search-icon-img
featured-img

மீனம்

Published :

(17-11-2025 முதல் 15-12-2025 வரை)

(பூரட்டாதி 4ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி வரை)

குடும்பம்: உங்கள் ராசி நாதனாகிய குரு பகவான், ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உச்ச கதியில் நின்று, ஜென்ம ராசியை தன் சுபப் பார்வையினால், பலப்படுத்துவது பல நன்மைகளை அளிக்கவல்ல கிரக நிலைகளாகும். "குரு பார்வை, கோடி தோஷங்களைப் போக்கும்....!" என்பது ஆன்றோர் வாக்காகும். தேவைக்கு ஏற்ப, வருமானம் கிடைப்பதால், இம்மாதம் முழுவதும் பணப் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை! ஏழரைச் சனிக் காலத்தினாலும், ராகுவினாலும் ஏற்படும் தோஷத்தை, குரு பகவான், ராசியைப் பார்ப்பது பெருமளவில் குறைத்துவிடுகிறது, இருப்பினும், அதிக அலைச்சலும், உழைப்பும், எதிர்காலத்தைப் பற்றிய கற்பனையான கவலைகளும், உடலிலும் உள்ளத்திலும் சோர்வை ஏற்படுத்தும். சிறு சிறு உபாதைகளினால், மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். திருமண முயற்சிகளில் சிறு பிரச்னைகள் ஏற்பட்டு, பின்பு கைகூடும். குடும்பத்தில், நிச்சயதார்த்தம், திருமணம், வளைகாப்பு, குழந்தை மகப்பேறு போன்ற சுப நிகழ் சசிகளும், ஆன்மிக நிகழ்ச்சிகளும் நிகழும். குல ஆசாரியர் அல்லது மகான் ஒருவரின் தரிசனம் மன நிறைவையளிக்கும். தசா, புக்திகள் சுப பலம் பெற்றிருப்பின், வெளிநாட்டில் வசித்துவரும் நெருங்கிய உறவினர் ஒருவரைப் பார்த்த

உத்தியோகம்: வக்கிர கதியில் சஞ்சரிக்கும் சனி பகவானும், ராகுவும் சாதகமாக இல்லை! ஆயினும், ஜென்ம ராசிக்கு உச்ச குரு பகவானின் சுபப் பார்வை கிடைக்கிறது, பணிச் சுமை அதிகமாக இருப்பினும், மேலதிகாரிகள், நிர்வாகத்தினர் ஆகியோரின் ஆதரவும் அங்கீகாரமும் மன நிறைவையளிக்கும். புதிய வேலைக்கு முயற்சித்துவரும் மீன ராசியினருக்கு, மனத்திற்கு உகந்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். தற்காலிகப் பணியாளர்களுக்கு, வேலை நிரந்தரமாகும். வெளிநாடு சென்று பணியாற்ற ஆர்வமிருப்பின் இம்மாதத்தில் முயற்சிக்கலாம். எளிதில் வெற்றி கிட்டும்.

தொழில், வியாபாரம்: இவ்விரு துறைகளும், பெரும்பாலும் சனி, சுக்கிரன் மற்றும் செவ்வாய் ஆகிய மூவரின் கட்டுப்பாட்டில்தான் இருப்பதாக"ஜோதிட அலங்காரம்", "ஜோதிட பாரிஜாதம்", "உத்திர காலாம்ருதம்" போன்ற புராதன ேஜாதிட நூல்கள் விவரித்துள்ளன. இம்மூன்று கிரகங்களும் வர்த்தகத் துறையினருக்கு, ஆதரவாகவே சஞ்சரிப்பதால், நல்ல லாபம் கிடைக்கும். புதிய விற்பனை நிலையங்கள் திறப்பதற்கு ஏற்ற மாதம் இந்தக் கார்த்திகை! நிதி நிறுவனங்களின் ஆதரவும் எளிதில் கிட்டும். வெளிமாநிலப் பயணங்கள் லாபகரமானதாக இருக்கும். வெளிநாட்டு நிறுவனங்களுடன் பல ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும்.

கலைத்துறையினர்: கலைத் துறைக்கு அதிகாரம் படைத்த அனைத்து கிரகங்களும், சுப பலம் பெற்று வலம் வருவதால், கலைத் துறை அன்பர்களுக்கு, வருமானம் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் முயற்சியின்றி உங்களைத் தேடி வரும். வருமானம் உயரும். மக்களிடையே செல்வாக்கு அதிகரிக்கும். பரதநாட்டியக் கலைஞர்கள், சங்கீத வித்வான்கள், நாதஸ்வர வித்வான்கள் ஆகியோருக்கு அதிர்ஷ்டகரமான மாதம் இது என கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. தசா, புக்திகள் அனுகூலமாக இருப்பின், வெளிநாடு சென்று கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்புகளும், கிட்டும். அதனால் வருமானமும், செல்வாக்கும், அதிகரிக்கும்.

