தென்காசி: கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் கல்லகநாடி முப்புடாதி அம்மன் கோயில் திருவிழாவில் நேற்று தேரோட்டம் நடந்தது. கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் கல்லகநாடி முப்புடாதி அம்மன் கோயிலில், தைத்திருவிழா கடந்த 14ம் தேதி தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் நடந்து வருகிறது. விழாவை முன்னிட்டு தினமும் காலை மற்றும் மாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, அம்மன் வீதி உலா மற்றும் கலைநிகழ்ச்சி நடந்து வருகிறது. விழாவில் 9ம் நாளான நேற்று மதியம் தேரோட்டம் நடந்தது.
தேரோட்டத்தை பண்பொழி திருமலைக்குமாரசாமி கோயில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் அருணாசலம், பரமேஸ்வரி அருணாசலம் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கேரள செண்டை மேளம் முழங்க தேரை வடம்பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். இதில் கடையநல்லூர், புளியங்குடி, தென்காசி, சிவகிரி, செங்கோட்டை, அச்சன்புதூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்துமாலையில் நிலையம் வந்தடைந்தது. தொடர்ந்து இரவில் வாணவேடிக்கை நடந்தது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.
ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில வேலைகளை உங்கள் மேற்பார்வையிலேயே முடிப்பது நல்லது. குடும்பத்தில் சண்டை சச்சரவு வந்து நீங்கும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்தியோகத்தில் மறைமுக அவமானம் வந்து நீங்கும். அலைச்சல் அதிகரிக்கும் நாள்.