உண்டு. அம்பிகைக்கு, ஸ்ரீசக்கரம் என்று சொல்கிறோம் அல்லவா? அதில் ஒன்பது சுற்றுக்கள் உள்ளன. அவற்றை ஆவரணங்கள் என்பார்கள். அவைகளின் உள் சுற்றின் நடுவில், பிந்து மண்டலத்தில் அம்பிகை வீற்றிருக்கிறார். மற்ற எட்டு சுற்றுகளிலும் வாக்குத் தேவதைகள் எனப்படும் எட்டு விதமான சரஸ்வதிகள் எழுந்தருளி இருக்கிறார்கள். அந்த எட்டு சரஸ்வதிகளின் திருநாமங்கள்: வசினி, காமேஸ்வரி, மோதினி, விமலா, அருணா, ஜயினி, சர்வேஸ்வரி, கௌலினி என்பவை.