4, 13, 22, 31
02.09.2017 முதல் 04.09.2018 வரை
எந்த நேரத்திலும் மனதில் பட்டதை தயக்கமின்றி சொல்லும் நான்காம் எண் அன்பர்களே, நீங்கள் எப்போதும் அன்புக்கு கட்டுப்பட்டவர்கள். குடும்பத்தினரிடம் அதீத பாசம் காட்டுவீர்கள். இந்த குருபெயர்ச்சியில் குடும்பத்தில் கணவன் மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பிள்ளைகளால் மனக்கவலைகள் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பூர்வீக சொத்து விவகாரங்களிலுள்ள வம்பு வழக்குகள் இழுபறி நிலையிலேயே இருக்கும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமையும். பொருளாதார நிலை மேன்மையாக இருப்பதால் பொன், பொருள் சேரும். புதிய வீடு, வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும்.
உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் தடையின்றி கிட்டும். சிலநேரங்களில் வேலைப்பளு அதிகரித்து நிறைய நேரம் உழைக்க வேண்டியிருக்கும். விரும்பிய இட மாற்றங்களும் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வார்கள். திறமைகளை வெளிபடுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் அமைந்து மேலதிகாரிகளின் பாராட்டுதல்களையும் பெறமுடியும். வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பம் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடிவரும். உழைப்பிற்கேற்ற லாபத்தினை தடையின்றி பெறுவீர்கள். தொழில், வியாபார ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் எதிர்பார்த்த அனுகூலத்தினைப் பெறமுடியும். வெளியுர் வெளிநாட்டுத் தொடர்புகளாலும் லாபம் கிட்டும். கூட்டாளிகளிடம் சிறுசிறு மன சஞ்சலங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது.
பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொண்டால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். பிள்ளைகளிடம் சற்று அனுசரித்துச் செல்வது நல்லது. அசையா சொத்துகளால் சிறுசிறு விரயங்கள் ஏற்படும். குடும்பத்தில் திருமண சுபகாரியங்கள் இனிதே நிறைவேறும். பொருளாதார நிலையும் சிறப்பாக அமையும். பணிபுரிபவர்களுக்கு உயர்வுகள் கிடைக்கும். அரசியல்வாதிகள் தங்களது பதவிகளைக் காப்பாற்றிக்கொள்ள மக்களின் தேவையறிந்து செயல்படுவது நல்லது. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைக் நிறைவேற்றுவதில் சில தடைகளை சந்திக்க வேண்டியிருக்கும். கட்சிப் பணிகளுக்காக செலவுகளும் செய்வீர்கள். திடீர் பதவி உயர்வுகளும் கிடைக்கப் பெறுவீர்கள். மாணவ, மாணவியருக்கு கல்வியில் சற்று மந்தநிலை, ஞாபகமறதி ஏற்படக் கூடிய காலம் என்பதால் முழு முயற்சியுடன் பாடுபடுவது நல்லது.
தேவையற்ற நண்பர்களின் சேர்க்கையும் பொழுதுபோக்கும் உங்கள் வாழ்க்கையை திசை மாற்றும் என்பதால் பெற்றோர், ஆசிரியர்களின் அறிவுரைப்படி நடப்பது நல்லது. விளையாட்டுப் போட்டிகளில் போட்டி, பொறாமைகள் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு பணவரவுகள் சிறப்பாகவே இருக்கும். கொடுக்கல், வாங்கலும் லாபமளிக்கும். தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி விருதுகள், பாராட்டுகள் பெறுவீர்கள். ஆடம்பர செலவுகளை குறைப்பது மூலம் கடன்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம். வெளிநாட்டு தொடர்புடையவற்றால் அனுகூலப் பலனை பெறுவீர்கள். பயணங்களால் நற்பலன்கள் அமையும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் அபிவிருத்தியும் பெருகும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவினை உண்டாக்கும். ஆனாலும் மற்ற கிரகங்களின் சஞ்சாரத்தால் அன்றாடப் பணிகளில் திறம்படவே செயல்படுவீர்கள். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும்.
பரிகாரம்:
அம்மன் வழிபாடு எல்லா துன்பங்களையும் போக்கும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். வேப்பிலையை அருகிலிருக்கும் புற்றுள்ள அம்மன் கோயிலுக்கு சமர்ப்பித்து அர்ச்சனை செய்து வணங்கவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்:
“ஓம் ஸ்ரீகர்ப்பாயை நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 6 முறை சொல்லவும்.
அதிர்ஷ்ட எண்கள்:
2, 3, 7.
அதிர்ஷ்ட கிழமைகள்:
திங்கள், வியாழன், வெள்ளி.