பழநி: பழநி அருகே கணக்கன்பட்டி சற்குரு பழநி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பழநி அருகே கணக்கன்பட்டியில் சற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி அனுக்கை, கணபதி ஹோமம், த்ரவியங்களை சற்குரு சுவாமிகளுக்கு அர்ப்பணம் செய்தல், தன பூஜை, நவக்கிரஹ ஹோமம், ப்ரவேச பலி, ரஷோக்ன ஹோமம், சாந்தி ஹோமம், ஆசார்ய தசவித ஸ்நாகம், அக்னி சங்கிரஹணம், வாஸ்து சாந்தி, பாலிகை பூஜை, காப்புக்கட்டுதல், கும்பாலங்காரம், யாத்ரா தானம், யாகசாலை பூஜை, கோ பூஜை, கஜ பூஜை, லட்சமி பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த புண்ணிய தீர்த்தங்கள் கொண்ட கலசத்தின் மூலம் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் கருணாலய துரை, ராமநாதன், சுசில்குமார், வீரகாந்தி, நாமக்கல் சற்குரு அறக்கட்டளையினர், மதுரை ஞானசபையினர், கரூர் பக்தர் பேரவையினர், சேலம் பாட்டி சித்தர் பக்தர் பேரவையினர் என பலர் கலந்து கொண்டனர்.
குடும்பத்தினருடன் மனம் விட்டுப்பேசுவீர்கள். வெளிவட்டாரத் தில் அந்தஸ்து உயரும். மற்றவர்கள் மனதை புரிந்துகொண்டு அதற்கு ஏற்ப நடந்து கொள்வீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். புகழ் கௌரவம் கூடும் நாள்.