search-icon-img
featured-img

மிதுனம்

Published :

(15-01-2026 முதல் 12-02-2026 வரை)

(மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை, புனர்பூசம் 3ம் பாதம் வரை)

குடும்பம்: ெஜன்ம ராசியில் வக்கிர கதியில் குரு பகவான் சஞ்சரித்தாலும், பாக்கிய ஸ்தானத்தில் சனி பகவானும், ராகுவும் சேர்ந்திருப்பது சிரமங்களைக் குறைக்கக்கூடிய கிரக நிலைகளாகும். வருமானத்தைவிட, செலவுகளே அதிகமாக இருந்தாலும், சமாளித்துவிடுவீர்கள் - கையிலிருப்பதைக் கொண்டு...! கடன் வாங்க வேண்டிய - கடன் ஏற்படாமல் பார்த்துக் ெகாள்வார், சுக்கிர பகவான்!! குடும்பத்தில், சுபச் செலவுகளே சற்று அதிகமாக இருக்கும். வீண் செலவுகளையும் தவிர்க்க இயலாது.ஜென்ம ராசியில், வக்கிர கதியில் குரு பகவான் சஞ்சரிப்பதால், வீண் அலைச்சல்களும், வெளியூர்ப் பயணங்களும், வைத்திய செலவுகளும் ஏற்படும். குழந்தைகளில் ஒருவரின் கல்வி சம்பந்தமான விஷயங்களில் பணம் விரயமாகும். ஒரு சிலருக்கு, தற்போதுள்ள வீட்டிலிருந்து வேறு வசதியான வீட்டிற்கு மாற வேண்டிய அவசியமும் ஏற்படக்கூடும். ஜனன கால தசா, புக்திகள் சாதகமாக இருப்பின், சொந்த வீட்டிற்குக் குடியறேவும் வாய்ப்புள்ளது. சப்தம ஸ்தானத்தில், சுக்கிரன், குரு பகவானின் ராசியில் சஞ்சரிப்பதால், நிச்சயதார்த்தம், திருமணம், சீமந்தம் குழந்தைப் பிறப்பு, உபநயனம் ஆகிய சுப நிகழ்ச்சிகள் நிகழ்வதற்கும் சாத்தியக்கூறு உள்ளது. எதிர்பாராத பணவரவிற்கும் சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. திருமண வயதில், பெண் அல்லது பிள்ளை இருப்பின், நல்ல வரன் அமையும்.

உத்தியோகம்: ராசிக்கு, பாக்கிய ஸ்தானத்தில் ஜீவன காரகரான சனி பகவான், ராகுவுடன் சேர்ந்து வலம் வருவதால், உத்தியோகஸ்தர்களுக்கு, பணிச் சுமைகள் அதிகமாக இருக்கும். ஆயினும், அதற்குத் தகுந்த பாராட்டுதல்களும், ஊதிய உயர்வும், பதவியுயர்வும் கிடைப்பதற்கு சாத்தியக்கூறு உள்ளது. புதிய வேலைக்கு முயற்சித்துவரும் அன்பர்களுக்கு, வெற்றி கிடைக்கும். வெளி மாநிலங்களில் பணியாற்றிவரும் அன்பர்களுக்கு, தாங்கள் முயற்சித்துவரும் ெசாந்த மாநிலங்களுக்கு மாறுதல் கிட்டும். ெவளிநாடு சென்று வேலை பார்க்கும் ஆர்வம் மிகுந்தவர்களுக்கு, தங்கள் விருப்பப்பட்டவெளிநாட்டில் வேலை கிடைக்கும். தன்னம்பிக்கையுடன் முயற்சியில் மனத்தைச் செலுத்துங்கள். வெற்றி உறுதி!

தொழில், வியாபாரம்: தொழில் மற்றும் வர்த்தகத் துறையினருக்கு, பெரும்பான்மையான கிரகங்கள் அனுகூலமாக சஞ்சரிப்பதால், சந்தை நிலவரம் மிகவும் சாதகமாக, சுப பலம் பெற்றுத் திகழ்கின்றன. உற்பத்தியும், விற்பனையும் உற்சாகத்தையளிக்கும். சந்தை நிலவரம் மகிழ்ச்சியைத் தரும். நிதி நிறுவனங்களின் சலுகைகள் எளிதில் கிட்டும். ஏற்றுமதி - இறக்குமதித் துறையினருக்கு, வியாபாரம் சம்பந்தமாக, வெளிநாடு சென்றுவரும் வாய்ப்பும் கிட்டும். உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதற்கு உதவிகரமாக மூலப் பொருட்களும் அதிக சிரமமில்லாமல், கிடைக்கும். புதிய கிளைகள் திறப்பதற்கு சாத்தியக்கூறு உள்ளதையும் கிரக நிலைகள் எடுத்துக் காட்டுகின்றன. சகக் கூட்டாளிகள் ஒத்துழைப்பார்கள். நிதி நிறுவனங்களின் சலுகைகள் கிடைக்கும்.

