உங்கள் மகன் கேட்டை நட்சத்திரம். விருச்சிகம் ராசி. தற்போது சுக்கிர தசையில் சுக்கிர புக்தி நடந்துகொண்டிருக்கிறது. சுக்கிரன் தனது சுய புக்தியில் மொத்தமாக எதுவும் தராவிட்டாலும் சட்டென்று இருக்கும் நிலையினின்று நல்ல நிலைக்கு உயர்த்த முயற்சிப்பார். உங்கள் மகனின் ஜாதகத்தில் சூரியனும் ராகுவும் ஒன்றாக அமர்ந்திருப்பதால் அரசு வேலை வாய்ப்பு பிரகாசமாகவே உள்ளது. மேலும், சூரியனும் புதனும் பரிவர்த்தனை பெற்றிருக்கிறார்கள். அதில் புதன் சுக்கிரனுடைய சாரம் வாங்கியிருக்கிறான். அதனால், எண்ணியதை ஈடேற்றும் சக்தியை உருவாக்குவார். ஆனாலும், கடகத்தில் சுக்கிரன் அமர்ந்து தன் தசையை நடத்திக் கொண்டிருப்பதால் கடகச் சுக்கிரன் என்பது கொஞ்சம் சுக்கிரன் பலம் குறைந்த அம்சம். எனவே, சுக்கிரனை இன்னும் விரைந்து பலன் தர வெள்ளிக்கிழமையன்று ஆறு எண்ணிக்கையில் செந்தாமரைப் பூவை அம்பாளுக்கு சார்த்தி வேண்டிக் கொள்ளுங்கள். இயன்றபோதெல்லாம் வெள்ளிக் கிழமைதோறும் சுமங்கலியை வீட்டிற்கு அழைத்து உங்கள் வீட்டு பெண்களை கொண்டு ரவிக்கை துணி, வெற்றிலை, பாக்கு தாம்பூலம் கொடுக்கச் சொல்லுங்கள். திருச்செந்தூருக்கு அருகேயுள்ள தேரிக்குடியிருப்பு, கற்குவேல் ஐயனார் கோயிலுக்கு உங்கள் மகனை அழைத்துக்கொண்டு சென்று தரிசித்து வாருங்கள். தினமும் விநாயகர் அகவலை சொல்லச் சொல்லுங்கள். விரைந்து வேலை கிடைக்கும். கவலை வேண்டாம்.
ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில வேலைகளை உங்கள் மேற்பார்வையிலேயே முடிப்பது நல்லது. குடும்பத்தில் சண்டை சச்சரவு வந்து நீங்கும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்தியோகத்தில் மறைமுக அவமானம் வந்து நீங்கும். அலைச்சல் அதிகரிக்கும் நாள்.