14.4.24 முதல் 20.4.24 வரை
காரிய அனுகூலம் உண்டாகும். எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடிக்க தேவையான உதவிகள் கிடைக்கும். சுய நம்பிக்கை அதிகரிக்கும். எந்த பிரச்னையையும் எதிர்கொள்ளும் தைரியம் உண்டாகும். வழக்குகளில் இருந்து வந்த மந்தநிலை மாறும். மனதை கவலை கொள்ளச் செய்த பிரச்னைகளில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட்டு சாதகமான பலன் கிடைக்க பெறலாம். குடும்பத்தில் தேவையற்ற பிரச்னைகளை தலை தூக்கச் செய்யும். எனவே சாதுரியமாக பேசி எதையும் சமாளிப்பது நல்லது. பொதுவான காரியங்களில் ஈடுபடும் போது கவனமாக இருப்பது நல்லது. தொழில், வியாபாரம் முன்னேற்றப் பாதையில் செல்லும். வேலை தேடி கொண்டு இருப்பவர்களுக்கு உத்யோக வாய்ப்புகள் வரும். கலைத்துறையினருக்கு திறமை வெளிப்படும். அரசியல்வாதிகளுக்கு மரியாதையும் அந்தஸ்தும் கூடும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான சிக்கல்கள் குறையும்.
பரிகாரம்: சப்த கன்னியரை தீபம் ஏற்றி வணங்க மன கவலை தீரும்.