3, 12, 21, 30
19.12.2017 முதல் 28.03.2020 வரை
எடுத்த காரியத்தையும், கொடுத்த வாக்கையும் காப்பாற்றும் மூன்றாம் எண் அன்பர்களே! பணப்புழக்கம் தங்களிடம் தட்டுப்பாடின்றி இருக்கும். உழைப்பால் மற்றவர்களையும் வாழவைப்பீர்கள். உங்களிடம் வாக்கு கொடுப்பவர்கள் அதன்படி நடந்துகொள்ளாவிட்டால் உங்களுக்கு கோபம் வரும். ஏனென்றால் நீங்கள் தன்மானம் நிறைந்தவர்கள். எந்த சூழ்நிலையிலும் அடுத்தவர் மனம் புண்படாதபடி பேசுவதில் வல்லவர்கள். இந்த சனிப்பெயர்ச்சியில், சற்று மந்தமான நிலை உண்டாகலாம். மனதைத் தெம்பாக வைத்துக் கொண்டால் எதையும் எதிர்கொள்ளலாம். தேக ஆரோக்யத்தில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். இதனால் செயல்களைக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க இயலாமல் போகும். அதேநேரம் பல சாதகமான நிலைமைகளும் வரஇருக்கின்றன. வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் வலுப்படும். அதிகரிக்கும் செலவுகளை ஈடுகட்ட பழைய கடன்களை வசூலிப்பீர்கள். விரும்பிய வீட்டிற்குக் குடிபெயர்வீர்கள். சுகபோக வசதிகளை அனுபவிப்பீர்கள். மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். உடல் உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும்.
அனைத்துச் செயல்களையும் பொறுமையுடனும், நிதானத்துடனும் செய்ய வேண்டும். உங்கள் ஆலோசனைகள் உங்களுக்குப் பயன்படுவதைவிட மற்றவருக்குப் பயன்படும். நீரிழிவு, கல்லீரல் நோய் உள்ளவர்கள் கூடுதல் கவனத்தோடிருக்கவும். மது உள்ளிட்ட போதைப் பழக்கங்களை முற்றிலும் விடுவது நல்லது. இந்த பெயர்ச்சியினால் உங்கள் மனதில் அவ்வப்போது தைரியமின்மை தோன்றும். இதனால் அனைத்துச் செயல்களிலும் சந்தேகத்தோடு ஈடுபடுவீர்கள். மற்றபடி உடல் பொலிவடையும். ஏமாற்ற நினைக்கும் நண்பர்களின் சூழ்ச்சிகளைப் புரிந்துகொள்வீர்கள். மனப்பக்குவம் ஏற்படும். எனவே அதிகம் கவலைப்படத் தேவையில்லை. புதிய முயற்சிகளில் அனுபவம் பெறுவீர்கள். சிரமம் பார்க்காமல் சாகசங்களில் ஈடுபடுவீர்கள். வருமானம் சீராக இருக்கும். குடும்பத்தில் சுபவிசேஷங்களை நடத்துவீர்கள். சிலர், குழந்தைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பிப் படிக்க வைப்பார்கள். முக்கியத் திட்டங்கள் நிறைவேறும்.
இதனால் ஆசைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். தொழிலில் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கி முன்னேற்றமான திருப்பங்கள் உண்டாகும். கடன்களை அடைத்து புதிய சேமிப்புகளிலும் ஈடுபடுவீர்கள். நேர்முக, மறைமுக எதிர்ப்புகள் மறையும். உத்யோகஸ்தர்களின் கோரிக்கைகளை மேலதிகாரிகள் உடனுக்குடன் பரிசீலிப்பார்கள். அலுவலகத்தில் அனுகூலமான சூழலைக் காண்பீர்கள். சக ஊழியர்கள் நட்பு பாராட்டுவார்கள். இடையூறுகளை ஒரு பொருட்டாகவே கருதமாட்டீர்கள். பணவரவில் சிறு தடைகள் ஏற்பட்டாலும், உழைப்புக்கேற்ற ஊதியத்தைப் பெறுவீர்கள். விரும்பிய இடமாற்றங்களைப் பெறுவீர்கள். வேலைத் திறன் பளிச்சிடும்.
வியாபாரிகளின் திட்டங்கள் அனைத்தும் நல்ல லாபத்தைக் கொடுக்கும். கொடுக்கல், வாங்கலில் சிறப்புகள் உண்டாகும். விற்பனைப் பிரதிநிதிகளைப் பல சந்தைகளுக்கும் அனுப்பி விற்பனைக் களத்தைப் பரவலாக்குவீர்கள். ஆயினும் கூட்டாளிகளைக் கலந்தாலோசித்த பிறகே விரிவாக்கம் செய்யவும்.
மற்றபடி திறமையுடன் செய்துவரும் வியாபாரத்தால் கௌரவமும், அந்தஸ்தும் உயரும். அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவுடன் செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள். எதிரிகளால் கஷ்டங்கள் உண்டாகாது என்றாலும் அவர்கள்மீது ஒரு கண் வைத்திருக்கவும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயரைக் காப்பாற்றிக் கொள்ளவும். சச்சரவுகளில் சிக்கி மாட்டிக் கொள்ளவேண்டாம். கலைத்துறையினர் கடினமாக உழைத்தால் வெற்றிவாகை சூடலாம். மற்றபடி வேலைகளைக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து விடுவீர்கள். உங்கள் திறமைகளை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். அதேசமயம் வெளிவட்டாரப் பழக்க வழக்கங்களில் மிகவும் கவனத்துடன் இருக்கவும். சககலைஞர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். பெண்மணிகள் நன்கு யோசித்த பிறகே பிறர் வார்த்தைகளை நம்பவேண்டும். கணவரிடமும் குடும்பத்தாரிடமும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். எவரிடமும் மனம் திறந்து பேச வேண்டாம். உங்கள் கடமைகளைச் சரிவர ஆற்றவும். மாணவமணிகள் கடினமாக உழைத்துப் படிப்பதன் மூலம் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். சிலருக்கு வெளியூரில் கல்வி பயிலும் வாய்ப்பு கிடைக்கும். மனக்குழப்பங்களிலிருந்து விடுபடுவீர்கள். தீய நண்பர்களுடனான நட்பைத் துண்டிப்பீர்கள். உள்ளரங்கு விளையாட்டுகளில் சாதனை புரிவீர்கள்.
பரிகாரம்:
வியாழக்கிழமைதோறும் அருகிலிருக்கும் சிவன் கோயிலுக்குச் சென்று 6 முறை வலம் வரவும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெற்றோர் உடல்நலம் சிறக்கும்.
சிறப்பு பரிகாரம்:
துளசியை அருகிலிருக்கும் பெருமாள் கோயிலுக்கு சமர்ப்பித்து வணங்கவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்:
“ஓம் ஸ்ரீகுருப்யோ நமஹ:” என்ற மந்திரத்தை தினமும் 11 முறை சொல்லவும்.
அதிர்ஷ்ட எண்கள்:
2, 3, 5, 6.
அதிர்ஷ்ட கிழமைகள்:
திங்கள், புதன், வியாழன்.