(சித்திரை 3ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3ம் பாதம் வரை)
13-2-2026 முதல் 14-3-2026 வரை
குடும்பம்: பாக்கிய ஸ்தானத்தில் குரு பகவான் வக்கிரத்தில் இருப்பதுடன், ராசியையும் பார்வையிடுவது அனுகூலமான கிரக நிலையாகும். வருமானம் திருப்திகரமாகவே இருக்கும். செலவுகள் கட்டுக்கடங்கி இருக்கும். மனைவியின் ஆரோக்கியத்தில் சிறிது முன்னேற்றத்தைக் காணலாம். திருமண முயற்சிகள் கைகூடும். பழைய கடன்கள் இருப்பின் அவற்றை அடைத்து நிம்மதி பெறமுடியும்.விவாக வயதில் பெண் அல்லது பிள்ளை இருப்பின், நல்ல வரன் அமையும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிட்டும். நிச்சயதார்த்தம், திருமணம், வளைகாப்பு, மகப்பேறு, போன்ற சுபச் செலவுகளில் பணம் விரயமாகும். ஜாதகத்தில் செவ்வாய் மற்றும் குரு ஆகிய இருவரும் சுப பலம் பெற்றிருப்பின், சொந்த வீடு அமையும் பாக்கியமும் உள்ளது.
உத்தியோகம்: பூர்வ புண்ணிய ஸ்தானத்தில், சுக்கிரன், சனி, ராகுவின் சேர்க்கை ஏற்பட்டுள்ளதால், வேலை பார்க்கும் இடத்தில் பணிச் சுமை அதிகமாக இருப்பினும், ஊதிய உயர்வு, பதவியுயர்வு ஆகியவற்றிற்கு சாத்தியக்கூறு உள்ளது.புதிய வேலைக்கு முயற்சித்துவரும் அன்பர்களுக்கு, வெற்றி கிட்டும்.புதிய விற்பனைக் கிளைகள் திறப்பதற்கு ஆதரவாக அமைந்துள்ளன, கிரக நிலைகள். ஆதலால், முயற்சிக்கலாம். மிகுந்த லாபகரமாக இருக்கும்.
தொழில், வியாபாரம்: தொழில் மற்றும் வர்த்தகத் துறையை அபிவிருத்தி செய்வதற்கு ஏற்ற காலகட்டம் இது!புதிய கிளைகள் திறக்கலாம். அளவோடு புதிய துறைகளில் முதலீடு செய்யலாம். வெளிநாட்டிலுள்ள பிரபல வர்த்தக நிறுவனத்துடன் கூட்டு ஒப்பந்தம் செய்து கொள்ள கிரக நிலைகள் சுப பலம் பெற்றுள்ளன, ஆதலால் முயற்சிக்கலாம். முயற்சி திருவினையாக்கும்!!சுக்கிரன் பலம் பெற்று வலம் வருவதாலும், ஜீவனகாரகரான சனி பகவானும் அனுகூலமாக சஞ்சரிப்பதால், முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும்.வங்கிகள், மற்றும் இதர நிதி நிறுவனங்கள்ஆகியவற்றின் ஒத்துழைப்பு, கைகொடுக்கும்.
கலைத் துறையினர்: மக்களிடையே செல்வாக்கும், புகழும் ஓங்கும். வருமானம் உயரும்.திரைப்படத் தயாரிப்பாளர்கள் புதிய படங்களை எடுப்பதில் தங்கள் கவனத்தைச் செலுத்தலாம். லாபம் உங்களைத் தேடி வரும்.சில தயாரிப்புகள், உலக அளவில் பிரபலமாகும்.
அரசியல் துறையினர்: அரசியல் துறையை தனது பிடியில் வைத்துக் கொண்டுள்ள சுக்கிரன், அனுகூலமாக சஞ்சரிப்பதால், அரசியல் துறையினருக்கு, உதவிகரமான மாதமிது.உங்கள் எதிர்கால அரசியல் வாழ்க்கையை மாற்றியமைக்கும் காலகட்டத்தில் இப்போது நீங்கள் இருக்கிறீர்கள்!
