search-icon-img
featured-img

மேஷம்

Published :

(15-01-2026 முதல் 12-02-2026 வரை)

(அசுவினி, பரணி, கிருத்திகை முதல் பாதம் வரை)

குடும்பம்: ராசிக்கு, மூன்றாம் இடத்தில் வக்கிர கதியில், குரு பகவான் திருதிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், வருமானத்திற்கு மீறிய செலவுகள் இருக்கக்கூடும். சேமிப்பிற்கு சாத்தியக்கூறு கிடையாது. ஆயினும், கடன் வாங்க வேண்டிய அவசியமிராது. குரு பகவான், வக்கிர கதியில் வலம் வருவதால், திருமண முயற்சிகளில் வெற்றி கிடைப்பது கடினமே! கணவர் - மனைவியரிடையே பரஸ்பர அந்நிேயான்யக் குறைவு ஏற்படக்கூடும். உத்தியோகம் காரணமாகவோ அல்லது குடும்பப் பிரச்னைகள் காரணமாகவோ, கணவர் - மனைவி தற்காலிகமாக பிரிந்திருக்க நேரிடும். விவாக முயற்சிகள் தடைபடும். நெருங்கிய உறவினர்களிடையே கருத்து வேற்றுமையும், பகையுணர்ச்சியும் மேலிடக்கூடும். மருத்துவச் செலவுகளினால், பணம் விரயமாகும்.

உத்தியோகம்: லாப ஸ்தானத்தில், ஜீவன காரகரான சனி பகவான், ராகுவுடன் இணைந்திருப்பதால், மேலதிகாரிகளின் ஆதரவும், நிர்வாகத்தினரின் சலுகைகளும் அன்றாடப் பணிகளில் உற்சாகத்தை ஏற்படுத்தும். புதிய வேலைக்கு முயற்சித்துவரும் மேஷ ராசியினருக்கு, நல்ல நிறுவனத்தில், மனத்திற்கு நிறைவையளிக்கும் . புதிய வேலை கிடைக்கும். சிலருக்கு, பதவிர்வும், இடமாற்றமும் ஏற்படக்கூடும். வெளிநாடு செல்ல முயற்சிக்கும் மேஷ ராசி அன்பர்களுக்கு, வெற்றி கிட்டும். இடைத்தரகர்களின் மூலம், பணம் இழப்பதற்கு சாத்தியக்கூறு உள்ளதால், கவனமாக இருங்கள்.

தொழில், வியாபாரம்: உற்பத்தியை அதிகரிப்பதற்கு, ராகு மற்றும் சனி பகவானின் கூட்டுச் சேர்க்கை, துணை நிற்கிறது. நிதி நிறுவனங்களின் ஆதரவும், உதவியும் எளிதில் கிட்டும். சந்தை நிலவரம் உங்கள் விற்பனையை உயர்த்துவதற்கு, அனுகூலமாக உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக் காட்டுகின்றன. நிதி நிறுவனங்களின் ஆதரவு உங்களுக்குத் துணை நிற்கிறது. சகக் கூட்டாளிகள் ஒத்துழைப்பார்கள். புதிய கிளைகள் திறப்பதற்கும் ஏற்ற மாதம் இந்தத் தை மாதம்!

கலைத் துறையினர்: சென்ற சில மாதங்களாக, மந்த நிலையிலேயே இருந்து வந்த போக்கு, மாறி, புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். வருமானம் உயர்வதால், உற்சாகம் மேலிடும். தசா, புக்திகள் சுப பலம் பெற்றிருப்பின், வெளிநாடு சென்று, கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் சாத்தியக்கூறும் உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக் காட்டுகின்றன. உங்கள் பொருளாதார நிலையை சீர் செய்து கொள்ள ஏற்ற மாதம் இது.

அரசியல் துறையினர்: அரசியல் துறையைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுள்ள சுக்கிரன், சுப பலம் பெற்று சஞ்சரிப்பதால், அரசியல் பிரமுகர்களுக்கு, நல்ல வாய்ப்புகள் தேடிவரும். கட்சியில் செல்வாக்கு உயரும். உயர் பதவி ஒன்று கிடைப்பதற்கும் சாத்தியக்கூறு உள்ளது. சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்வது, உங்கள் திறமையில்தான் உள்ளது.

