உடுமலை: உடுமலை அருகே உள்ள சோமவாரப்பட்டியில் ஆல்கொண்டமால் கோயில் உள்ளது. மாலகோயில் என அழைக்கப்படும். இந்த கோயிலில் ஆண்டுதோறும் பொங்கல் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று முன்தினம் அதிகாலை சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனையுடன் துவங்கியது. அன்று மாலை உழவர்திருநாள் சிறப்பு பூஜை நடந்தது. நேற்று மாலை சுவாமி திருவீதி உலா நடந்தது. நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்து நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
கோயிலுக்கு கன்றுகள், ஆடுகள் தானமாக வழங்கப்பட்டது. மேலும் தங்கள் கால்நடைகளின் நலனுக்காக, கோயிலில் உள்ள நந்தி சிலை முன்பு ஆடு, பசு, காளை, குதிரை உள்ளிட்ட களிமண்ணால் செய்யப்பட்ட உருவார பொம்மைகளை படைத்து காணிக்கை செலுத்தினர். இதனால், நந்தி சிலை முன்பு ஆயிரக்கணக்கில் கால்நடை பொம்மைகள் குவிந்தன. உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் இருந்து சோமவாரப்பட்டிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். டென்ஷன் கோபம் யாவும் நீங்கும். கடனாக கொடுத்த பணத்தை திருப்பி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்து முன்னேற்றம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.