைகள் எழுதி, உங்கள் பூஜையறையில் வைத்து, கற்பூரார்த்்தி காட்டி வந்தால், போதும்.

Dinakaran- astrology-logo

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Download Our Apps

Follow Us