மாணவ - மாணவியர்: கல்வித் துறைக்கு அதிபதியான, புதனுக்கு "வித்யாகாரகர்" என்ற திருநாமமும், பெருமையும் உண்டு! ஜாதகத்தில் புதன் சுப பலம் பெற்றிருந்தால் மட்டுமே, கல்வித் துறையில் புகழ் பெற முடியும். அத்தகைய தனிச் சிறப்பு வாய்ந்த புதன், தற்போது உங்களுக்கு பூரணமான ஆதரவுடன் சஞ்சரிப்பதால், படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடினமான பாடங்களையும், எளிதில் புரி்ந்து கொள்ளும் திறமையை அளித்தருள்வார், சுக்கிரன். பலருக்கு, ெவளிநாடு சென்று விசேஷ உயர் கல்வி பயில்வதற்கு உதவித் தொகை கிடைக்கும். பற்றிக் கொள்ளுங்கள், இவ்வரிய வாய்ப்பினை!
விவசாயத் துறையினர்: பூமிகாரகரான செவ்வாய், மற்றும் சூரியன், ராகு ஆகிய கிரகங்கள் அனுகூலமாக சஞ்சரிப்பதால், விளைச்சல் அமோகமாகவே இருக்கும்."கொடுப்பதிலும், கெடுப்பதிலும் ராகுவிற்கு நிகர் அவரே....!" எனக் கூறுகின்றன, மிகப் புராதன ஜோதிடக் கிரந்தங்கள்.இவ்வுண்மை உங்கள் நிலத்தைப் பார்த்தாலே தெரியவரும். பச்சைப் பசேலென்று பார்த்த இடமெங்கும் நீக்கமற நிறைந்துள்ள வயல்கள் இதனைப் பறைசாற்றும், இம்மாதம். வருமானம் உயரும். விளைச்சல் எதிர்பார்ப்பைவிட அதிகமாகவே இருக்கும். கால்நடைகளும் நல்ல அபிவிருத்தியை அடையும்.தசா, புக்திகள் சுப பலம் பெற்றிருப்பின், புதிய விளைநிலம் மற்றும் கால்நடைகள் சேரும் யோகமும் உங்களுக்குத் துணை நிற்கின்றன.பழைய கடன்கள் இருப்பின், அவற்றை அடைத்து, நிம்மதி பெறுவீர்கள்.
பெண்மணிகள்: பெண்மணிகளுக்கு, மகிழ்ச்சியை அளிக்கும் மாதமிது! எண்ணங்கள், எதிர்பார்ப்புகள் அனைத்தும் ஈடேறும். சிலருக்கு, சிறு, சிறு உடல் உபாதைகள் ஏற்பட்டு, எளிய மருத்துவ சிகிச்சை மூலம் குணம் கிடைக்கும்.திருமணத்திற்குக் காத்துள்ள பெண்மணிகளுக்கு, சிறு தடங்கல் ஏற்பட்டு, அதன் பிறகு நல்ல வரன் அமையும். திருமணமாகியுள்ள பெண்மணிகள் கருத்தரிக்க உகந்த காலம் இதுவே!
அறிவுரை: இம்மாதத்தில் பல நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். அவற்றைக் கைநழுவ விட்டுவிடாமல், உங்கள் நலனிற்காகப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம். அதிக உழைப்பினாலும், உஷ்ணத்தினாலும் அடிக்கடி ஓய்வெடுக்க மனம் விழையும். ஆதலால், சக்திக்கு மீறி உழைக்க பாடுபடவேண்டாம்.
பரிகாரம்: அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றில், மாலையில் பசு நெய் அல்லது எள் எண்ணெய் தீபம் ஒன்று ஏற்றிவந்தால் போதும்.
அனுகூல தினங்கள்
மாசி : 1, 2, 7-9, 14-16, 21-23, 27-29.
சந்திராஷ்டம தினங்கள்
மாசி : 11 இரவு முதல், 13 பின்னிரவு வரை.