மாணவ - மாணவியர்: கல்வித் துறையை தனது கட்டுப்பாட்டில் கொண்டுள்ள புதனும், மற்ற கிரகங்களும் உங்களுக்கு ஆதரவாக விளங்குகின்றனர், இம்மாதம் முழுவதும் ! படிப்பில் ஆர்வமும், உற்சாகமும் மேலிடும். ஆசிரியர்களின் வழிகாட்டுதல் தேடி வரும். தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்றுத் திகழ்வீர்கள். விளையாட்டுப் போட்டிகள், பேச்சுப் போட்டி ஆகியவற்றிலும் வெற்றி உங்களுக்கே! வெளிநாடு சென்று விசேஷ உயர் கல்வி பெற ஆர்வமிருப்பின், இம்மாத்தில் முயற்சிக்கலாம். தேவையான அனைத்து உதவிகளும் எளிதில் கிட்டும்.

விவசாயத் துறையினர்: விவசாயத் துறையை தனது முழு கட்டுப்பாட்டில் கொண்டு திகழ்கிறது, செவ்வாய் கிரகம். அந்தச் ெசவ்வாய், பூரண பலத்துடன் வலம் வருவதால், பயிர்களுக்கு அவசியமான தண்ணீர் வசதி, குறைவின்றிக்கிடைக்கும். மழை அளவோடு பெய்யும். நவீன விவசாய வசதிகள் உங்களைத் தேடி வரும். அரசாங்கச் சலுகைகள் கிடைப்பதற்கும் சாத்தியக்கூறு உள்ளது. பழைய கடன்களை அடைத்து, உங்கள் பொருளாதார நிலையைச் சீர்செய்து கொள்வதற்கு ஏற்ற மாதம் இது. தசா, புக்திகள் சுப பலம் பெற்றிருப்பின், புதிய கால்நடைகள் வாங்கும் யோகமும் அமைந்துள்ளதை கிரக நிலைகள் எடுத்துக் காட்டுகின்றன.

பெண்மணிகள்: சுக்கிரன் உங்களுக்கு அனுகூலமாக சுப பலம் பெற்றிருப்பதால், இந்த ஆண்டின் லாபகரமான மாதம் இது. புதிய ஆபரணங்கள், ஆடைகள் சேர்வதற்கு கிரக நிலைகள் ஆதரவாக உள்ளன. பல பெண்மணிகளுக்கு, கருத்தரிக்க கிரகங்கள் சுப பலம் பெற்றுத் திகழ்கின்றன. புதிய வேலைக்கு முயற்சித்துவரும் கன்னியருக்கு, நல்ல நிறுவனத்தில், மனத்திற்குப் பிடித்த பணி கிடைக்கும். திருமண வயதிலுள்ள கன்னியருக்கு நல்ல வரன் அமையும்.

பரிகாரம்: வியாழக்கிழமைதோறும் அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றில், தீபத்தில் சிறிது நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து வந்தால் போதும்.

2. சாதம், நெய், பருப்பு, எள் கலந்த ஐந்து சாத உருண்டைகளை, காகத்திற்கு வைத்து வந்தாலும் மிகச் சிறந்த பரிகாரமாக அமையும்.

3. ஏழை ஒருவருக்கு புளிப்பில்லாத தயிர் சாதம் அளித்தாலும் மிகச் சிறந்த பரிகாரம்.

4. தினமும் ஒரு சர்க்கம் ஸ்ரீ சுந்தர காண்டம் பாராயணம்.

அனுகூல தினங்கள்:

தை : 3 - 7, 11 - 14, 18 - 21, 25, 27.

சந்திராஷ்டம தினங்கள்:

தை : 1ந் தேதிமுதல் 2ந் தேதி காலை வரை. மீண்டும், 26 பின்னிரவு முதல், 29 பிற்பகல் வரை.