(மகம், பூரம், உத்திரம் 1 ம் பாதம்)
கம்பீரமும் அதிகார தோரணையும் மிக்க சிம்மராசி அன்பர்களே,இதுவரை உங்கள் ராசிக்கு 8 ல் அஷ்டம குருவாக சஞ்சரித்து எடுக்கும் முயற்சிகளில் தடை, மற்றவர்களால் வீண் பிரச்னைகள், உடல் ஆரோக்கிய பாதிப்பு, மன குழப்பம் தந்த குரு பகவான் தற்போது உங்கள் ராசிக்கு 9ல் சஞ்சரிப்பதால் தடைகள் நீங்கும், எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும், தந்தையால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். தந்தை உங்கள் உயர்வுக்கு உறுதுணையாக இருப்பார்.உடன்பிறப்புகளால் நன்மை உண்டாகும். குரு மற்றும் மூத்தோரின் ஆசி கிடைக்கும். குல தெய்வ வழிபாடு நன்மை தரும். வெளிநாட்டு தொடர்பால் ஆதாயம் உண்டு. தொழில் மற்றும் உத்யோகத்தில் உயர்வு ஏற்படும். உயர் அதிகாரிகள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் ஏற்படும். புதிய வியாபாரம் முயற்சிகள் கைகூடும். லாபம் பல மடங்கு அதிகரிக்கும்.உத்யோகஸ்தர்களுக்கு மதிப்பு கூடும்.பதவி உயர்வு, ஊதிய உயர்வு தேடி வரும். மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுத்து சாதனை படைப்பர். உங்கள் தனித் திறன் வெளிப்படும். அரசியல்வாதிகளுக்கு தலைமையிடம் நெருக்கம் அதிகரிக்கும். தலைமை உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். கலைத்துறையினர் தற்போதுள்ள வாய்ப்புகளால் பிரபலம் அடைவர். உடனிருப்பவர்களால் நன்மைகள் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
பரிகாரம்: சூரியனார் கோவிலில் உள்ள சூரிய பகவானை ஞாயிற்றுக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.