கலைத் துறையினர்: வாய்ப்புகளும், வருமானமும் திருப்திகரமாக இருப்பதை சுக்கிரனின் நிலை எடுத்துக்காட்டுகிறது. மக்களிடையே செல்வாக்கும், பிரபலமும் அதிகரிக்கும். சென்ற சுமார் இரண்டு ஆண்டுகளாக சற்று சிரமமான நிதி நிலைமையிலேயே, சமாளித்துவந்த உங்களுக்கு, சமய சஞ்ஜீவியாக இம்மாத கிரக நிலைகள் அமைந்துள்ளன. வாய்ப்பினை நழுவ விடாமல், நன்கு பயன்படுத்திக்்் கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

அரசியல் துறையினர்: அரசியல் துறையைத் தனது பிடியில் வைத்துக் கொண்டுள்ள சுக்கிரன், இம்மாதம் முழுவதும் ஓரளவே அனுகூலமாக சஞ்சரிக்கின்றார். கட்சியில் நிம்மதியற்ற சூழ்நிலை நிலவும். நீங்களே விலகி நின்றால்கூட, உட்கட்சிப் பூசல்களில் சிக்கிக்கொள்ள வேண்டிவரும். “கட்சியை விட்டு விலகிவிடலாமா...?” -என்ற எண்ணமே மேலிடும். உணர்ச்சிவசப்படுவதையும், திடீர் முடிவுகளையும் தவிர்த்தல் மிக, மிக அவசியம். உங்கள் அரசியல் வாழ்க்கையில், மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் நீங்கள் சிக்கித் தவிப்பதை கிரக நிலைகள் எடுத்துக் காட்டுகின்றன. போட்டி அரசியல் கட்சிகளிலிருந்து, உங்களை அவர்கள் கட்சிக்கு இழுப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

மனக் குமுறல்களினால், இரவில் தூக்கம் கெடும். தீர்க்கமாக சிந்தித்து, முடிவெடுக்க வேண்டியது, மிகவும் அவசியம். அரசியலை விட்டே விலகிவிட மனம் விழையும். உணர்ச்சிவசப்படுவதையும், திடீர் முடிவுகைளையும் தவிர்ப்பது அவசியம்.

மாணவ - மாணவியர்: கல்வித் துறை, பெரும்பாலும் புதன் கிரகத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. அந்த புதன், தற்போது ஓரளவு உங்களுக்கு அனுகூலமாக வலம் வருவதால், பாடங்களில் மனம் தீவிரமாக ஈடுபடும். நற்குணங்களமைந்த சக மாணவர்களின் நட்பு கிடைக்கும். ஆசிரியர்களின் வழிகாட்டுதல்களும், ஆதரவினாலும் உற்சாகம் மேலிடும். நேர்முகத் தேர்வுகளில் வெற்றி கிட்டும்.

விவசாயத் துறையினர்: விவசாயத் துறை செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கத்தில்தான் உள்ளது. அவர், சூரியனுடன் சேர்ந்து, மகர ராசியில் சஞ்சரிப்பதால், தேவைக்கு அதிகமான வெயிலினால், பயிர்கள் சேதமடையக்கூடும். இருப்பினும், விளைச்சல் உழைப்பிற்கேற்றபடியே இருப்பதால், மனதில் உற்சாகமும் மேலிடும்.

பெண்மணிகள்: பெண்மணிகளின் நலன்களைப் பாதுகாப்பதில், சுக்கிரனுக்கு பெரும் பங்குண்டு. அந்தச் சுக்கிரன், சுப பலம் பெற்று சாதகமாக சஞ்சரிப்பதால், இம்மாதம் முழுவதும் பெண்மணிகளுக்கு, பல நன்மைகள் ஏற்படவுள்ளன.

அறிவுரை: இந்தச் சாதகமான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்! காலம் கொடுப்பதை சேமித்து வைத்துக் கொள்வது விவேகமாகும்.

பரிகாரம்: புதன் கிழமைதோறும் அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றிலோ அல்லது உங்கள் வீட்டு்ப் பூஜையறையிலோ மாலையில் பரிகார தீபமாக கூடுதலாக நல்லெண்ணெய் அல்லது நெய் தீபம் ஏற்றிவந்தால் போதும். ஆச்சரியப்படத்தக்க நற்பலன்கள் கிடைக்கும்.

அனுகூல தினங்கள்:

தை : 1 - 3, 7 -9, 13 - 15, 19 - 21, 25 - 27.

சந்திராஷ்டம தினங்கள்:

தை 4 மாலை முதல், 6 பின்னிரவு வரை.