குழந்தை பிறந்து ஒரு வயது கழித்து ஜாதகம் எழுத வேண்டும் என்கிறார்கள் ஜோதிட வல்லுனர்கள். ஆசை என்பது எப்பொழுது அந்தக்குழந்தையின் மனதில் உதிக்கிறதோ அப்பொழுதில் இருந்தே கிரஹங்கள் தங்கள் பணியினைத் துவக்கிவிடுகின்றன. ஒரு பொம்மையை இறுகப் பிடித்துக்கொண்டு இது என்னுடையது என்று எப்பொழுது அந்தக்குழந்தை நினைக்கத் துவங்குகிறதோ அதிலிருந்தே வினைப்பயன் என்பது துவங்கிவிடுகிறது. நமது உடலில் அந்தராத்மா என்பது தனது செயல்பாட்டைத் துவக்கும்போது ஜாதகமும் வேலை செய்ய ஆரம்பிக்கிறது.
ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்று புத்தர் சொன்னதன் காரணமும் இதுவே. ஆசையைத் துறந்தவர்களுக்கு கிரஹங்களினால் பாதிப்பு இல்லை. துறவிகளுக்கும் சந்யாசிகளுக்கும் ஜாதகம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்பதும் இதனால்தான். ஆக ஆசை என்ற ஒன்று எப்பொழுது மனதில் உதயமாகிறதோ அப்பொழுதில் இருந்தே கிரஹங்கள் தங்கள் பலாபலன்களைத் துவக்கிவிடுகிறது என்பதே உங்கள் கேள்விக்கானபதில்.
ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில வேலைகளை உங்கள் மேற்பார்வையிலேயே முடிப்பது நல்லது. குடும்பத்தில் சண்டை சச்சரவு வந்து நீங்கும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்தியோகத்தில் மறைமுக அவமானம் வந்து நீங்கும். அலைச்சல் அதிகரிக்கும் நாள்.