(15-01-2026 முதல் 12-02-2026 வரை)
(கிருத்திகை 2ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2ம் பாதம் வரை)
குடும்பம்: தன ஸ்தானத்தில், வக்கிர கதியில் குருவும், ஜீவன ஸ்தானத்தில், சனி - ராகு கூட்டுச் சேர்க்கையும் ஏற்பட்டுள்ளதால், வருமானத்திற்குக் குறைவிராது. குடும்பத்தில், சுபச் செலவுகளான, நிச்சயதார்த்தம், திருமணம், வளைகாப்பு, மகப்பேறு, கிரகப்பிரவேசம் ஆகியவை நிகழ வாய்ப்புள்ளது. பலருக்கு, சொந்த வீடு அமையும் யோகமும் இருப்பதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. விவாக வயதிலுள்ள பெண் அல்லது பிள்ளை இருப்பின், மனத்திற்கு மகிழ்ச்சியை அளிக்கும் நல்ல வரன் அமையும்.
உத்தியோகம்: ஜீவன காரகரான சனி பகவான், ராகுவுடன் சேர்ந்து, தனது ஆட்சி வீடான கும்ப ராசியில் சஞ்சரிப்பதால், புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு, மனத்திற்குப் பிடித்த நிறுவனத்தில், நல்ல ஊதியத்துடன்கூடிய வேலை கிடைக்கும். தாற்காலிகப் பணியாளர்களுக்கு, பணி நிரந்தரமாகும். தசா, புக்திகள் சுப பலம் பெற்றிருப்பின், அத்தகைய ரிஷப ராசி அன்பர்களுக்கு, பணி உயர்வு கிடைப்பதற்கும், சாத்தியக்கூறு உள்ளது. தொழில், வியாபாரம்: உங்கள் உற்பத்தியை அதிகரித்துக் கொள்வதற்கும், புதிய விற்பனைக் கிளைகள் திறப்பதற்கும் ஏற்ற மாதம் இந்தத் தை மாதமாகும்!! வியாபார அபிவிருத்தி சம்பந்தமாகவும், கூட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவதற்காகவும் வெளிநாடு சென்று - வரும் வாய்ப்பும் பலருக்கு உள்ளதை கிரக நிலைகள் தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. பிரபல வெளிநாட்டு நிறுவனங்களுடன் கூட்டு ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கும் சாத்தியக்கூறு உள்ளது.
கலைத் துறையினர்: கலைத் துறைக்கு அதிகாரம் கொண்டுள்ள சுக்கிரன், சிறந்த சுப பலம் பெற்று சஞ்சரிப்பதால், நல்ல புதிய வாய்ப்புகளும், அவற்றின் காரணமாக, செல்வாக்கும், வருமானமும், புகழும் உயரும். தசா, புக்திகள் அனுகூலமாக இருப்பின், ெவளிநாடு சென்று, அங்கு பல கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பும் உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. ஒரு சிலருக்கு, சொந்தத் திரைப்படம் எடுப்பதற்கும், அது லாபகரமானதாக இருப்பதற்கும் சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் உள்ளங்கை நெல்லிக் கனிபோல் உணர்த்துகின்றன. துணிந்து, புதிய முயற்சிகளில் பணத்தை முதலீடு செய்யலாம். மகத்தான வெற்றியுடன் கூடிய நல்ல லாபமும் கிடைக்கும்.
அரசியல் துறையினர்: கட்சியில் செல்வாக்கும், அதிகாரமும் உயரும். மத்திய, மாநில அரசுகளுடன் சுமுகமான உறவுகள் நீடிக்கிறது. வருமானம் ஏற்றத் தாழ்வின்றி ஒரே சீராக நீடிக்கிறது. பிற அரசியல் கட்சிகளுடன் பகையுணர்ச்சி ஏதுமின்றி, நட்புணர்ச்சியே மேலிடும் என்பதை சுக்கிரனின் சஞ்சார நிலை உறுதிசெய்கிறது. கட்சித் தொண்டர்களிடையே செல்வாக்கு அதிகரிக்கும். ஒருசிலர் கட்சியில் புதிய பொறுப்புகளை ஏற்கவேண்டிவரும். கட்சிப் பணிகள் தொடர்பாக, வெளிநாடு சென்றுவரும் வாய்ப்பும் சிலருக்குக் கிட்டும். மத்திய கிழக்கு நாடு ஒன்றின் அழைப்பிற்கிணங்க, அந்நாட்டிற்குச் சென்று வரும் சாத்தியக்கூறு உள்ளதையும் கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.
