search-icon-img
featured-img

சிம்மம்

Published :

(மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் வரை)

13-2-2026 முதல் 14-3-2026 வரை

குடும்பம்: லாப ஸ்தானத்தில், வக்கிர கதியில் குரு பகவான் சஞ்சரிக்கும் இத்தருணத்தில், ஜென்ம ராசியில் ேகதுவும் அமர்ந்திருக்கிறார்! வருமானத்தை விட, செலவுகளே அதிகமாக இருக்கும். "எங்கே போயிற்று கைப்பணம் அனைத்தும்....?!" என்று நீங்களே வியக்கும்படி செலவுகள் சக்திக்கு மீறியதாக இருக்கும்.மருத்துவச் செலவுகளைத் தவிர்க்க முடியாது. மனைவியின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது, மிகவும் அவசியம் என்பதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.நீதி மன்ற வழக்குகளில், எதிர்பார்ப்பிற்கு மாறான திருப்பம் ஏற்படக்கூடும்.விவாக முயற்சிகளில், சிறு, சிறு பிரச்னைகள் ஏற்பட்டு, கவலையை அளிக்கும்.

உத்தியோகம்: சூரியனுடன், சனி - ராகு கூட்டுச் சேர்க்கை ஏற்பட்டுள்ளதால், வேலை பார்க்கும் இடத்தில், சக-ஊழியர்களுடன் பிரச்னைகள் ஏற்படக்கூடும். அதன் காரணமாக, மன அமைதி பாதிக்கப்படக்கூடும்.சிலருக்கு, விருப்பத்திற்கு மாறான, இடமாற்றம் ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.புதிய வேலைக்கு முயற்சித்துவரும் சிம்ம ராசியினருக்கு, சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட்டு, கவலையளிக்கும்.

தொழில், வியாபாரம்: எதிர்பாராத பிரச்னைகளினால், விற்பனை பாதிக்கப்படக்கூடும். அதன் காரணமாக, லாபம் குறையும்.சகக் - கூட்டாளிகளுடன் கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டு, கவலையளிக்கும். சந்தை நிலவரம் அடிக்கடி மாறுவதால், விற்பனை விலையை நிர்ணயிப்பதில் பிரச்னைகள் ஏற்படும்.நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்பு குறையும். அதன் காரணமாக, அடிக்கடி பணப் பிரச்னை ஏற்படும்.வியாபார அபிவிருத்தி சம்பந்தமாக, வெளிநாடு செல்லும் திட்டம் ஒன்று ஒத்திப் போட வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகும்.கூட்டாளிகளினாலும், எதிர்பாராத பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.

கலைத் துறையினர்: வாய்ப்புகள் குறையும். அதன் காரணமாக, வருமானமும் பாதிக்கப்படக்கூடும்.திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு, படங்கள் பாதியில் நின்றுபோய்விடும். இதற்கு நிதிப் பிரச்னையே காரணமாக இருக்கும்.வெளியூர் மற்றும் வெளிநாட்டுப் பயணங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு வருமானத்தைப் பெற்றுத் தராது. மன நிம்மதி குறையும்.பொறுமை, நிதானம் அவசியம்.

அரசியல் துறையினர்: மேல்மட்டத் தலைவர்களுடன் பழகுவதில் சற்று ஜாக்கிரதையாக இருத்தல் அவசியம் என்பதை சுக்கிரனின் சஞ்சார நிலை வற்புறுத்துகிறது.முக்கிய விஷயங்களில், உங்கள் கருத்துகளை வெளியிடாமலிருப்பது, உங்களுக்கு நல்லது என்பதையும், கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.கூடியவரையில், பிற அரசியல் கட்சித் தலைவர்களுடன், உங்கள் தொடர்பைக் குறைத்துக் கொள்ளுங்கள்.உயர்மட்டத் தலைவர்கள், உங்களை சந்தேகிக்கின்றார்கள் என்பதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.

மாணவ - மாணவியர்: கல்வித் துறையைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுள்ள புதன், ஓரளவு அனுகூலமாக சஞ்சரிப்பதால், படிப்பில், கவனம் செல்லும்.ஆசிரியர்களின் ஆதரவு, உற்சாகத்தைத் தரும். வெளிநாடு சென்று, உயர் கல்வி பயில வேண்டும் என்ற ஆர்வமிருப்பின், அதற்கான பூர்வாங்க முயற்சிகளில் இப்போது ஈடுபடலாம்.

விவசாயத் துறையினர்: விவசாயத் துறையை நிர்ணயிப்பது செவ்வாய் கிரகமாகும் எனக் கூறுகிறது, "பூர்வ பாராசர்யம்" எனும் மிகப் புராதனமான ஜோதிட நூல்!அத்தகைய சக்திவாய்ந்த செவ்வாய், இம்மாதம் முழுவதும், உங்களுக்கு ஆதரவாக சஞ்சரிப்பதால், நல்ல விளைச்சல் கிடைக்கும். தண்ணீர்ப் பஞ்சமிராது.சூரியன் அனுகூலமாக இருப்பதால் சிலருக்கு புதிய விளைநிலம் அமையும் யோகமும் உள்ளது.கால்நடைகளும் சிறந்த அபிவிருத்தியை அடையும். அரசாங்கமும், நிதி நிறுவனங்களும் கைகொடுக்கும்.

பெண்மணிகள்: சப்தம ஸ்தானமாகிய கும்ப ராசியில், சூரியன், சனி, ராகு இணைந்திருப்பதால், உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் மிகவும் அவசியம்.நெருங்கிய உறவினர்களிடையே பரஸ்பர அந்நியோன்யம் பாதிக்கப்படக்கூடும். சிறு விஷயங்களுக்கெல்லாம், உணர்ச்சிவசப்படாமல், சிறிது விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது மன நிம்மதி பாதிக்கப்படுவதைத் தவிர்க்க உதவும்.புதிய வேலைக்கு முயற்சித்துவரும் பெண்மணிகளுக்கு, நல்ல செய்தி காத்துள்ளது.திருமணமாலையை எதிர்பார்த்திருக்கும் கன்னியருக்கு, நல்ல வரன் அமையும்.

அறிவுரை: அதிக அலைச்சலையும், தேவையற்ற கவலைகளையும் தவிர்த்தால் போதும். இல்லாவிடில், உடல் நலன் பாதிக்கப்படும்.

பரிகாரம்: ஞாயிற்றுக் கிழமைகளில், ஏழை ஒருவருக்கு அன்னதானம் செய்தால் போதும். நல்ல பலன் கிட்டும். நாட்டு மாட்டுப் பசுவிற்குப் பூஜை செய்வதன்மூலம், ஆதி பராசக்திக்கு முக்காலமும் பூஜை செய்வித்த புண்ணிய பலனையளிக்கக்கூடியது. பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும், நவகிரகங்களும், எண்ணிலடங்கா ரிஷிமகா சிரேஷ்டர்களும், அஷ்ட வசுக்களும், குடி கொண்டிருப்பதாக புராணங்களும், இதிகாசங்களும் பறைசாற்றுகின்றன. இப்பசுக்களுக்கு பசும் புல் உணவாகக் கொடுப்பது, மகத்தான புண்ணிய பலனைத் தரவல்லது.

அனுகூல தினங்கள்

மாசி : 4-6, 10-12, 16-18, 22-24, 25-29.

சந்திராஷ்டம தினங்கள்

மாசி : 7 மாலை முதல், 9 இரவு வரை.