(புனர்பூசம் 4 ம் பாதம், பூசம், ஆயில்யம்)
அன்பால் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் கடக ராசி அன்பர்களே, இதுவரை உங்கள் ராசிக்கு 12ல் விரைய குருவாக சஞ்சரித்து தேவையற்ற வீண் விரயங்கள், மருத்துவ செலவுகள், மறைமுக எதிர்ப்புகள், தேவையில்லாத குழப்பங்கள் தந்த குரு பகவான் தற்போது உங்கள் ராசியிலேயே ஜென்ம குருவாக சஞ்சரிப்பதால் இதுவரை இருந்த தடைகள் பிரச்னைகள் நீங்கும். இருப்பினும் மனக்குழப்பம் அதிகரிக்கும். கடந்த காலத்தில் நடந்த இழப்புகளை நினைத்து எதிர்மறை சிந்தனைகள் வர வாய்ப்புள்ளதால் நேர்மறை சிந்தனையை வளர்த்துக் கொள்ளுங்கள். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. எதிலும் பொறுமை நிதானம் அவசியம். மனதில் தைரியம் தன்னம்பிக்கை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.குரு பகவான் தனது 5ம் பார்வையால் 5ம் வீட்டை பார்ப்பதால் குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு. குரு பகவான் தனது 7ம் பார்வையால் 7ம் வீட்டை பார்ப்பதால் கணவன் மனைவிக்குள் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். குரு பகவான் தனது 9ம் பார்வையால் 9ம் வீட்டை பார்ப்பதால் குருவின் வழிகாட்டுதல் உண்டு.வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் அதிக கவனம் தேவை. புதிய வியாபாரம் முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. எதிலும் சிந்தித்து செயல்படுங்கள்.உத்யோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்ல வேண்டியது அவசியம். எந்த விஷயத்தையும் நாசுக்காக கையாளுங்கள். பொறுமை தேவை.மாணவர்களுக்கு அன்றன்றைய பாடங்களை காலம் தாழ்த்தாமல் அன்றே படிப்பது நல்லது. யோகா தியானம் பயில்வது நினைவாற்றலை அதிகரிக்கும்.கலைத்துறையினருக்கு தற்போதுள்ள வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். புதிய வாய்ப்புகள் தாமதமாகலாம்.
பரிகாரம்: திருப்பதி வெங்கடாஜலபதியை திங்கட்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.