மாணவ - மாணவியர்: மாணவ மணிகளின் கல்வி முன்னேற்றத்தைத் தனது பிடியில் வைத்துக் கொண்டுள்ள பிரதான கிரகம், “வித்யாகாரகர்” எனப்படும் புதனேயாவார்! அத்தகைய பெருமையும், சக்தியும் கொண்டுள்ள புதன், இம்மாதம் முழுவதும் உங்களுக்கு அனுகூலமாகவே சஞ்சரிப்பதால், படிப்பில் ஆர்வம் மேலிடும். நல்ல நண்பர்களின் சகவாசம் கிட்டும். உயர்கல்விக்கு நிதியுதவி எளிதில் கிட்டும். வெளிநாடு சென்று பிரத்யேக உயர் கல்வி பயில விருப்பம் இருப்பின், இம்மாதத்திலேயே அதற்கான பூர்வாங்க திட்டங்களை வகுத்துக் கொள்ளலாம்.
விவசாயத் துறையினர்: விவசாயத் துறைக்கு ஆதிபத்தியம் கொண்டுள்ள பிரதான கிரகங்கள் சூரியனும், செவ்வாயுமாவார்கள் என, “சூரிய சித்தாந்தம்” எனும் நூல் விளக்கியுள்ளது. பயிர்கள் செழித்து வளர இவ்விரு கிரகங்களின் சஞ்சார நிலைகள் சாதகமாக இருக்க வேண்டும். இம்மாதம் முழுவதும் இவ்விரு கிரகங்களும் பூரண சுபப் பலத்துடன் வலம் வருவதால், பயிர்கள் நல்ல விளைச்சலைத் தரும். சந்தையில் உங்கள் விளை பொருட்களுக்கு நல்ல விலையும் கிடைக்கும். உங்கள் பொருளாதார நிலையைச் சீர்செய்து கொள்வதற்கு, ஏற்ற மாதம் இதுவே! ெவளிநாடுகளுக்கான ஏற்றுமதியும் அதிகரிக்கும்.
பெண்மணிகள்: பெண்மணிகளின் நன்மை - தீமைகளை நிர்ணயிக்கும் கிரகங்கள் ஓரளவு இம்மாதம் முழுவதும் அனுகூலமாகவே சஞ்சரிப்பதால், குடும்பப் பொறுப்பை ஏற்றுள்ள பெண்மணிகளுக்கு நன்மைகளே அதிகமாக இருக்கும்! குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சியை அளிக்கும். திருமண வயதிலுள்ள கன்னியருக்கு, நல்ல வரன் அமையும். வேலைக்கு முயற்சித்துவரும் ரிஷப ராசி பெண்மணிகளுக்கு, நல்ல நிறுவனத்தில் மனத்திற்குப் பிடித்தமான வேலை கிடைக்கும். வெளிநாடு சென்று, உயர் கல்வி பெற ஆர்வமுள்ள பெண்களுக்கு, சிறு முயற்சியினாலேயே பிரசித்திப் பெற்ற கலாசாலையில் இடம் கிடைக்கும். சிலருக்கு, பண உதவி கிடைப்பதற்கும் சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.
அறிவுரை: கிடைக்கும் சந்தர்ப்பங்களைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சிறு, சிறு பிரச்னைகள் காரணமாக, மனவுறுதியைத் தளரவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்!
பரிகாரம்: புதன் மற்றும் சனி ஆகிய இரு தினங்களிலும் வீட்டின் பூஜையறையிலோ அல்லது அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றிலோ, மாலை வேளையில் சிறு மண் அகல் விளக்கில் தீபம் ஏற்றி வந்தால் நல்ல பலன் கிட்டும், இதை அனுபவத்தில் காணலாம்.
அனுகூல தினங்கள்:
தை : 1, 5 - 8, 12 - 14, 18 - 21, 25 - 27.
சந்திராஷ்டம தினங்கள்:
தை : 2 காலை முதல், 4 மாலை வரை.


