(மிருகசீரிடம் 3 4 ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1 2 3 ம் பாதம்)
எந்த சூழ்நிலையையும் எளிதாக சமாளிக்க கூடிய மிதுன ராசி அன்பர்களே, இதுவரை உங்கள் ராசிக்கு 10ல் சஞ்சரித்து தொழில் மற்றும் உத்யோகத்தில் பல்வேறு இன்னல்களையும், இடம் மாற்றங்களையும், உயர் அதிகாரி மற்றும் சக ஊழியர்களால் பிரச்னைகளையும், உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்காமல் இருப்பதையும் தந்த குரு பகவான் தற்போது உங்கள் ராசிக்கு 11ல் சஞ்சரிப்பதால் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பொருளாதார நிலை உயரும். எதிர்பாராத பண வரவு உண்டு. தொழில் மற்றும் உத்யோகத்தில் உயர்வு ஏற்படும். முக்கிய பிரமுகர்கள் அறிமுகமும் நட்பும் கிடைக்கும். புகழ் செல்வாக்கு உயரும். குரு பகவான் தனது 7ம் பார்வையால் 5 ஐ பார்ப்பதால் நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியத்திற்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஷேர் மார்க்கெட்டில் லாபம் பெருகும்.குரு பகவான் தனது 9 ம் பார்வையால் 7ஐ பார்ப்பதால் திருமண முயற்சிகள் கைகூடும். கணவன், மனைவி கருத்து வேறுபாடுகள் விலகும். வியாபார ரீதியான புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புதிய வியாபார முயற்சிகள் கை கூடும். மாணவர்களுக்கு கல்வியில் மேன்மை உண்டாகும்.விளையாட்டுத் துறையிலும் சாதிப்பர்.அரசியல்வாதிகளுக்கு தலைமையிடம் நெருக்கம் அதிகரிக்கும். தலைமை உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்.கலைத்துறையினர் தற்போதுள்ள வாய்ப்புகளால் பிரபலம் அடைவர். சம்பள விகிதம் உயரும்.
பரிகாரம்: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரரை புதன்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.