search-icon-img
featured-img

மீனம்

Published :

6.03.2026

பூரட்டாதி 4ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி வரை

குடும்பம்: ஏழரைச் சனியின் ஜென்மச் சனியின் ஆரம்பப் பகுதியில் உள்ள நிலையில், ராசி நாதனாகிய குரு பகவானும், ராசிக்கு சுக ஸ்தானமாகிய மிதுனத்தில் சஞ்சரித்து வருகிறார்! சனி பகவானுடன், சுக்கிரனும் ஜென்ம ராசியில் இணைந்திருக்கிறார்!! உடல் ஆரோக்கியத்தில் நல்ல கவனமுடனும், இரவு நேரங்களில், வாகனங்களை ஓட்டும்போதும், கவனம் தேவை. கூடியவரையில், இரவு நேரப் பயணங்களைத் தவிர்த்தல் அவசியம். கணவர் - மனைவியரிடையே கருத்துவேற்றுமை ஏற்பட வாய்ப்புள்ளதை கிரக நிலைகள் குறிப்பிட்டுக் காட்டுகின்றன. விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. தொடர்ந்து ஏற்பட்டு வந்த வீண் செலவுகளும், வைத்தியச் செலவுகளும் கணிசமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. கைப்பணத்தை எண்ணி, எண்ணிச் செலவழியுங்கள். மனத்தை அரித்துவந்த பல குடும்பப் பிரச்னைகள் மேலும் அதிகரிக்கும். மனதில் நிம்மதியும், தன்னம்பிக்கையும் தளர்வடையும்.

நிதி நிலைமையில் சற்று தேக்கநிலை ஏற்படும். கணவர் - மனைவியரிடையே பரஸ்பர ஒற்றுமையும், பரஸ்பர அந்நியோன்யமும் பாதிப்பிற்குள்ளாகும். பாடல் பெற்ற திருத்தல தரிசனத்தினால், மன-அமைதியும், உடல் ஆரோக்கியமும் கிட்டும் என்பதை கிரக நிலைகள் உறுதி செய்கின்றன.

உத்தியோகம்: மேலதிகாரிகளின் ஆதரவு குறைவதால், மனத்திற்கு உற்சாகக் குறைவை ஏற்படுத்தும். பணிச் சுமையும், பொறுப்புகளும் குறையாது! சக-ஊழியர்கள் ஒத்துழைக்க மறுப்பார்கள். தற்போது நடைபெறும் தசா - புக்திகள் அனுகூலமாக இருப்பின், சிறு ஊதிய உயர்வு ஒன்றையும் எதிர்பார்க்கலாம்.

தொழில், வியாபாரம்: உற்பத்தியைக் கணிசமாகக் குறைக்க வேண்டிய தருணமிது. சந்தை நிலவரம் உங்களுக்கு மிகவும் பாதகமாக அமைந்துள்ளது. உங்கள் சரக்குகளுக்கு தேவை குறையும், அதனால் லாபம் பாதிப்பிற்குள்ளாகும். புதிய விற்பனைக் கிளைகளைத் திறப்பதற்கு ஏற்ற தருணம் இதுவல்ல! சகக் - கூட்டாளிகள் ஒத்துழைப்பு குறையும். நிதி நிறுவனங்களின் ஆதரவும் குறையும். தொழில் போட்டி - பொறாமை நீடிக்கும். அவற்றைச் சமாளிப்பதில் சிரமங்கள் ஏற்படும். ஏற்றுமதித் துறையினருக்கும் கிரக நிலைகள் பாதகமாகவே அமைந்துள்ளன. வரவேண்டிய பாக்கிகள் அனைத்தும் காலதாமதமாகும். அதன் காரணமாக, பொருளாதாரம் சீர்குலையும். மனத்தில் சோர்வு மேலிடும். தசா, புக்திகள் சுப பலம் பெற்றிருப்பின், வியாபாரம் சம்பந்தமாக வெளிநாடு சென்று வரும் வாய்ப்பும் உள்ளது. அதன் மூலம், புதிய தொடர்புகளும், உங்கள் சரக்குகளுக்குப் புதிய ஆர்டர்களும் கிடைக்கும். லாபம் படிப்படியாக உயரும்.

கலைத் துறையினர்: கலைத் துறையினருக்கு, வருமானம் குறையக்கூடும். புதிய வாய்ப்புகள், கைநழுவ்ிப் போகும். மக்களிடையே புகழ் மங்கும். குறிப்பாக, பரத நாட்டியம் பள்ளிகள் நடத்தும் ஆசிரியைகளுக்கு வருமானம் பாதிப்பிற்குள்ளாகும். பள்ளிகளை மூடிவிடலாமா? எனத் தோன்றும் சில சமயங்களில்...!

அரசியல் துறையினர்: அரசியல் துறையினருக்கு, புகழும், பெயரும் பாதிப்பிற்குள்ளாகும். மக்களிடையே செல்வாக்கு குறையும். வருமானமும் எதிர்பார்ப்பிற்கு சற்று குறைவாகவே கிடைக்கும். காரணம், சனி பகவான் அனுகூலமாக இல்லாததேயாகும். செல்வாக்கு மிகுந்த ஒருவரின் நேரடித் தொடர்பு, உங்கள் எதிர்கால அரசியல் முன்னேற்றத்திற்கு அஸ்திவாரமாக அமையும்.

மாணவ - மாணவியர்: கல்வித் துறைக்கு, அதிபதியான, புதன், மிகவும் ஆதரவாக, சுய பலத்துடன், சஞ்சரிப்பதால், கிரகிப்புத் திறனும், நினைவாற்றலும் அதிகரிக்கும். உயர் கல்விக்கு உதவிகள் கிடைக்கும். பாடங்களில் மனம் தீவிரமாக ஈடுபடும். ஆசிரியர்களின் ஆதரவு, உங்களின் உற்சாகத்தை உயர்த்தும்.

விவசாயத் துறையினர்: செவ்வாயும், சூரியனும் விவசாயத் துறையுடன் நேரடித் தொடர்பு கொண்டுள்ள கிரகங்களும் சனி பகவானின் பார்வையினாலும் விளைச்சலும், வருமானமும் குறையக்கூடும். கால்நடைகளின் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். கால்நடைகள் நோய்வாய்ப்படும்.தண்ணீர்வசதி, இடு பொருட்கள், விதைகள், உரங்கள் தட்டுப்பாடு நிலை உருவாகும். ஆயுர்வேத மூலிகைகள் பல வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வாய்ப்பும்,குறையும். அதனால், நஷ்டமேற்பட வாய்ப்புள்ளது.

பெண்மணிகள்: பெண்மணிகளுக்கு சோதனையான காலகட்டமிது! வேலைக்கு முயற்சித்துவரும் வனிதையருக்கு, நல்ல நிறுவனத்தில் பணி கிடைப்பதில் தாமதப்படும். வெளிநாடு சென்று, உயர் கல்வி பயில விருப்பமுள்ளவர்களுக்கு, இடம் கிடைப்பதில் தாமதப்படும். "ஸ்காலர்ஷிப்" பை எதிர்பார்த்திருந்த மாணவர்களுக்கு மிகுந்த ஏமாற்றம் காத்துள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.

அறிவுரை: மனச் சோர்வடைந்துவிட வேண்டாம். இரவிற்குப் பின் பகலுண்டு என்பதை மறவாதீர்கள்!

பரிகாரம்: 1. சனிக்கிழமைதோறும், ஏழை ஒருவருக்கு, உணவளித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். அனுபவத்தில் காணலாம்,