அரசியல் துறையினர்: இம்மாதம் முழுவதும், அரசியல் துறையை தனது கட்டுப்பாட்டில் கொண்டுள்ள பிரதான கிரகமான சுக்கிரன் அனுகூலமாக சஞ்சரிப்பதால், கட்சியில் ஆதரவு பெருகும். உயர்மட்டத் தலைவர்களுக்கு, உங்கள் மீது பூரண நம்பிக்கை பிறக்கும். பிரமுகர் ஒருவரின் நட்பும், தொடர்பும் உங்கள் அரசியல் வாழ்க்கையை திருப்பு முனையாக அமையவிருப்பதை கிரக நிலைகள் குறிப்பிட்டுக் காட்டுகின்றன. உங்கள் அரசியல் வாழ்க்கையில், மிக முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளது இம்மாதம் என்றால், அது மிகையல்ல!!

மாணவ - மாணவியர்: அனைத்து கிரகங்களும் உங்களுக்குச் சாதகமாக சஞ்சரிப்பதால், கிரகிப்புத் திறன் அதிகரிக்கும். நினைவாற்றலும் உயரும். உயர் கல்விக்கு நிதியுதவி எளிதில் கிட்டும். வெளிநாடு சென்று, பிரசித்திப் பெற்ற கலாசாலையில் கல்வி பயில ஆர்வமிருப்பின், அது நிறைவேறும். பிரசித்திப் பெற்ற கல்லூரியில் இடம் கிடைக்கும். விடுதிகளில் தங்கி, படித்துவரும் மாணவ - மாணவியருக்கு, பாடங்களில் உற்சாகம் மேலிடும். நற்குணங்களமைந்த சக-மாணவ-மாணவியரின் நட்பு கிட்டும்.

விவசாயத் துறையினர்: விவசாயத் துறை பெரும்பாலும், பூமி காரகரான செவ்வாயின் ஆதிக்கத்தில்தான் உள்ளது. அவர் தற்போது சிறந்த சுப பலம் பெற்று, சூரியனுடன், விருச்சிக ராசியில் சஞ்சரிப்பது அமோக விளைச்சலையும், வருமானத்தையும் உறுதிசெய்கிறது. தண்ணீர்ப் பற்றாக்குறை இருப்பதற்கு வாய்ப்பில்லை. உரிய காலத்தில், அளவோடு மழை பெய்யும். விவசாயத்திற்கு அவசியமான இடுபொருட்கள் எளிதில் கிடைக்கும். சந்தையில், உங்கள் விளை பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும். வெளிநாடுகளுக்கு சரக்குகளை ஏற்றுமதி செய்யும் துறையினருக்கு, புதிய ஆர்டர்கள் உற்சாகத்தையளிக்கும்.

பெண்மணிகள்: இம்மாதம் முழுவதும் பெரும்பான்மையான கிரகங்கள், ஆதரவாக சஞ்சரிப்பதால், உங்கள் எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும். குடும்பச் சூழ்நிலை, மன நிறைவையளிக்கும். குழந்தைகளின் கல்வி முன்னேற்றம் மகிழ்ச்சி தரும். வேலைக்கு முயற்சித்துவரும் வனிதையருக்கு, நல்ல வேலை கிடைக்கும். தற்காலிகப் பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும்

அறிவுரை: ஏழரைச் சனி நடப்பதாலும், அவருடன் ராகு இணைந்திருப்பதாலும், அடிக்கடி ஏதாவதொரு உடல் உபாதை ஏற்பட வாய்ப்புள்ளது. எளிய சிகிச்சையினால், குணம் கிட்டும்.

பரிகாரம்: தினமும் காகத்திற்கு சிறிது நெய், எள், பருப்பு சேர்த்த ஐந்து சாத உருண்டைகள் வைத்து வந்தால் போதும். நல்ல பலன் கிடைக்கும்.

அனுகூல தினங்கள்:

கார்த்திகை : 4-7, 11-14, 18-20, 25-27.

சந்திராஷ்டம தினங்கள்:

கார்த்திகை : 1-ந் தேதி மாலை முதல், 3-ந் தேதி அதிகாலை வரை. மீண்டும் 28-ந் தேதி இரவு முதல், 29-ந் தேதி வரை.