கருவறையில் இருக்கும் இறைவனை தரிசித்துவிட்டு திரும்பி வரும்போதும் இறைவனின் திருமுகத்தைக் கண்டுகொண்டே வர வேண்டும் என்ற எண்ணத்தில் கருவறைக்கு நேரெதிரே கண்ணாடியை அமைத்தார்கள். தீபாராதனை நடக்கும்பொழுது சந்நதிக்கு இருபுறமும் நிற்கும் பக்தர்கள் தங்களின் வலது புறம் மற்றும் இடதுபுறம் என இருபுறமும் இறை தரிசனத்தைக் காண வேண்டும் என்பதும் ஒரு காரணம். அதோடு இறைவன் தனக்குச் செய்யப்பட்டிருக்கும் அலங்காரத்தினைக் கண்டு ஆனந்தமாய் வீற்றிருக்கிறான் என்பதை நாம் புரிந்து கொள்வதற்காக கண்ணாடி பதிக்கப்படுகிறது என்று விளக்கமளிப்பதோடு இதனை தர்ப்பண தரிசனம் என்ற பெயரிலும் அழைப்பார்கள்.
விசிறி, வெண்சாமரம் உள்ளிட்ட ஷோடஸ உபசார பூஜை செய்யும்போது இறைவனின் திருமுகத்திற்கு நேராக அர்ச்சகர் கண்ணாடியைக் காண்பித்து அதற்குரிய மந்திரத்தைச் சொல்லி அர்ச்சிப்பார். அர்ச்சகர் கருவறைக்குள் செய்யும் அந்த தர்ப்பண தரிசன வைபவத்தை பக்தர்கள் எல்லோரும் காண வேண்டும் என்பதற்காக கருவறைக்கு நேரே கண்ணாடி பதித்திருக்கிறார்கள் என்பதே உங்கள் வினாவிற்கான விடை ஆகும்.
உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தரு
வீர்கள். பழைய பிரச்சினைகள் தீரும். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதுமை படைக்கும் நாள்.