ரிஷபம்
14.4.2021 முதல் 14.5.2021 வரை(கிருத்திகை 2-ம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம 2-ம் பாதம் வரை)
குடும்பம்: சுக்கிரன் ஒருவரே உங்களுக்கு பூரண அனுகூலமாக உள்ளார். குரு மற்றும் சனி, புதனால் அவ்வப்போது சிறு, சிறு நன்மைகளை எதிர்பார்க்கலாம். மற்ற கிரகங்கள் ஆதரவாக இல்லை. வரவும் - செலவும் கிட்டத்தட்ட சமமாகவே இருக்கும். மாதத்தின் கடைசி வாரத்தில், பணத் தட்டுப்பாடு ஏற்படக்கூடும். நெருங்கிய உறவினர் ஒருவரின் தேவையற்ற தலையீடு, காரணமாகக் குடும்பத்தில் ஒற்றுமைக் குறைவு உருவாக வாய்ப்புள்ளது.
ஜென்ம ராசியில் நிலை கொண்டுள்ள நீச்ச ராகு காரணமாக, அதிக அலைச்சலும், வெளியூர்ப் பயணங்களும், சிறு சிறு உடல்நலப் பாதிப்புகளும் கவலையை அளிக்கும். அவ்வப்போது ஆரோக்கியம் பாதிக்கப்பட்டாலும், எளிய மருத்துவ சிகிக்சையினால் குணம் ஏற்படும். திருமண முயற்சிகளில் தடங்கல்களும், சிறு குழப்பங்களும் ஏற்பட்டாலும், இறுதியில் நல்ல வரனை அமைத்துக் கொடுப்பார் குரு. குரு பகவானின் பார்வை பலம் விவரிப்பதற்கு அரிது.
குறிப்பாக, இரவு நேரங்களில் வாகனங்கள் ஓட்டும்போது, அதி ஜாக்கிரதையாக இருத்தல் அவசியம். ஜென்மராசியிலோ அல்லது ஜென்ம ராசிக்கு அஷ்டம ஸ்தானத்திலோ (8-ம் இடம்) பலம் பொருந்திய அல்லது நீச்ச ராகு வரும்போது, இரவு நேரங்களில் தனியே செல்வதும், வாகனங்கள் ஓட்டுவதும் சமூக விரோதிகளுடன் வாக்குவாதம் செய்வதும் உடலுக்கும் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கக்கூடும் என மிகப் பழைமையான சூட்சும ஜோதிட நூல்கள் அறுதியிட்டுக் கூறுகின்றன, நமது நன்மைக்காகவே! எவற்றை எப்போதெல்லாம் தவிர்க்க வேண்டுமென அறிவுறுத்தும் அற்புத, விஞ்ஞானப்பூர்வமான கலை, ஜோதிடம்! நீதிமன்ற வழக்குகள் இருப்பின் நீடிக்கும்.
உத்தியோகம்: வேலைச் சுமையும் பொறுப்புகளும், அலுவலகம் சம்பந்தமாக வெளியூர் பயணங்களும் சோர்வையளித்தாலும், பணிகளில் உற்சாகம் குறையாது. சில தருணங்களில், மேலதிகாரிகளுடன் கருத்துவேற்றுமை எற்பட வாய்ப்புள்ளது. பொறுமை, நிதானம் அவசியம். “Boss is always right !” என்பதை அடிக்கடி நினைவில் வைத்துக்கொள்ளுங் கள்! உணர்ச்சிவசப்படுவதையும், அவசர முடிவுகளையும் விலக்க வேண்டும் என்பதை குரு மற்றும் சுக்கிரனின் சஞ்சார நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. கொரோனா காரணமாக, வேலையை இழந்துவிட்ட ரிஷப ராசியினருக்கு, சிறு முயற்சியிலேயே வேறு வேலை கிடைக்கும். இந்த வேலை உங்களுக்கு, முழு திருப்தியையும் அளிக்காது. இருப்பினும், ஒப்புக்கொள்ளுங்கள். ஏனெனில், இதுவே வரவிருக்கும் சில மாதங்களுக்குப் பிறகு, வேறு வேலை கிடைக்க உதவும்.
தொழில், வியாபாரம்: சென்ற சுமார் 11 மாதங்களாக, நிலவிவந்த சூழ்நிலை, படிப்படியாகவே மாறும் என்பதை சந்தை நிலவரம் (Market Condition)எடுத்துக்காட்டுகிறது. ஆதலால், லாபம் படிப்படியாக ஏறுமுகத்தை நோக்கிச் செல்வதை உணர்ந்துகொள்ள முடியும். லாபமும் படிப்படியாகவே உயரும். புதிய முயற்சிகள், புதிய முதலீடுகள், விஸ்தரிப்புத் திட்டங்கள் ஆகியவற்றை ஒத்திப்போடுதல், மிக மிக முக்கியம். தவறான முயற்சிகள், கடன் பிரச்னைகளில் கொண்டுபோய்விடும் என்பதை கிரகநிலைகள் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. கடுமையான பணப் பிரச்னைகளை நீங்கள் சமாளிக்க நேரிடும். அனைத்திற்கும் மேலாக, கடனுக்கு பொருள்கள் சப்ளை செய்வதைக் குறைத்துக்கொள்வது மிகச் சரியான தற்காப்பு நடவடிக்கையாகும். ஏனெனில், கிரக நிலைகளின்படி, வரவேண்டிய பாக்கிகள் வசூலாவது கடினம் எனத் தெரிகிறது. ஏற்றுமதி இறக்குமதித் துறையினருக்கு பிரச்னைகள் நீடிப்பதால், புதிய முயற்சிகளில் தற்போதைக்கு இறங்கவேண்டாம் எனவும் கிரகநிலைகள் எச்சரிக்கை செய்கின்றன. எதையும் சிந்தித்து முடிவு செய்தல் அவசியம் என்பதை சனி பகவானின் நிலை வலியுறுத்துகிறது.
கலைத் துறையினர்: நல்ல வாய்ப்புகள் தடைப்படும். வசதியான வாழ்க்கையையே தொடர்ந்து அனுபவித்துவரும் ரிஷிப ராசியினருக்கு, நிதி வசதி இம்மாதம் குறைந்துவிடுவதால், வருமானத்திற்குள் வாழ்க்கை நடத்துவது சிரமமாகவே இருக்க