பூரட்டாதி
27.07.2017 முதல் 13.02.2019 வரை
தீவிர உழைப்பு, அதிக முயற்சிகளுடன் காரியங்களில் ஈடுபடும் பூரட்டாதி நட்சத்திர அன்பர்களே, உங்கள் நட்சத்திரத்திற்கு பதிமூன்றாம் நட்சத்திரமான மகத்திலிருந்து பன்னிரண்டாம் நட்சத்திரமான ஆயில்யத்திற்கு ராகுவும், இருபத்தாறாம் நட்சத்திரமான அவிட்டத்திற்கு கேதுவும் பெயர்ச்சி அடைகிறார்கள். இந்தப் பெயர்ச்சி காலத்தில் மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். மனக்கவலை குறையும். எல்லாவகையிலும் சாதகமான பலன் கிடைக்கப்பெறுவீர்கள். சற்று கூடுதலாக எதிலும் கவனம் செலுத்துவது நல்லது. திடீர் செலவு உண்டாகலாம். திட்டமிட்டபடி செல்லமுடியாமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். குடும்பத்தில் வெளிநபர்களால் ஏதாவது குழப்பம் ஏற்படலாம். சொந்த விஷயங்களுக்கு அடுத்தவர் ஆலோசனைகளைக் கேட்பதை தவிர்ப்பது நல்லது.
கணவன், மனைவி ஒருவருக்கொருவர் மனம்விட்டுப் பேசுவதன் மூலம் இடைவெளி குறையும். பிள்ளைகள் நலனுக்காக செலவுகள் செய்ய வேண்டியிருக்கும்.
தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். தன்னம்பிக்கை ஏற்படும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும்போது கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டிவரும். அலுவலக வேலைகள் உடனே முடியாமல் இழுபறியாக இருக்கும். பெண்கள் எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பாராமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். கலைத்துறையினருக்கு தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும்.
புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். சககலைஞர்களிடம் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நன்மை தரும். கோபத்தைக் குறைத்து தன்மையாக பேசுவதால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத செலவு இருக்கும். அரசியல்வாதிகள் தேவையற்ற அலைச்சலைக் குறைத்துக்கொள்வது நல்லது. எல்லா
வகையிலும் நன்மை உண்டாகும். மற்றவருக்கு உதவிகள் செய்ய விரும்புவீர்கள். பிரிந்து சென்றவர்களை மீண்டும் சந்திக்க நேரலாம். மாணவர்கள் கல்வியில் மேன்மை அடைய கூடுதல் கவனத்துடன் படிப்பது அவசியம்.
பரிகாரம்:
செவ்வாய்க்கிழமையில் நவகிரக செவ்வாயை அர்ச்சனை செய்து தீபம் ஏற்றி வணங்குவது வாழ்வில் முன்னேற்றத்தை தரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்:
ஞாயிறு, செவ்வாய், வெள்ளி.