மூலம்
27.07.2017 முதல் 13.02.2019 வரை
உழைப்புக்கு ஏற்ற உயர்ந்த இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் மூல நட்சத்திர அன்பர்களே, நீங்கள் அனைவரையும் சரிசமமாகக்கருதுபவர். உங்கள் நட்சத்திரத்துக்கு பத்தொன்பதாம் நட்சத்திரமான மகத்திலிருந்து பதினெட்டாம் நட்சத்திரமான ஆயில்யத்திற்கு ராகுவும், ஐந்தாம் நட்சத்திரமான அவிட்டத்திற்கு கேதுவும் பெயர்ச்சி அடைகிறார்கள். இந்தப் பெயர்ச்சியால் சின்ன விஷயங்களுக்குக்கூட உங்களுக்கு கோபம் வரலாம். எனவே கோபத்தைக் கட்டுப்படுத்தி காரியங்களை சாதகமாக்கிக் கொள்ளுங்கள். எதிர்பாராத பணத்தேவை உண்டாகும். அதனை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். எதிலும் இழுபறியான நிலை காணப்படும். அடுத்தவர்களால் தொல்லைகள் உண்டாகலாம் கவனம் தேவை.
தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் தாமதம் ஏற்படலாம். பணவரத்து எதிர்பார்த்ததைவிட குறையக்கூடும். கடன் விஷயங்களை தள்ளிப்போடுவது நல்லது. புதிய நபர்களுக்கு பொருட்களை சப்ளை செய்யும்போது கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் டென்ஷனும், வீண் அலைச்சலும் இருக்கும். வீண்பகை உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் பேசும்போது நிதானம் தேவை. வாழ்க்கைத் துணையின் உடல்நலத்தில் கவனம் தேவை. குடும்பத்தாரால் திடீர் டென்ஷன் உண்டாகலாம். கவனம் தேவை. பிள்ளைகளை அனுசரித்துச் செல்வது நல்லது.
பெண்களுக்கு கோபத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் காரியங்களை சாதகமாக செய்துகொள்ளமுடியும். எதிர்பார்த்த தகவல் தாமதப்படலாம். கலைத்துறையினருக்கு சொத்துகளை அடைவதில் தடைகள் ஏற்படும். உயர்நிலையில் உள்ளவர்களுடன் மனவருத்தம் ஏற்படும்படியான சூழ்நிலை வரும். வாகனங்களால் செலவு உண்டாகலாம். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பணவரவு இருக்கும். தேவையான வசதிகள் கிடைப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில், வியாபாரம் சுமாராக இருக்கும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கலாம். மாணவர்கள் படிப்பில் பின்னடைவு ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது. திடீர் டென்ஷன் ஏற்படலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
பரிகாரம்:
மாரியம்மனை வெள்ளிக்கிழமை களில் தீபம் ஏற்றி வழிபட சகல நன்மைகளும் உண்டாகும். தடை தாமதங்கள் நீங்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்:
புதன், வெள்ளி.