தாராளமாகக் கிடைக்கும். சொல்லப் போனால், இதன்மூலம் விளையும் பயன் அதிகமாகவே இருக்கிறது. கோயில்களில் முக்கிய நிகழ்வுகள் நடக்கும்போது, நம்மால் அருகில் சென்று தரிசிக்க முடியாது. யாரேனும் முக்கியஸ்தர்கள் வந்து விட்டால், கேட்கவே வேண்டாம். தொலைக்காட்சி நேர்முக ஒளிபரப்பிலோ, கும்பலில் சிக்காமல் வீட்டில் இருந்தபடியே தெய்வத்தை மிக அருகில் தெளிவாக தரிசிக்கலாம்.
அடுத்து, என்ன உற்சவம் நடக்கிறது? என்ன செய்கிறார்கள்? ஏன் செய்கிறார்கள்? என்பவற்றை எல்லாம் அறியும் ஆர்வம் இருந்தாலும், யாரைப்போய்க் கேட்பது? உற்சவத்தில் ஈடுபட்டவரகள் அதைக் கவனிப்பார்களா? நமக்குப் பதில் சொல்லிக் கொண்டிருப்பார் களா? தொலைக்காட்சி நேர்முக வர்ணனையில் ஒவ்வொரு நிகழ்வாகக் காண்பிக்கும் போது, அதை ஏன் செய்கிறார்கள்? இந்தக் கோயிலில் அதைச் செய்ய வேண்டிய காரணம் என்ன? எனும் தகவல்களுடன் குறிப்பிட்ட அந்த ஆலய வரலாறும், நேர்முக வர்ணனையாளர்களால் விவரிக்கப்படும்.
நேரில் சென்று தரிசித்தால் கூடக் காணக்கிடைக்காத தெய்வக் காட்சிகளைப் பலவிதமான கோணங்களில், நேர்முக ஒளிபரப்பில் தரிசிக்கலாம். திருவிழாக் காலங்களில் அந்தக்கூட்ட நெரிசலில் சிக்கி, திருவிழாவைக் காணும் சுகம் ஒருமாதிரி; அந்தக்கூட்டத்தில் சிக்கி நசுங்காமல் வீட்டிலிருந்த படியே, அந்த ஆலய வரலாறு உட்பட பலவிதமான அடிப்படை உண்மைகளை அறியச்செய்து, கண்முன்னே மிக அருகில் தெய்வதரிசனம் செய்து வைக்கும், நேர்முக ஒளிபரப்பு ஒருமாதிரி; உயர்ந்ததுதான்.
முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலை அமையும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி உண்டு. எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.