search-icon-img
featured-img

மேஷம்

Published :

15-5-2026 முதல் 14-6-2026 வரை

(அசுவினி, பரணி, கிருத்திகை முதல் பாதம் வரை)

குடும்பம்: ஜென்ம ராசியில் சூரியன் - சுக்கிரன் மற்றும் புதன் சேர்க்கை ஏற்பட்டுள்ளது! விரய ஸ்தானத்தில் அதி-உஷ்ண கிரகமான செவ்வாயும் சஞ்சரிப்பதால், உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் மிகவும் அவசியம். கூடியவரையில், வெயிலில் அலைவதைத் தவிர்க்க வேண்டும். பலருக்கு சருமம் சம்பந்தமான தொல்லைகள் ஏற்படக்கூடும். வெளியூர்ப் பயணங்களின்போது, பொருட்களையும், பணத்தையும் அதி ஜாக்கிரதையாகப் பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டும். காரணம், பொருட்கள் களவு போக நேரிடும் என்பதற்காகவே இதனைக் கூறுகிறோம். உடல் நலனிலும் அதி எச்சரிக்கையாக இருப்பது மிகவும் அவசியம் என்பதை கிரக நிலைகள் எச்சரிக்கை செய்கின்றன. நண்பர்கள், மற்றும் உறவினர்கள் ஆகியோருக்கு பண உதவி செய்தால், அது மீண்டும் திரும்பக் கிடைப்பது அரிது! கூடியவரையில், வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. திருமணம் சம்பந்தமான முயற்சிகளுக்கு, கிரக நிலைகள் இம்மாதத்தில் அனுகூலமாக இல்லை. அத்தகைய முயற்சிகளைச் சற்று ஒத்திப்போடுவது நன்மை செய்யும். தவறான வரனை நிச்சயித்துவிடக்கூடிய நிலைமை உருவாகக்கூடும். உடல் சிறு உபாதையானாலும், உடனுக்குடன் மருத்துவரிடம் காட்டி, சிகிச்சை பெறுவது மிகவும் அவசியம் என்பதை கிரக நிலைகள் எச்சரிக்கை செய்கின்றன.

உத்தியோகம்: ஜென்ம ராசியில் செவ்வாயும், விரய ஸ்தானத்தில் பலம் பொருந்திய சனி பகவானும் நிலைகொண்டுள்ள இத்தருணத்தில், திருதீய ஸ்தானத்தில், குரு பகவானும் சஞ்சரிப்பதால், பலர் மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். நெருங்கிய நண்பர்கள் ஆகியோருடன் நிர்வாகத்தைப் பற்றிய உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம். அலுவலகத்தில் நீங்களுண்டு, உங்கள் பணிகள் உண்டு என்று விலகியிருப்பது உங்கள் எதிர்காலத்திற்கு நன்மை செய்யும். வெளிநாடு சென்று, பணியாற்ற ஆர்வமுள்ளவர்கள் இடைத்தரகர்களை நம்பிப் பணம் கொடுத்து ஏமாந்துவிட வேண்டாம். தற்காலிகப் பணியாளர்கள், தங்களது அன்றாடப் பணிகளில் மிகவும் கவனமாக இருத்தல் அவசியம் என்பதை கிரக நிலைகள் எச்சரிக்கை செய்கின்றன.

தொழில், வியாபாரம்: அளவோடு முதலீடு செய்து, குறைந்த லாபத்தில், திருப்தியடைய வேண்டிய மாதமாகும் இது. கூடியவரையில், புதிய விற்பனை நிலையங்களைத் திறப்பதற்கு முயற்சிக்க வேண்டாம். லாப ஸ்தானம் சற்று பாதிக்கப்பட்டிருப்பதே இதற்குக் காரணமாகும். பங்குதாரர்களை நம்ப ேவண்டாம்.

கலைத் துறையினர்: வருமானமும், வாய்ப்புகளும் ஓரளவே வந்து கொண்டிருக்கும். அந்த வருமானம் உங்கள் குடும்பத்திற்குப் போதுமானதாகவே இருக்கும். கூடிய வரையில், தேவையற்ற செலவுகளைக் குறைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள் அதுவும் உங்கள் நன்மைக்காகவே சொல்கிறோம்.

அரசியல் துறையினர்: அரசியல் துறைக்கு அதிகாரம் கொண்டுள்ள கிரகங்கள் ஓரளவே உங்களுக்கு ஆதரவாக சஞ்சரிப்பதால், உங்கள் அரசியல் நடவடிக்கைகளைக் கூடிய வரையில், குறைத்துக் கொள்வது, உங்கள் எதிர்காலத்திற்கு நன்மை செய்யும். கிரக நிலைகளின்படி, உங்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் சிலர் ஈடுபட்டுள்ளது தெரியவருகிறது. ஆதலால், கட்சியில் எவரையும் முழுமையாக நம்பிவிட வேண்டாம். அரசியலில், நேர்மைக்கு இடமில்லை என்பதை நீங்களே விரைவில் தெரிந்து கொள்வீர்கள்! பிறகு, வருந்த வேண்டாம் அல்லவா...?

மாணவ - மாணவியர்: உங்கள் பாடங்களில் மட்டும் மனதைச் செலுத்துங்கள். இன்றைய முயற்சியே உங்கள் தலைவிதியை நாளைக்கு நிர்ணயிக்க உள்ளதை மறந்து விட வேண்டாம். பாடங்களில் மனத்தைச் செலுத்தினால் போதும். கவலையின்றி இருக்கலாம்!

விவசாயத் துறையினர்: உழைப்பிற்கேற்ற பலனை மறுக்காது அளிப்பவர் செவ்வாய் ஆவார்! வயலில் நீங்கள் பாடுபட்டு உழைத்ததற்குக் கைமேல் பலனளிக்கும் மாதமிது. பழைய கடன்கள் இருப்பின், அவற்றை அடைத்து, நிம்மதி பெற ஏற்ற மாதம் இது. பயன்படுத்திக் கொள்ளுங்கள். முயற்சி செய்யின், புதிய விளைநிலம் வாங்குவதற்கும் சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. வாய்ப்புகள் நினைத்த போதெல்லாம் கிடைக்கும் என்று நினைக்க வேண்டாம். தற்போது உங்களது கதவைத் தட்டும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு மகிழ்ச்சியாக இருக்கலாமல்லவா?!

பெண்மணிகள்: கிரக சஞ்சார நிலைகள் உங்களுக்கு மிகவும் அனுகூலமாக அமைந்துள்ளன, இம்மாதம் முழுவதும். பயன்படுத்திக் கொள்வது, உங்கள் திறனில்தான் உள்ளது. வேலைக்குச் சென்று வரும் பெண்மணிகளுக்கு, அலுவலகச் சூழ்நிலை மிகவும் சாதகமாக உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. பயன்படுத்திக் கொள்வதும் உங்கள் கைகளில்தான் உள்ளது.

அறிவுரை: நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடிவர உள்ளன என்பதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. அவற்றைக் கைப்பற்றிக் கொள்வது, உங்கள் திறனில்தான் உள்ளது.

பரிகாரம்: தினமும் மாலையில், அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றிற்குச் சென்று அங்குள்ள தீபத்தில் பசு நெய் அல்லது எள் எண்ணெயை சிறிது சேர்த்து வந்தால், அற்புத பலன் கிட்டும்.

அனுகூல தினங்கள்

வைகாசி : 1, 2, 7, 8, 14, 15, 19-21, 25- 27, 30, 31.

சந்திராஷ்டம தினங்கள்

வைகாசி : 16 காலை முதல், 18 இரவு வரை.