search-icon-img
featured-img

துலாம்

Published :

15-5-2026 முதல் 14-6-2026 வரை

(சித்திரை 3ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3ம் பாதம் வரை)

குடும்பம்: இம்மாதம் முழுவதும் வருமானம் திருப்திகரமாக இருக்கும். திட்டமிட்டு செலவு செய்தால், சேமிப்பிற்கும் இடமுண்டு. ர்த்த - தல யாத்திரை ஒன்று சித்திக்கும் யோகமும் உள்ளதை கிரக நிலைகள் துல்லியமாக எடுத்துக்காட்டுகிறது.கணவர் - மனைவியரிடையே ஒற்றுமையும், அந்நியோன்யமும் அதிகரிக்கும். குடும்பச் சூழ்நிலை மன நிம்மதியை அளிக்கும். ள்ளை அல்லது பெண் ஒருவருக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். அது, வெளிநாட்டு நிறுவனமாகவும் இருக்கக்கூடும். வாக வயதில், பெண் அல்லது பிள்ளை இருப்பின், நல்ல வரன் நிச்சயமாகும். கல்வி முடிந்து, வீட்டில் இருக்கும் பிள்ளை அல்லது பெண்ணிற்கு நல்ல நிறுவனத்திலிருந்து வேலை நியமன உத்தரவு கிடைக்கும்.தற்காலிகப் பணியாளர்களுக்கு, வேலை நிரந்தரமாகும்.

உத்தியோகம்: புதிய வேலைக்கு முயற்சித்துவரும் துலாம் ராசி அன்பர்களுக்கு, நல்ல செய்தி காத்துள்ளது. வெளிநாடு சென்று பணியாற்ற ஆர்வ மிருப்பவர்கள், இம்மாதத்தில் முயற்சிக்கலாம். வெற்றி கிட்டும். ஏற்கனவே வெளிநாட்டிலிருந்து வரும் நெருங்கிய உறவினர் ஒருவர், குடும்பத்துடன் வருகை தருவது, மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தும்.

தொழில், வியாபாரம்: வர்த்தகத்தை அபிவிருத்தி செய்வதற்கு ஏற்ற தருணம் இதுவே! சகக் கூட்டாளிகள் ஒத்துழைப்பார்கள். ங்கியின் உதவியும், சலுகைகளும் எளிதில் கிட்டும். ருசிலர், தொழில் அபிவிருத்தி சம்பந்தமாக, வெளி நாடு ஒன்றிற்குச் சென்று - வரும் சாத்தியக்கூறும் உள்ளது. புதிய விற்பனைக் கிளைகள் திறப்பதற்கும் சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. பிரபல வர்த்தக நிறுவனம், ஒன்றுடன் கூட்டு விற்பனை செய்வதற்கு ஒப்பந்தமும் கையெழுத்தாகும்.இதன்மூலம், மக்களிடையே செல்வாக்கும் அதிகரிக்கும். உங்கள் வியாபாரத்தை விருத்தி செய்வதற்கு ஏற்ற தருணமிது.

கலைத் துறையினர்: சுக்கிரனின் ஆதிக்கத்தில்தான் உள்ளது, கலைத் துறை! அந்தச் சுக்கிரன், இம்மாதம் முழுவதும், சுப பலம் பெற்று சஞ்சரிப்பதால், கலைத் துறையினருக்கு, மிகவும் உதவிகரமான காலகட்டமாகும். நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். வருமானம் உயரும்.தசா, புக்திகள் சாதகமாக அமைந்திருப்பின், வெளிநாடு சென்று, கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பும் கிட்டும். இதன் காரணமாக, வருமானம் அதிகரிக்கும். உங்கள் பொருளாதார நிலையை சரி செய்து கொள்ள ஏற்ற தருணம் இது. லருக்கு, சொந்த வீடு அமையும் யோகம் இருப்பதையும் செவ்வாயின் நிலை எடுத்துக்காட்டுகிறது. யாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் நடிகைகள், டைரக்டர்கள், சினிமா பட வினியோகஸ்தர்கள் ஆகியோருக்கும் லாபகரமான காலகட்டம் ஆரம்பமாகிறது. வண்டுபோன உள்ளத்திற்கு புத்துயிர் அளிக்கும் காலகட்டம் மலர்ந்துள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.

அரசியல் துறையினர்: அரசியல் துறையை எடுத்துக்காட்டுவதும், நிர்ணயிப்பதும் சுக்கிரனே! அத்தகைய சுக்கிரன், இம்மாதம் முழுவதும் சுப பலம் பெற்று, வலம் வருவதால், அரசியல் துறையினருக்கு அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வருகிறது!! உயர்மட்டத் தலைவர்கள், உங்கள் கருத்துக்களுக்கு செவி சாய்ப்பார்கள்.

மாணவ - மாணவியர்: வித்யாகாரகரான புதன், அனுகூலமாக சஞ்சரிக்கிறார், இம்மாதம் முழுவதும்! ணவ, மாணவியர் பாடங்களில் மனதை முழுமையாகச் செலுத்த இயலும். தேர்வுகளில் உயர்ந்த மதிப்பெண்களைப் பெற்றுத் திகழ்வர்.பலருக்கு, கல்வி உதவித் தொகை கிடைப்பதற்கும் நல்ல வாய்ப்புள்ளது. வெளிநாடு சென்று பிரத்யேக உயர்கல்வி பயில ஆர்வமிருப்பின், முயற்சிக்கலாம்.

விவசாயத் துறையினர்: விவசாயத் துறையைத் தனது பிடியில் வைத்துக் கொண்டுள்ள கிரகங்கள் செவ்வாயும், சூரியனுமாவார்கள்! வ்விருவர்களும், அனுகூலமாக சஞ்சரிப்பதால், நல்ல பலன் கிட்டும்.தற்போது நடைபெறும் தசா, புக்திகள் சாதகமாக இருப்பின், புதிய கால்நடைகள்வாங்கும் யோகமும், அமைந்துள்ளது. பழைய கடன்கள் இருப்பின், அவற்றை அடைத்து, நிம்மதி பெறலாம். ஒருசிலருக்கு, புதிய விளைநிலம், பசுக்கள் வாங்கும் யோகமும் அமைந்துள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.

பெண்மணிகள்: குறிப்பாக, பெண்மணிகளுக்கு யோக பலன்களை அளிக்கக்கூடிய மாதமாகும் இந்த வைகாசி! ‘‘மனம்போல் மாங்கல்யம்...!” என்பார்களே, பெரியோர்கள்!! அதற்கேற்றாற்போல் பெண்மணிகளுக்கு மிகவும் அனுகூலமான காலகட்டம் இது!கட்டிக்காத்துவந்த, ஆசைகள், எண்ணங்கள், கனவுகள் ஆகியவை நிறைவேறும்.

அறிவுரை: பணவரவு அதிகமாக இருக்கிறதே என்பதற்காக செலவழித்து விடாதீர்கள். உங்கள் எதிர்காலத்திற்கென்று சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.

பரிகாரம்: தினமும் ஒரு சர்க்கம் சுந்தர காண்டம் படித்து வந்தால் போதும்.அதியற்புத பலன்களைப் பெறப்போவது திண்ணம்.

அனுகூல தினங்கள்

வைகாசி : 1, 5-7, 11-14, 18-21, 25-27

சந்திராஷ்டம தினங்கள்

வைகாசி : 2 இரவு முதல், 4 பின்னிரவு வரை. மீண்டும் 30 காலை முதல், 31 வரை.