24.3.24 முதல் 30.3.24 வரை
எந்த காரியத்தை செய்தாலும் லாபம் ஏற்படும். உடல் சோர்வு நீங்கும். வீண் பிரச்னைகள் அகலும். நண்பர்கள் உறவினர்களுடன் மனவருத்தம் நீங்கி சுப உறவு உண்டாகலாம். பயணங்கள் செல்ல நேரிடும். கூட்டு தொழில் அல்லது வியாபாரம் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும். வேலைப்பளு கூடும். குடும்பத்தில் அடுத்தவர்களால் ஏதேனும் குழப்பம் உண்டாகலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. பெண்களுக்கு உறவினர்களிடம் பேசும் போது கவனமாக பேசுவது நல்லது. கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சேமிப்புகளில் கவனம் செலுத்துவர். அரசியல்வாதிகள் பொறுப்பான பணிகளுக்காக தலைமையின் பாராட்டுகளைப் பெறுவர்.மாணவர்களுக்கு கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது. பெரியோர் சொல்படி நடப்பது வெற்றிக்கு உதவும்.
பரிகாரம்: முருகனை வணங்கி வர மனஅமைதி கிடைக்கும்.